Skip to main content

இதற்காகத் தானா?

இதுதான் புக் பிரம்மா இலக்கிய விழா பற்றி என கடைசிப் பதிவு (என்று நினைக்கிறேன்).


இன்று மாலையில் பென்யாமினுடனான உரையாடல் நிகழ்வு நடந்து கொண்டிருந்த போது போனேன். பென்யாமின் பதற்றமாக ஒரு எனெர்ஜி இல்லாம பேசிக்கொண்டிருந்தார். ஒருங்கிணைப்பாளர்கள் நேர விசயத்தில் ரொம்ப கறார் போல - அரங்குக்கான நேரம் முடிவதற்கு முன்பே டிங்டிங் என மணியடித்தார்கள். (அப்போதும் கூட சிலரது தூக்கம் கலையவில்லை.) ஆனால் பென்யாமின் வெளியே பார்த்த போது என்னிடம் உற்சாகமாகப் பேசினார்.
அரங்கில் கால்வாசி தான் கூட்டம். ஒரு தற்படம் எடுக்கலாம் என முயன்றால் எனக்குப் பின்னால் ஒருவர் மதிய ஆங்கிலப் படத்திற்கு வநதவரைப் போல தூங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த அனேகமானவர்கள் மந்திரித்து விட்டவர்களைப் போலத்தான் இருந்தனர். அங்கேயோ வெளியிலோ ஒரு பரபரப்பு, உற்சாகம் இல்லை. பொதுவாகவே பெங்களூர் மக்கள் எங்கு போனாலும் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றாமல் ஏ படம் பார்க்க சென்றதைப் போலத்தான் அதீத மெத்தனமாக இருப்பார்கள் என்றாலும் இந்த நிகழ்வு ஒரு மார்க்கமாகவே இருந்தது; ஏதோ மணப்பெண் ஓடிப்போன கல்யாண மண்டபத்தில் உணவுக் கூடத்தைப் போல.
கிட்டத்தட்ட காலியாக இருந்த அந்த அரங்கைப் பார்க்க எனக்கு "ச்சே இதற்காகத் தான் இவ்வளவு அங்கலாய்த்துக் கொண்டோமோ" என இருந்தது. (அனேகமாக எல்லா அரங்குகளின் போதும் கூட்டம் இப்படித்தான் இருந்தது என ஒரு தோழி சொன்னார்.) எப்போதுமே இப்படித்தானே - உண்மையில் எப்படித்தான் இருக்கிறது எனத் தெரிந்துகொண்டு புலம்பியிருக்கலாம்.

அருமையான இடம், நல்ல ஒருங்கிணைப்பு, உணவருந்தவும் உரையாடவும் வசதியான இடங்கள், கிட்டத்தட்ட மெட்ராஸ் மியூஸிக் அகாடிமியைப் போல இருக்கிறது, ஆனாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது.

ச்சே, இதற்காகத் தானா என "மோகமுள்" பாபுவைப் போல நினைத்துக் கொண்டேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...