Skip to main content

"அச்சே தின்" - ஒரு அறிமுகம்

 


இந்த புத்தகத்தை நான் சிறுகுறிப்புகளாக கடந்த சில ஆண்டுகளாக எழுதி வந்தேன். ஆனால் ஒரு முழு புத்தகமாக தொகுக்கும் போது ஒரு பயம் எட்டிப்பார்த்தது. அந்த பயம் ஒரு பெரும் அச்சமாக உருவெடுத்தது

நான் இந்நூலை எழுத ஆரம்பித்த போது இந்துத்துவத்தை எதிர்க்கிறவர்கள் கண்டிக்கப்படுவதும் மிரட்டப்படுவதுமே நடந்தது, அது பின்னர் விசாரணை, சிறைவாசம், படுகொலைகள் என பலவிதமான தண்டனைகளின் வடிவெடுத்தது, இப்போது எதிர்க்கிறவர்கள் எல்லா இடங்களில் இருந்தும் முழுமையாக காணாமல் அடிக்கப்படுகிறார்கள். இந்துத்துவத்தை எதிர்க்கிறவர்கள் இன்று தேசத்தை எதிர்க்கிறவர்களாக, ஒரு பொது துரோகியாக கட்டமைக்கப்படுகிறார்கள்; மக்கள் இந்த கட்டமைத்தலை எந்தளவுக்கு உள்வாங்கி உள்ளார்கள் என்றால் அதைத் தமது இயல்பான சுபாவமாக மாற்றிக்கொண்டுள்ளார்கள். நான் இப்போது வாழ்ந்து வரும் மாநிலத்தில் இந்த அரசை விமர்சிக்கிறவர்களை முன்பை விட மிக மிகக் குறைவாகவே காண்கிறேன். முன்பு வெளிப்படையாக சாடியவர்கள் இன்று அமைதி காக்கிறார்கள். அவர்கள் தம்மை யாரோ கண்காணிப்பதாக உள்ளுக்குள் பதறுகிறார்கள். அரசின் கண்காணிப்பை அவர்கள் தமக்குள் உணர ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் தம்மையே கண்காணிக்கிறார்கள். அவர்கள் தெரியாமலே சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டால் உடனே தம்மைச் சுற்றி ஒரு கவலையுடன் பார்க்கிறார்கள். பாதியிலேயே பேச்சை முறிக்கிறார்கள். நானும் மெல்ல மெல்ல இந்த மௌனத்தில் ஆழ்ந்துவிட்டேன்

இது ஒரு தனிமனித மௌனம் அல்ல, இது ஒரு கூட்டு மௌனம். இந்த சமூகம் மெல்ல மெல்ல பாஜக முகமூடிகளுக்கு ஏற்ப தன் முகத்தை மாற்றத் தொடங்கியுள்ளது. அது மெல்ல மெல்ல பாஜகவின் குரலை மிமிக்றி செய்வதே தனக்குப் பாதுகாப்பு எனும் நினைக்கத் தொடங்கியுள்ளது. மோடியை எதிர்ப்பதை நம்முடன் இருப்பவர்களே இன்று தந்தையை அடிப்பதைப் போல, தாயைப் புணர்வதைப் போல ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகப் பார்க்கிறார்கள். ஆனால் அதற்குக் காரணம் மோடியை விமர்சிப்பவர்கள் தனது பிளவுபட்ட மனத்தின் அடக்கி வைக்கப்பட்ட குரலே என இந்த சமூகம் புரிந்து கொள்வதில்லை என்பதே. வரலாற்றில் நாம் இவ்வளவு நோயுற்று முன்பு இருந்ததில்லை. இந்த சமூகத்திடம் போய் மோடியை விமர்சித்து உரையாடுவது அதை அம்பலப்படுத்துவதற்கு சமானமானது. அது இந்த சமூகத்தை கடுமையாக சீண்டும். அப்போது இச்சமூகம் வன்மத்துடன் எதிர்வினையாற்றும். சட்டத்தின், போலீசின் கரங்களில் இருந்து தப்பிக்கிறவர்களை இச்சமூகம் இனி மென்னியை நெரிக்கும் எனத் தோன்றுகிறது. இங்கிருந்து கொண்டு இந்நூலை வெளியிடுவது ஆபத்தானது எனத் தெரிந்தே தான் நான் செய்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...