Skip to main content

பகற் கொள்ளை


 

மக்களால் நிலத்திலோ வங்கியிலோ பணத்தைப் போட்டு வைக்க முடியாதபடி பொருளாதாரம் வீங்கி விட்டது; எல்லா இடங்களிலும் வரியை அதிகரிக்கிறார்கள். ஓய்வூதிய திட்டமென ஒன்று அரசிலோ தனியார் நிறுவனங்களில் இன்று இல்லை. எதிர்காலம் குறித்த கவலைகள், நிலையாமை குறித்த பதற்றமும் சேர்ந்து மக்களை குழப்பமான நிலையில் தள்ளுகின்றன. மக்கள் பின்வாசல் வழியாகத் தப்பிக்கலாம் என்று போகும் போது அங்கு அவர்களை மடக்கிப் பிடிக்க போலி நிதி நிறுவனங்கள் நிற்கின்றன. 14, 346 கோடி என்பது சாதாரணத் தொகை அல்ல. நிச்சயமாக அதிகாரிகளின் (கூடவே 'அரசியல்வியாதிகளின்'), காவல்துறையின் அனுமதியுடனே, பங்களிப்புடனே இந்த முறைகேடுகள் நடக்கின்றன. இதுவரை தமிழ்நாட்டில் நடந்த மோசடிகளில் திருடப்பட்ட பதினாலாயிரம் கோடிகளில் ரெண்டாயிரம் கோடிகளையாவது அவர்கள் முழுங்கி இருப்பார்கள்.

நவீன இந்தியாவின் மிகச்சிறந்த தொழிலே நிதி மோசடி தான் - மக்களை ஏமாற்றிப் பறிப்பது, சவுக்கு ஸ்டைலில் தொழிலதிபர்களை மிரட்டிப் பறிப்பது, கறுப்புப் பணம், வங்கியில் இருந்து பல ஆயிரம் கோடிகளை சுருட்டுவது - இதற்கெல்லாம் பெரிய தண்டனைகளோ கட்டுப்படுத்த வலுவான சட்டங்களோ இல்லை. நிதி மோசடியை ஒரு குற்றமாக ஊடகம் காட்டுவதோ குற்றவாளிகளை விமர்சிப்பதோ இல்லை. மாறாக அவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அவர்களை அரசியல் தலைவர்கள் பஞ்சாயத்து பண்ணி மிரட்டினால் கட்சியின் தலைவர் என்றும் பாராமல் வாடகைக் கொலையாளியை வைத்து ஆளைப் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். எதிர்காலத்தில் இவர்களே கட்சியொன்றை உருவாக்கி ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்பட மாட்டேன்.
இதற்கு உண்மையான தீர்வு வங்கி இருப்புத் தொகைக்கான வட்டியை அதிகரித்து ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை , ஜி.எஸ்.டி வரிகளைக் குறைத்து மக்களை நியாயமான இடங்களில் முதலீடு செய்ய அனுமதிப்பதே. நிதி நிறுவனங்களை அரசின் கூட்டுறவிலே செய்ய முடியும் எனும்படி சட்டத்தை மாற்ற வேண்டும். அது ஒரு பாதுகாப்பை அளிக்கும். இப்போது நடப்பது அரசு அதிகாரிகளின், 'அரசியல்வியாதிகளின்' உதவியுடன் நடக்கும் பகற்கொள்ளை

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...