Skip to main content

ஆணாதிக்கம் என்றால் என்ன?

 ஆணாதிக்கம் என்றால் என்ன? ஆணின் ஆதிக்கமா? ஆண் உடலின் ஆதிக்கமா?

ஆணாதிக்கவாதி என்றால் ஆண் + ஆதிக்கம். ஆணாக இருப்பதே ஆதிக்கம். அப்படித்தானே? எனில் 100% ஆண்கள் ஆதிக்கவாதிகளா? இல்லை இவர்களில் ஒரு பகுதி ஆண்கள் பெண் மீது கரிசனம் கொண்டவர்களா? அவர்கள் ஆணாதிக்கவாதிகள் அல்லரா? எனில் அவர்கள் ஆண்களே அல்லரா? ஆண்கள் தாம் எனில் ஆணாதிக்கவாதம் எனில் என்ன? பாலினமா பால் நிலையா? அடையாளமா உடலா? ஆண் என்பது உயிரியலா சமூகப் பண்பாட்டு கருத்தமைவா?
உடல் எனில் நீங்கள் பெற்றுக் கொள்ளும் ஆண் குழந்தையின் குறியை வெட்டி அந்த ஆதிக்கத்தை ஏன் நீக்கிடக் கூடாது? அதை உங்கள் பழக்கத்தால், வளர்ப்பால் சரி செய்ய முடியுமெனில் அவர்கள் தற்காலிக பெண்ணியவாதிகளாக இருந்து உங்கள் வசம் இல்லாத போது ஆணாதிக்கவாதி ஆவார்களா? ஏன் இந்த ரிஸ்கை எடுக்கிறீர்கள்? இதில் இருந்தே தெரியவில்லையா ஆண் பால்நிலையை அவன் உடலுடன் பிணைப்பது அபத்தம் என?
இதில் எந்த தெளிவும் ஏற்படாத நிலையில் ஏன் 90% ஆண்கள் ஆதிக்கவாதிகள், அதுவும் பெண்களுக்கு தலையசைக்காதவர்கள் நிச்சயம் ஆதிக்கவாதிகள் என எப்படி சொல்கிறார்கள்? ஜெயமோகன் இதையே பெண்களுக்கு திரும்ப சொல்லும் போது கோபம் வருகிறது அல்லவா? நீங்கள் மட்டும் என்ன புள்ளிவிபர கணக்கெடுத்து 90% ஆண்கள் கெட்டவர்கள் என முடிவெடுத்தீர்களா? தனிப்பட்ட அனுபவத்தில், பார்த்த சம்பவங்களில் இருந்து சொல்கிறீர்களா? அது பொதுமைப்படுத்தல் ஆகாதா? ஆண்கள் இதை திரும்ப செய்தால் மட்டும் ஏன் கோபம் வருகிறது? நீங்கள் புகட்டும் விஷத்தை திரும்பப் புகட்டினால் கசக்கிறதா?
மூன்றாம் கட்ட பெண்ணியம் பால்நிலையானது உடலில் இல்லை என்கிறது. எனில் அதை மட்டும் ஏன் தமிழ் பெண்ணியவாதிகள் ஏற்பதில்லை. ஏனெனில் அது அவர்களுடைய சந்தர்பவாத சூழ்ச்சிகளுக்கு வசதியாக இல்லை. பெண்ணை சதா பாதிக்கப்படுபவளாக காட்டிக்கொண்டு அதன் அனுகூலங்களை அனுபவிக்க, ஆணை தொடர்ந்து ஆதிக்கம் செய்ய அந்த காலாவதியான கருத்தமைவு பெண்ணிய 'போராளிகளுக்கு' தேவைப்படுகிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...