Skip to main content

பெண் வெறுப்பு எனும் வெற்று குறிப்பான்


பெண்களின் குற்றங்களைப் பற்றி, பெண் சார்பு, பாரபட்ச திருமண, வரதட்சிணை, வன்கொடுமை தடுப்பு சட்டங்களைப் பற்றி பேசினால் பெண் வெறுப்பாளன் என முத்திரை குத்துகிறார்கள். பெண்ணைப் பிடிக்கலைன்னா அதை அறுத்துக்கோ என பேஸ்புக்கில் சில பெண்களே எழுதுகிறார்கள். (இதே மொழியை ஒரு ஆண் பயன்படுத்தினால் அவனை சிறையில் தள்ளி விடுவார்கள். சரி அது போகட்டும்!)
என்னைப் பொறுத்தவரையில் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை - பெண்ணியம் வளர்ந்த வந்த ஆரம்ப காலங்களில் பெண்ணியவாதிகளை பொது சமூகம் ஆண் வெறுப்பாளர்கள் என்றே அழைத்தது. அந்த கால படங்களில் இவ்வாறே பெண்ணுரிமை போராளிகள் அடையாளப்படுத்தப்பட்டார்கள். ஆனால் அடுத்தடுத்த பத்தாண்டுகளில் பெண்ணியம் இயல்பாக்கம் செய்யப்பட்டது. தாராளவாத சந்தைப் பொருளாதாரமும் சமூக இயக்கங்களும் பெண்ணிய விழுமியங்களை நவீன வாழ்வின் கட்டாயங்களில் ஒன்றாக்கின. அப்போது ஆண்களும் பெண்ணியம் பேச ஆரம்பித்து போலி பெண்ணியவாதிகள் ஆகினர். ஆண் வெறுப்பாளன் எனும் பட்டம் மறைந்தது. இதுவே இப்போது ஆண் உரிமை பேசும் ஆண்களுக்கும் நடக்கிறது. அவர்கள் 'பெண் வெறுப்பாளர்கள்' ஆகிறார்கள்.
ஆண்களோ நான் உண்மையைத் தானே பேச்னேன், நான் எப்போ பெண்ணை வெறுத்தேன் என குழம்புகிறார்கள். ஆனால் நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் - ஆணியமும் ஒருநாள் இயல்பாக்கம் பெறும். அன்று பெண்கள் ஆணியம் பேசுவார்கள் (போலி பெண்ணியம் போல போலி ஆணியம் உருவாகும்)
இதையே பின்நவீனத்துவம் வெற்று குறிப்பான் என்கிறது. பெண் வெறுப்பு குறிப்பீடு இல்லாத வெற்றான ஒரு குறிப்பான். அது இப்படி மிதந்து கொண்டிருக்கும். அவ்வப்போது யார் தலையிலாவது அமரும். பிற்போக்காளன், சாதியுணர்வாளன், ஆதிக்க மனோபாவம் கொண்டவன், மதவாதி என்பன வேறு வெற்று குறிப்பான்கள். மேற்சொன்ன சங்கதிகளை வாழ்வில் பின்பற்றிக் கொண்டே ஒரு அதிகாரத்துக்காக யாரையாவது செருப்பால் அடிப்பதற்கு இந்த வெற்று குறிப்பான்கள் நமக்கு பயன்படுகின்றன. கொள்கை, கோட்பாடு, மனிதநேயம், சமத்துவம் போன்றவை வாழ்வோடு எந்த தொடர்பும் இல்லாத வெறும் சொற்கள் எனத் தோன்றுவது இந்த சூழலாலே.
எல்லாமே பேச்சளவில், எழுத்தளவில் நின்று போகிற ஆபாசமான சீரழிவான சூழலில் நாம் இன்று வாழ்கிறோம். எதை வேண்டுமானாலும் தேவைக்கேற்ப திரித்து பயன்படுத்தலாம் என மக்கள் நினைக்கிறார்கள். பெண்கள் பெண்ணியத்தை தரையில் கிடக்கிற சாணியை எடுத்து பிடிக்காதவர்கள் மீது அடிப்பதைப் போல அடிக்கிறார்கள். ஏன் அடிச்சே என்று கேட்டால் நான் பாதிக்கப்பட்டவள், நீதான் என்னை இப்படி அடிக்க வச்சே என நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...