Skip to main content

ஊழல்



பதிப்பகங்கள் நூலக நூல் கொள்முதலுக்காக முறைகேட்டில் ஈடுபட்டு, அதற்கான கோடிக்கணக்கான பண மதிப்பிலான ஊழலை செய்யும் போது அதனால் எழுத்தாளர்களும் வாசகர்களும் லஞ்சம் கொடுக்க முடியாத சிறுபதிப்பகங்களும் முறையே பாதிக்கப்படுகின்றனர். எழுத்தாளர்களுக்கு ராயல்டி கிடைக்காது - இல்லாத புத்தகத்துக்கு பொய்யான தலைப்பில் ஆர்டர் கொடுத்தாலோ ஒரு பதிப்பகம் முறைகேட்டினால் ஆர்டர் பெற்றாலோ அது கறுப்புப் பணத்தை உற்பத்தி பண்ணும், கறுப்புப் பணத்தை எழுத்தாளருக்கு ராயல்டியாக கொடுக்க முடியாது, மேலும் இல்லாத எழுத்தாளருக்கு எங்கே போய் பணம் சேரும்? இந்த அபத்தமான சூழலை காப்கா கூட கற்பனை பண்ணியிருக்க முடியாது.
வாசகர்களுக்கும் ஒரே நூலை இருபது முப்பது பிரதிகள் அலமாரியில் இருந்தாலோ அல்லது பொய்யான தலைப்பில் இருந்தாலோ பயனில்லை. சேக்கிழாரின் கம்பராமாயணம் என ஒரு நூல் பதிப்பிக்கப்பட்டால் அதை வைத்து வாசகருக்கு சேக்கிழாரையும் புரிந்துகொள்ள இயலாது, கம்பனையும் படிக்க முடியாது. பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.
அடுத்து, விலை. ஊழலினால் சரிசமமாக பதிப்பகங்களுக்கு நூலக ஆணை கிடைக்காமல் அவை நஷ்டத்தை சமாளிக்க புத்தக விலையை ஏற்றுவது வாசகரை பாதிக்கும். மெல்ல மெல்ல இதனால் சிறுபதிப்பாளர்கள் அழிவர்.
இப்படி எல்லாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் குற்றம் இது. ஏற்கனவே நொடிந்து போயிருக்கும் பதிப்பகத் துறையில் ஒரு சிலர் ஊழல் செய்வது ஏழைகளின் சோற்றில் கைவைப்பதைப் போன்றது. இது நியாயம் அல்ல. இத்தகையோரை அரசு தண்டிப்பதுடன் சம்மந்தப்பட்ட அதிகாரையும் இடமாற்றம் செய்ய வேண்டும். ஊழலற்ற வெளிப்படையான அணுகுறையை கொள்முதலில் கொண்டு வர வேண்டும். புத்தக தலைப்பின் அடிப்படையில் தேர்வு செய்யாமல் நல்ல பதிப்பகங்களைத் தேர்வு பண்ணி அவர்களிடம் இருந்து ஒரே எண்ணிக்கையில் நூல் வாங்க வேண்டும்.
பி.கு: அப்படியெல்லாம் அட்டையில் பெயர் மாறிவிடும் என நான் நம்பவில்லை. பெயரில் பிழை வரலாம், ஆனால் ஒரேயடியாக மாறியதெல்லாம் இதுவரை நம் வரலாற்றிலேயே நடந்ததில்லை. இது மோசடி வேலைதான் என்பது என் நம்பிக்கை. வேறு சிலரும் கூட இப்படி அட்டையில் தலைப்பையோ பெயரையோ மாற்றி அச்சடித்து நூலக ஆணைக்கு கொடுப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதே ஆதாரத்துடன் பார்க்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...