Skip to main content

சுயாஷ் ஷர்மா

 இந்த ஐ.பில்.எல் பருவத்தின் கண்டுபிடிப்பே சுயாஷ் ஷர்மாதான். இப்போதெல்லாம் வேகமாக பந்தை சுழற்றும் கூக்ளி பந்துவீச்சாளர்கள் பிரபலமடைந்து வருகிறார்கள். அனேகமாக எல்லா பந்துகளும் உள்ளே வர, லெக்ஸ்பின் பந்து ஒரு வெரைட்டியாக ஆச்சரியப் பந்தாக பயன்படுத்தப்படும்.

இன்றைய வலதுகை மட்டையாளர்கள் காலை முன்பு போல் நகரத்துவதில்லை என்பதாலும், இடதுகை மட்டையாளர்கள் பந்தை கால்பக்கம் சிக்ஸ் அடிக்க முயலும் அளவுக்கு கவர், எக்டிரா கவருக்கு மேல் அடிப்பதில்லை என்பதாலும் இத்தகைய பந்துவீச்சு எடுபடுகிறது. வலதுகையாளர்கள் பவுல்ட், இடதுகையாளர்கள் பாயிண்ட், கவர் பகுதிகளில் என லெக் ஸ்பின்னரின் கூக்ளிக்கு அவுட் ஆவது மாமூலாகி வருகிறது. சுயாஷும் அவ்வாறுதான் விக்கெட்டுகளை ஐ.பி.எல்லில் எடுக்கிறார்.
கூடுதலாக, அவரது ரன் அப், உடலின் அசைவுடன் ஒத்தியங்காத கை சுழற்சி , கையை அகலமாக ஒரு நிலைகுலைந்து விழும் பறவை போல அசைத்து பந்தை வெளிப்படுத்துவது ஆகிய காரணங்களால் இவரது கூக்ளிக்கும் லெக் பிரேக்குக்கும் வித்தியாசம் காண்பது சிரமம்.
இவருடைய துணிச்சல், தன்னம்பிக்கை, பந்தை தைரியமாக தூக்கிப் போடும் பாங்கு, அதிரடி ஆட்டம் என்னை வெகுவாக கவர்ந்தது. அடுத்த மூன்றாண்டுகளுக்கு தன் உடற்தகுதியை தக்க வைத்தால் ஐ.பி.எல்லில் ஒரு நட்சத்திரம் ஆகிவிடுவார். உள்ளுர் நான்கு நாள் போட்டிகளிலும் நன்றாக வீசினால் நிச்சயமாக இந்தியாவுக்காக டெஸ்ட் ஆடுவார்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...