Skip to main content

கடுப்பு

நிர்வாகிகள் தமக்குள்ள தொடர்புகளைக் கொண்டே எழுத்தாளர்களை தேர்வு செய்வார்கள். இதில் வியப்படைய ஒன்றுமில்லை. பரிந்துரை, செல்வாக்கு, அரசியல் என்றெல்லாம் குழப்பிக் கொள்ள ஒன்றுமில்லை. நான் இத்தனை ஆண்டுகளாக பெங்களூரில் இருக்கிறேன். அண்மையில் இங்கு நடந்து முடிந்த இரு தமிழ் இலக்கிய விழாக்களுக்கும் என்னை அழைக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்தெல்லாம் படைப்பாளிகளை பஸ் வைத்து, கார் வைத்து அழைத்தார்கள். இந்த பிரம்மா இலக்கிய விழா கூட என் வீட்டுக்கு ரெண்டு கிலோமீட்டர் தொலைவிலே தான் நடக்கிறது. அவர்களுக்கு என் பெயரில் ஒரு படைப்பாளி இருப்பதோ, நான் தேசிய விருது பெற்றிருப்பதோ, நாவல், கவிதைத்தொகுப்பு, சிறுகதைத்தொகுப்பு, மொழியாக்கம், உரைநடை என நாற்பதுக்கும் மேல் நூல்கள் வெளியிட்டுள்ளதோ அவர்களுக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொருட்படுத்தவே இல்லை.

அதற்கு நான் ஒன்றுமே பண்ண முடியாது. அவர்களிடம் போய் என் ரெஸ்யூமை எல்லாம் கொடுக்க முடியாது. அவர்களுடைய தொடர்பு எல்லைக்குள் நான் இல்லாததால் நான் இல்லாமலும் போகமாட்டேன். 

எந்த வருத்தமும் இல்லை! கடுப்பு மட்டும் தான்.

பி.கு: அழைக்கப்பட்டுள்ள எழுத்தாள நண்பர்களுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துகள்! 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு, அடுத்த முறை இங்கு இன்னொரு படைப்பாளியும் இருக்கிறார் என நினைவு கொள்ளுங்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...