Skip to main content

நீதியாளர்களின் முதலைக் கண்ணீர்



இலை எடுப்பவருக்கு நல்ல சம்பளம் கொடுத்தால் இந்த பிரச்சினை மறைந்துவிடும். நீதி பேதி விவாதமெல்லாம் எழாது. நாம் தொடர்ந்து நீதி, அறம் பற்றி அங்கலாய்ப்பதெல்லாம் பணத்தை செலவு பண்ணாமல் தப்பிப்பதற்குத் தான் எனத் தோன்றுகிறது. குப்பை அள்ளுகிறவர், மலம் அள்ளுகிறவர்களுக்கு மாதம் 50000-70000 சம்பளம் கொடுத்துப் பாருங்கள் - உடனே அப்பணி எந்திரமயமாகி விடும். ஊழியர்கள் காரில் வந்திறங்கி அவ்வேலையை செய்தால் அது ஒரு மதிப்பான தொழிலாக மாறும். இதுவே ஓட்டல் பணியாளர்களுக்கும் பொருந்தும். பெண்கள் நாங்கள் அடுப்படியில் கிடந்து அல்லாட வேண்டுமா என பெண்ணியவாதிகள் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார்கள். பெண்கள் உயர்வான சம்பளத்துக்கு வேலைக்குப் போகத் தொடங்கியதும் என்னயிற்று? சமையலுக்கு ஆள் வைத்துக் கொண்டார்கள் அல்லது மூன்று வேளைகளும் வெளியே சாப்பிடுகிறார்கள். இன்று பெருக்கக் கூட. தெரியாத ஒரு தலைமுறை தோன்றியுள்ளது. இந்த மாற்றம் நீதியுணர்வால் அல்ல பண வரவாலே நடந்தது. ஆனால் பணத்திற்கு வழியில்லை அல்லது செலவழிக்க மனமில்லாத போது ஆண்களும் பெண்களும் பெண்ணியம் பேசி அப்பிரச்சினையை கடந்து போனார்கள்.

 ஒரு முதலீட்டிய சமூகத்தில் நீதி, அறத்துக்கான பதிலீடு பணமே. இப்போது கூட சமூக அறம், சமத்துவம் வேண்டும் என கண்ணீர் வடிப்பவர்களிடம் ஒரு பொறியாளருக்கு இணையாக சம்பளத்தை அதிகப்படுத்துவோமா என்றால் "அது முடியாதுங்க" என்று ஜகா வாங்குவார்கள். அவர்களுடைய வீட்டில் பாத்திரம் கழுவும் பெண் மாதம் 30000 கொடு என்றால் என்னம்மா அநியாயமா கேட்கிறே என்பார்கள்.

 நவீன முதலீட்டிய சமூகத்த்தின் போலி முகம் இந்த அற / நீதி வியாபாரிகள் தாம்! நீதி என்பது பொய்யின் பதிலீடு ஆகிவிட்டது. கேட்டால் நாங்க நீதிக்காக குரல் கொடுப்பதனால் தான் மாற்றம் வரும் என்பார்கள். ஆனால் மாற்றம் வராமல் தடுப்பதற்கான உத்தி தான் இப்படி நீதி நியாயத்துக்காக அரற்றுவது என்பதே வேடிக்கை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...