Skip to main content

முரடர்களை ஆளும் மாபியா தலைவர்கள்

மணிப்பூர் கலவரத்தின் போது அப்பெண்களின் சகோதரரும் தகப்பனாரும் கொல்லப்பட்டார்கள். மேலும் பல குழந்தைகளும் வயசாளிகளும் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். ஆனால் அச்சம்பவங்கள் மக்களின் ‘மனசாட்சியை’ தட்டி எழுப்பவில்லை. ஆனால் ஒரே ஒரு நிர்வாண ஊர்வலக் காணொளி மொத்த நாட்டையுமே உலுக்கிவிட்டது. ஏன்? நாம் அடிப்படையில் நிலப்பிரபுத்துவ / விவசாயக் குடி மனநிலை கொண்டவர்கள். நமக்கு நிலத்துக்கு அடுத்தபடியாக பெண்ணுடலே முக்கியம். அதுவும் பெண்ணின் கருப்பை, அவளுடைய கன்னிமை. ஏனென்றால் நிலத்தின் மீதான அதிகாரத்தை பெண்ணின் சந்ததி வழியாகவே நாம் நிலைநாட்ட முடியும். ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டாக இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் துணிச்சல் நமக்கில்லை. ஆகையால் பெண் என்பவள் பலவீனமானவள், பெண்ணுக்கு எதிரான குற்றமே ஆகக்கொடூரமான மன்னிக்க முடியாத குற்றம், அது அநாகரிகம், அநீதி என ஜல்லியடிக்கிறோம். மணிப்பூர் சம்பவத்தின் போதும் அதுவே நடந்தது - அப்பெண்ணுக்கு நேர்ந்த துன்பத்தை விட அவளுடைய உடலுக்கு நேர்ந்த அத்துமீறலே நம்மை அதிகம் உலுக்கியது. அதை விட அந்த நிர்வாணம், அது வெகு சாதாரணமாக அவமதிக்கப்பட்டது, அதன் அநாகரிகம் இவையே நம்மை நடுநடுங்க வைத்தது. நமக்கு கொஞ்சமாவது நீதியுணர்வு இருந்தால் கொல்லப்பட்ட அந்த ஆண்களுக்காகவும் சிறிது சிந்தித்திருப்போம். ஏனென்றால் இப்பெண்களால் இந்த காயங்களில் இருந்து வெளிவந்து வாழ முடியும், ஆனால் செத்துப் போன அவர்களின் சகோதரர்கள், தகப்பன்களால் முடியாது.

துரதிஷ்டவசமாக என்னதான நவீனமானவர்கள் என்று நாம் நம்மைப் பற்றிக் கருதினாலும் நம்மால் இந்த நிலச்சுவான்தார் / விவசாயக்குடி உளவியலில் இருந்து கடைசிவரை வெளிவர முடிவதில்லை. பெரும் அறிவுஜீவிகளில் இருந்து, எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்களால் கூட முடியவில்லை. அந்த மனநிலையின் முன்பே கடைசியில் பிரதமரும் பணிந்திட, அநீதிக்கு எதிராக ‘கொந்தளிக்க’ நேர்ந்தது.
அமெரிக்காவில் ஒரு கறுப்பின ஆணின் கழுத்தில் மிதித்துக் கொன்ற போது பெரும் மக்கள் கூட்டம் திரண்டு எதிர்த்துப் போராடியது. இந்தியாவில் ஒரு பெண் மீது கைவைத்தால் மட்டுமே மக்கள் சஞ்சலப்படுவார்கள். நூறு ஆண்களின் கழுத்தில் ஒரே சமயம் மிதித்துக் கொன்றாலும் கண்டுகொள்ள மாட்டோம். எந்த சிவில் உணர்வும், சமத்துவத்தில் நம்பிக்கையும் இல்லாத சுரணை கெட்டவர்களின் நாடு இது. ஜீக்குத் தெரியும் இந்தியர்களின் ‘பாஞ்சாலி சபத மனநிலையை’ சீண்டினால் ஒருவேளை நிர்பயா விசயத்தில் காங்கிரஸுக்கு நடந்ததும் பாஜகவுக்கும் இப்போது நடக்கக் கூடும் என. அதனாலே அவர் ‘குரல் கொடுத்தார்’.
இந்த பண்பாடற்ற நாட்டில் வாழ்ந்துகொண்டு ஏன் நீதி, பேதி, சத்யமேவ ஜெயதே எனக் கூவுகிறோம் என்பதுதான் எனக்கு எப்போதும் மர்மமாக உள்ளது! இந்த பண்பற்ற நாட்டில் வாழ்ந்துகொண்டு ‘உங்களை நினைத்து அவமானமாக இருக்கிறது பிரதமரே’ என ஏன் கூக்குரலிடுகிறோம் என மர்மமாக உள்ளது! இதைவிட சிறந்த பொருத்தமான ஒரு பிரதமரோ ஒரு கட்சியோ நமக்கு அமைய முடியாது. எங்கள் ஊரில் சொல்வார்கள் ஈனாம்பேச்சிக்கு மரப்பட்டி கூட்டு என்று. கொடூரர்களும் மூடர்களும் நிறைந்த நம் நாட்டை ஒரு மாபியா தலைவனே ஆள வேண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...