இம்மாத உயிர்மையில் வந்துள்ள என் நேர்முகத்தில் இருந்து: "நான் என்னை ஒருவித எதிர்விசையாக கருதுகிறேன். என்னை வலப்பக்கமாக திருகி விட்டால் நான் இடப்பக்கமாக இரட்டி வேகத்தில் சுழல்வேன். எனக்கு சதா எதிர்ப்பதற்கு, மறுப்பதற்கு எதாவது ஒன்று இருந்து கொண்டிருக்க வேண்டும். (...) பெரும்பான்மைத் தமிழக மாநிலங்களில் உள்ள உறவுகள் சார்ந்த செண்டிமெண்டுகள், அரசியல், சினிமா, கடவுள், மதம் சார்ந்த மிகையுணர்ச்சி எங்கள் ஊரில் இல்லை. எங்கள் மக்கள் கோயிலுக்குள் நின்றபடியே இயல்பாக பூசாரியையும் கடவுளையும் கலாய்ப்பார்கள், தேவாலயத்திற்குள் இருந்து போதகரை பகடியாக பார்ப்பார்கள்."
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share