Skip to main content

ஏன் குடிக்கக் கூடாது?


மது போதை, அதனால் உற்பத்தி திறன், ஆரோக்கியம் அழிகிறது, மக்கள் ஏழைகள் ஆகிறார்கள், குடும்பம் நொடிகிறது என்பதைவிட அடிப்படையான பெரும் சிக்கல் அது நம் பெருங்குடலில் உள்ள நல்ல நுண்ணுயிர்களை அழிக்கிறது என்பதே . வாரத்தில் ஒன்றிரண்டு முறை குடித்தாலே அது நம் பெருங்குடலில் உள்ள நுண்ணுயிர் அமைப்பை நாசமாக்கி பல நோய்களை ஏற்படுத்தும். ஆரோக்கியம், மகிழ்ச்சி, வலிமை எல்லாம் காலியாகிவிடும்.
என் முன் மதுப்போத்தலை யாராவது வைத்தால் நான் போதையை, ஈரலை, அதிக கலோரிகளைப் பற்றி கூட கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் "மிதமா குடிச்சா, சாலட் சாப்டா போதும்" என நம் மனம் அதை நியாயப்படுத்தும். நான் என் நுண்கிருமிகள் செத்துவிடுமோ என்றே அதிகம் வருந்துவேன். என்னைப் பொறுத்தவரையில் எனக்குள்ள மிகச்சிறந்த நண்பர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள், உறவுகள், பாதுகாப்பு சேனை, வழிகாட்டிகள் இந்த நுண்ணியிர்களே. அவற்றை பலிகொடுக்கவா என நினைத்தால் "ஐயய்யோ எவ்வளவு கவனமா சாப்டு அதுங்களைக் காப்பாத்தி வெச்சிருக்கேன், இன்னிக்கு அழிச்சிட்டா திரும்ப வளர்க்க ரெண்டு, மூன்று வாரங்கள் ஆகாதா, அப்படியே மீண்டாலும் இப்போதுள்ளவை பாவம் அல்லவா?" என்றே பதறுவேன்ன். ஒரு மிடறு போதைக்காக என் உடலுக்குள் நான் வளர்க்கும் தொட்டில் குழந்தைகளை, என் உடலின் ரெண்டாம் மூளையை, என் செல்களின் மென்பொருளை குருதிக்கொடை அளிக்க மனமில்லாமல் தவிர்த்துவிடுகிறேன்.
ஏனென்றால் இந்த நல்ல நுண்ணுயிர்கள் அழிந்துபோனால் சமநிலை குலைந்து dysbiosis எனும் பிரச்சினை வருகிறது. இதனால் மோசமான நுண்ணியிர்கள் பெருகுகின்றன. ஜெயாவின் மரணத்திற்குப் பின் பாஜக, மூன்றாவது அணி என நம் அரசியல் களம் சமநிலை குலைந்ததைப் போல. குடிபோதை ஒரு extreme நிலை. ஆனால் dysbiosis பரவலான பிரச்சினை. நாம் அதற்கே அஞ்ச வேண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...