Skip to main content

என்ன சத்தம் இந்த நேரம்?


காலையில் தூக்கம் கலைந்து போர்வையை முழுக்க மூடிக்கொண்டு அரைத்தூக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். வெளியே உச்சா போய்விட்டு வந்த புத்தா (என்னுடைய காக்கர் ஸ்பானியல் நாய்) வழக்கம் போல தாவி படுக்கையில் ஏற முயன்றது. ஆனால் இம்முறை அதனால் வழியில் படுத்திருந்த என்னை சரியாக தாண்ட முடியவில்லை. விடிகாலை முழு விரைப்பு கொண்டிருந்த என் ஆண்மையில் ஒரு கால் தடுக்கிட இன்னொரு பக்கம் மென்மையான என் விதைப்பையில் காலை அழுத்திவிட்டு எப்படியோ தாவிப் போய் விட்டது (நல்லவேளை தடுக்கி விழவில்லை!). நான் வலியில் கத்த அது பதறிப் போய் திரும்ப வந்து நாம் மிதித்த இடம் எதுவென முகந்து பார்த்தது. “ஓ இதுவா, ஆமாம் அந்த வாசனை தான், ஆனால் இது ஏன் இப்படி இருக்கிறது?” இந்த நடத்தை என்னை வெகுவாக ஆச்சரியப்படுத்தியது. ஒருவருக்கு வலியை ஏற்படுத்தினால் நமக்கு பிரச்சினை வரலாம் என பயந்து சுதாரிப்பது நாயின் இயல்பு. ஆனால் என்ன நடந்தது, எந்த இடத்தில் தவறு செய்வோம் என சோதிக்கும் ஆற்றல் அதற்கு இல்லை. அதாவது காரண காரியத்தை ஆராயும் திறன் இல்லை, அது மனிதனுக்கு மட்டுமே உரித்தானது என்று தான் நம்பிக்கொண்டிருந்தேன். உதாரணமாக ஒருவருடைய காலை தெரியாமல் மிதித்தால் அவர் கத்தும் போது அவர் கத்துகிறார் என்றல்ல அவரை கத்த வைத்துவிட்டோம் என்றும், எதனால் அவர் கத்துகிறார், எந்த இடத்தில் மிதித்தோம் என்றும் நம் மூளை பரிசீலிக்கும். காலை உடனடியாகப் பார்ப்போம். சாலையில் வாகனத்தை கொண்டு மோதும் போதும் நம் கண்கள் மோதப்பட்ட இடத்தைப் பார்க்கும். மனதுக்குள் எதையாவது மறைத்து வைத்துப் பேசும் போது கைகளை பாக்கெட்டிலோ மேஜைக்கு கீழே வைத்துக் கொள்வோம். எட்ஜ் கொடுத்து ஸ்லிப்பில் கேட்ச் பிடித்ததும் மட்டையாளர் தன் மட்டையின் விளிம்பைப் பார்ப்பார். காரணியை அறியவோ மறைக்கவோ முயல்வோம்.
இதைப் புரிந்துகொள்ள முடியுமெனில் இந்த நாய்க்கு வேறென்னெல்லாம் தெரியும் என வியப்பு ஏற்படுகிறது. பேசத் தெரியாது என்பதால் என்னைப் பற்றி ஏகப்பட்ட உண்மைகளை மனசுக்குள் வைத்தபடி அமுக்குணி போல் இருக்கிறது என நினைக்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...