Skip to main content

ஏன் வாசிக்க வேண்டும் நூல் குறித்து அன்புக்குமரன் எத்தியரசன்

புத்தகம்: ஏன் வாசிக்க வேண்டும் 
எழுதியவர்: எழுத்தாளர்: Abilash Chandran  (ஆர். அபிலாஷ்)

வாங்கிய இடம்: ஸிரா டிகிரி அரங்கு, சென்னை புத்தகக் கண்காட்சி
வாங்கிய தேதி : 02 மார்ச் 2022 
 வாசிப்பது எப்படி என்ற புத்தகத்தை அண்மையில் வாசித்தபோது , அதன் தொடர்ச்சியாய் ஏன் வாசிக்க வேண்டும் என்ற புத்தகத்தையும் வாசிக்க நேரிட்டது. நம் வாழ்வாதாரத்தை முன் வைத்து வாசிப்பின் தேவை குறித்து புத்தகத்தின் வாசத்தை நுகராதவர்களுக்கு ஒரு அறிமுக நூலாக இருந்தது செல்வேந்திரன். அவர்களின் கட்டுரை தொகுப்பு.  ஆனால் எழுத்தாளர் அபிலாஷ் ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை மிக விரிவாகவும் நேர்மையாகவும் (வாசிப்பும் ஒரு போதைதான் என்பது போன்ற கருத்துகள் ஊடாக ) தனது கருத்துகளை தனது பிரஞையினால்  நமக்கு கடத்தியிருக்கிறார்.
எழுத்தாளர் அபிலாஷ் அவர்களின் முகப்புத்தக பதிவுகளை சில வருடங்களுக்கு முன்பாக பின்தொடர்ந்தேன். அதன் நீட்சியாக ஒரு நாள் ஹருதயம் திரைப்படத்தை பற்றிய இவரது கட்டுரையால் கவரப்பட்டேன். அப்படி ஒரு பகுப்பாய்வு. அவரின் அவதானிப்புகள் மிகவும் ஆழ் நிலையில் இருப்பதை உணர்ந்தேன். பின்பு பல கட்டுரைகளை வாசித்தேன். அண்மையில் தனது உடல் இடையை குறைக்கும் பொருட்டு அவர் மேற்கொண்ட சில வாழ்வியல் முறைகளை அறிவியல் பூர்வமாகவும் பல அளவுறுகளை முன்வைத்து எழுதியதை ஓர் அளவு பின்பற்றி நானும் என் இடையை குறைத்தேன். ஆக வாசிப்பில் தொடங்கி இவரது எழுத்துகள் என்னை ஓர் செயல் வீரனாகவும் மாற்றியிருக்கிறது.
ஏன் வாசிக்க வேண்டும் புத்தகத்தில் ஒரு பக்கம் கூட ....ஏன் ஒரு வரி கூட சோடை போகவில்லை. அத்தனையும் அறிவின் முத்துக்கள். அதுவும் நாம் பெருமளவு அறியாத அறிவுப்பண்டங்களை சுவைத்தபோது இருந்த ருசி இன்னும் என் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. எனது நீண்ட நாள் கேள்விகான  பதிலை நினைவுத் திறனும் வாசிப்பும் என்ற கட்டுரையில் காணமுடிந்தது. 
அசல் சிந்தனையாளருக்கான அனைத்து குணங்களும் இவரது எழுத்துக்களில் கண்டடையலாம். இலக்கிய வாசிப்பு என்ற இரண்டாம் பாகத்தில் இவர் யாருமே இதுவரை காணாத அல்லது உணராத வகையில் பல உளக்காட்சிகளை எனக்கு காண்பித்தபோது வியந்தேன். வாசிப்பது மூளையா மனமா என்ற ஒற்றை கட்டுரையிலேயே எனக்கு தெரிந்துவிட்டது. இரண்டாம் பாகம் மிகவும் உக்கிரத்துடன் version 2.0 வாக மிளிர்ந்தது . 
இந்த கட்டுரையில் நமக்கு கிடைக்கும்   அனுமானங்களை கிடப்பதே ஒரு தன் நினைவிழந்த நிலைக்கு சென்றது போலான அனுபவம். இதைத் தொடர்ந்து என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது. ஆங்கிலத்தில் வாசிப்பது என்ற கட்டுரை மற்றும் ஒரு தலைசிறந்த (எல்லாமே நல்ல கட்டுரைதான்! ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல ) கட்டுரை. அயல் எழுத்தின் தாக்கம் நம் எழுத்தாளர்களின் எழுத்தின் மீது உண்டு என்பதை மிக அழகாக நிறுவியுள்ளார். உதாரணங்களை சுட்டிக்காட்டி சொற்றொடர்களின் வடிவத்தைக் கண்டுபிடித்து அந்த பாங்கு அவர்களின் எழுத்தை எப்படி தன சமகால எழுத்தாளர்களோடு தங்களை வேறு படுத்தியது என்பதையும் கச்சிதமாக சான்றுகளுடன் விளக்கியிருக்கிறார் (கையும் களவுமாகப் பிடித்தார் என்றும் சொல்லலலாம் ) . உதாரணம்: "கையைத் தேடிக்கொண்டு தயங்காமல் தன கையை நீட்டி குலுக்கினான் " என்ற சொற்றொடர் அமைப்பு ("Looking for the hand, he unhesitatingly extended his hand and shook it."). எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் உரைகளில் வரும் சில வார்த்தைகளின் கட்டுமானத்தன்மையில் ஆங்கில தாக்கம் இருப்பதாக அவ்வப்போது உணர்ந்ததுண்டு. ஆனால் அபிலாஷ் அவர்களின் அவதானிப்பு மிக தீவிரமானதாக உள்ளது. தமிழர்கள் vs மலையாளிகள் என்ற கட்டுரையை மிகவும் ரசித்தேன். மறுபுறம் நாம் செல்லக்கூடிய பாதை மிகவும் தொலைதூரம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு நான் இருப்பு உணர்வுக்கு திரும்பினேன். 
புத்தகத்தின் தலைப்பு சாதாரணமாக தட்டையாக இருக்கலாம். ஆனால் அதன் உள்ளடக்ககம் அனைத்திலுமே அவ்வளவு விவரக்குறிப்புகளுடன் விரிவான மற்றும் மறுக்க முடியாத ஞானத்தை கண்டடைந்து நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். இந்த புத்தகம் ஒரு "Masterpiece". வாசித்தல் என்ற தலைப்பு இன்னும் பொருத்தகமாக இருக்கும்.
இவர் எழுதிய மற்ற புத்தகங்களை வாசிக்க ஆவலாக உள்ளேன்.
#readgasm

- அன்புக்குமரன் எத்தியரசன்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...