Skip to main content

12த் பெயில்


 
 

அதில் என்னை உணர்ச்சிவயப்பட வைத்த நிறைய காட்சிகள் இருந்தன. ஆனால் படம் முடியும் போது அது வாழ்க்கையைப் பற்றியோ விழுமியங்களைப் பற்றியோ ஒன்றுமே சொல்வதில்லை. .பி.எஸ் தேர்வில் வெல்வது எவ்வளவு கடினம், அதற்கு எத்தனை பேர்கள் முயல்கிறார்கள் என சொல்ல பத்து நிமிடம் போதுமே. அப்புறம் எனக்கு வேறொரு கேள்வியும் எழுந்தது - இவ்வளவு பயங்கரமான .பி.எஸ் தேர்வில் எப்படி அண்ணாமலை - சின்ன வரலாற்றுத் தகவல் கூட தெரியாமல் மேடைகளில் தவறாகப் பேசும் அண்ணாமலை -எப்படி வென்றார்? அவரே ஜெயிக்க முடியுமெனில் பத்து லட்சம் பேர்களில் இருபது பேர்கள் மட்டுமே ஜெயிக்க முடிகிற தேர்வு என ஏன் இந்த படத்தில் சொல்கிறார்கள்? மிகத்தீவிரமான ஒழுக்கமும் ஊக்கமும் இருந்தால் மட்டுமே வெல்ல முடியும் என்கிறார்கள். ஆனால் சில நேர்முகங்களில் அண்ணாமலை பற்றி அவரைப் பற்றி தெரிந்தவர்கள்  சொல்லும் விபரங்கள் வித்தியாசமாக உள்ளன - அவர் பகலில் தூங்கி எழுவதே மாலை மூன்று மணிக்குத் தான். இரவில் போதை காளானை எடுத்துக்கொள்கிறார். இப்பழக்கம் அவருக்கு பள்ளிப் பருவத்திலே ஏற்பட்டு விட்டது. இப்படியான ஒருவராலே .பி.எஸ் ஆக முடியுமெனில் “12த் பெயிலில்ஏன் இன்னொரு விதமாக சொல்கிறார்கள்? இதில் யார் சொல்வது பொய்? எனக்கு இந்த படத்தை பார்த்து முடித்த பின்னர் பெரிய குழப்பம் ஏற்பட்டுவிட்டது!

வு மில்லில் கஷ்டப்பட்டு இரவில் 2 மணிநேரம் மட்டும் தூங்கி உழைத்து வென்றவர்கள், நேர்மைக்காக வாழ்பவர்கள் இன்று இருக்கிறார்களா என்றே சந்தேகம் உள்ளது. .ஸி.ஆரில் இந்த .பி.எஸ், ..எஸ்கள் தாம்சம்பாதித்தபல நூறு கோடிகளைக் கொண்டு கட்டிய பங்களாக்கள் உள்ளன என ஜூ.வியில் ஒரு ரிப்போர்ட் படங்களுடன் வந்தது. நேர்மையாளர்கள் இவர்களிடம் தான் சலூட் அடித்து நிற்கிறார்கள். நேர்மையான .பி.எஸ் அதிகாரியாகி நேர்மையற்ற கீழதிகாரிகளைத் திருத்தப் போவதாக “12த் பெயிலின்நாயகன் சொல்கிறான் - எனில் அவருக்கு மேலே உள்ள சீனியர் அதிகாரிகள், அமைச்சர்களை யார் திருத்துவது? அவரைப் போன்ற ஊழல்வாதி .பி.எஸ்களை யார் திருத்துவது? ஊழல் ஒரு பொருளாதார அமைப்பின் பிரச்சினை. அதற்குத் தீர்வு நேர்மை என்பதைப் போன்ற அபத்தம் வேறுண்டா? இந்த படம் இவ்வளவு பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதே சினிமா நம்மை எப்படி தொடர்ந்து ஏமாற்றுகிறது என்பதற்கு அத்தாட்சி.


எனக்கு என்னமோ அண்ணாமலை தான் நம் காலத்தின் மிகப்பெரியநம்பிக்கை நாயகன்எனத் தோன்றுகிறது. அவரைப் போன்றவர்கள் எப்படி சில ஆண்டுகளிலே .பி.எஸ் ஆகி முதல்வருக்கும், பெரிய தலைவர்களுக்கு ஒற்றறிந்து கொடுத்து நம்பிக்கையைப் பெற்று, எதிரிகளின் பலான காணொளிகளைப் பதிவு பண்ணி மிரட்டி அதிகாரத்தை நிறுவி, பிறகு அப்பதவியையும் விட்டு ஒரு மாநிலத்தின் தலைவர் ஆகிறார்கள் என யாராவது படம் எடுத்தால் அபாரமாக இருக்கும். அந்த படத்துக்குஹலோ பிரதர்எனத் தலைப்பு வைக்கலாம்.

 

பின்குறிப்பு: இப்படம் உண்மைக்கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என எனக்கு ஏற்கனவே தெரியும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...