Skip to main content

பரகலா பிரபாகரின் பேட்டி

நிர்மலா சீத்தாராமனின் கணவரும் பொருளாதார நிபுணரும்  மற்றும் எழுத்தாளருமான பரகலா பிரபாகரை கரண் தாப்பர் எடுத்த பேட்டி ரொம்ப ஜாலியாக இருந்தது. பளார் பளாரென அடிப்பதைப் போன்ற கருத்துக்கள். அவர் ஜெர்மனியில் யூதர்களுக்கு நடந்தவை இந்தியாவில் சிறுபான்மையினருக்கு நடக்கப் போவதாக எச்சரிக்கிறார். முதல் நிலையில் நைச்சியமாகப் பேசி வழிக்கு கொண்டு வரப்பார்ப்பது, அடுத்து தனிமைப்படுத்துவது, எச்சரிப்பது, கடைசியாக வெளியேற்றுவது. இந்த நிலைகளில் முதலிரண்டு நிலைகளில் இந்தியா இப்போது இருப்பதாக கூறுகிறார். சரியான பார்வை.

ஆனால் இது ஒரு மேலோட்டமான பார்வை தான்; அவர் கவனிக்காமல் விடும் ஒன்று உண்டு  - பாஜகவின் லட்சியம் இஸ்லாமியரை ஒடுக்குவது அல்ல. அவர்களுக்கு இஸ்லாமியர் பொருட்டே அல்ல. அவர்கள் இந்து மதத்தை அரசியல்படுத்தி புறவயப்படுத்த விரும்புகிறார்கள். கடவுளைக் கொன்று அவரிடத்தில் தலைவர்களையும், மத் நம்பிக்கைகளை ஒழித்து அவற்றின் இடத்தில் தம் அரசியல் கொள்கைகளையும் கொண்டு வரப் பார்க்கிறார்கள். ஆக பாஜக முதலில் ஒழிக்க முயல்வது தீவிரமான இந்துக்களைத் தான். அவர்களின் நம்பிக்கையைத் தான். மேற்சொன்ன விசயங்களை இஸ்லாமியரோ கிறித்துவர்களோ பண்ணினால் பாஜக அவர்களை அள்ளி அவரணைத்துக் கொள்ளும். சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் சிறுபான்மையினருக்கு இடமளிக்காதது மேம்போக்கான ஒன்றே - எல்லா கட்டங்களிலும் சிறுபான்மையினருடன் இணக்கமாக போக பாஜகவால் முடியும் - தமது நிபந்தனைகளுக்கு அவர்கள் உடன்படும் பட்சாத்தில். எங்களுடைய ஒரே தெய்வம் பாரத பிரதமர், எங்களுடைய ஒரே நம்பிக்கை பாஜகவின் கொள்கை என அவர்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில். இப்போதைய யுத்தம் முற்போக்குக்கும் பிற்போக்குக்கும் நடுவில் அல்ல. கடவுளுக்கும் கடவுளற்ற தலைவர்கள், மத குருமார்களுக்கும் இடையிலே. 

ஹிட்லரும் இதையே தான் ஜெர்மனியில் செய்தார். அவர் இனப்பற்றை அரசியல் பற்றாக உருமாற்றினார். மதம், இனம், குடும்பம் ஆகிய உறவுநிலைகளை தலைவர், கட்சி, கொள்கை என உருமாற்றிக் காட்டினார். இதுவே ஆக ஆபத்தான நிலை. 

பிரபாகர் கணிப்பதைப் போல பாஜக இந்தி பெல்ட்டில் 60% இடங்களை இழந்தால், தென்னிந்தியாவில் துடைத்து எறியப்பட்டால் அல்லது அதிகாரத்தையே இழந்தால் அது மகிழ்ச்சியான சேதியாகவே இருக்கும். ஆனால் இப்போதைக்கு அது ஒரு கனவைப் போல இருக்கிறது!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...