Skip to main content

நாடிருந்தும் அகதி வாழ்க்கை

இம்மாதமும் ஜனவரியிலும் சென்னையில் என்னென்னமோ இலக்கிய நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. நான் சென்னையில் இருந்திருந்தால் இவற்றில் சிலவற்றிலாவது கலந்துகொண்டிருப்பேன். நண்பர்களுடன் அளவளாவி இருப்பேன். இப்போது கூட வரலாம், ஆனால் தங்குவதற்கு இடமில்லை. இப்போதே மாதம் ஒருமுறை சென்னைக்கு கட்டாய பயணம் இருக்கிறது, அதற்காகவே ஒவ்வொரு முறையும் ஒரு நண்பரின் வீட்டுக்குப் போய் பாத்ரூம் பயன்படுத்தி அவர்களுடன் தேநீரோ சிற்றுண்டியோ அருந்திவிட்டு கிளம்பிவிடுகிறேன். இப்படி உதவி கேட்டு தங்கிய பிறகு மீண்டும் அவர்களைத் தொந்தரவு பண்ண முடியாது. அடுத்து இன்னொரு நண்பர் அல்லது புதிய நண்பர். இதனிடையே வேறு விசயங்களுக்கு அங்கே வருகையில் என்னை ஹோஸ்ட் செய்ய யாருமில்லை. ஜனவரியில் ஒரு நீதிமன்றத்தில் ஆஜராகும் பயணம் வருகிறது. அதற்கடுத்த வாரமே என் புத்தக வெளியீட்டை உயிர்மை நடத்துகிறது. அதற்கு மீண்டும் யார் வீட்டில் தங்குவதற்கு கேட்பதெனத் தெரியவில்லை. பண நெருக்கடி வேறு கடுமையாகிக் கொண்டே வருகிறது.

 எதற்குடா பெங்களூருக்கு வேலை வாங்கி வந்தோம் என அலுப்பாக இருக்கிறது! அங்கேயே இருந்திருந்தால் என் வாழ்வில் இவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டிருக்காது. ஒரு தமிழ் எழுத்தாளன் சக படைப்பாளிகளையும் வாசகர்களையும் சந்திக்க இயலாமல் இப்படி ஒரு வேற்றுமொழி மாநிலத்தில் சிறைகொண்டிருப்பது நரக வாழ்க்கை! முன்பு நான் வேண்டியவர்களை சந்திக்க என் வண்டியை எடுத்தால் அரை மணியில் போய் விடுவேன். இப்போது ஓரிரவு பயணமாகிறது. முன்பு எனக்கு அங்கு தங்க இடம் இருந்தது. இப்போது யாரிடமாவது உதவி கேட்டு சில மணிநேரங்கள் இருந்துவிட்டு ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது!

என்னடா இப்படி ஒரு நாடிருந்தும் அகதி வாழ்க்கை!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...