Skip to main content

சிறந்த விற்பனை - 'புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்'


 

விருது நகர் புத்தகக் கண்காட்சியில் இந்தச் சிறுவர்கள் காலையில பரபரப்பாக உயிர்மை அரங்கில் நுழைந்து எதையோ தேடினர். சற்று நேரத்தில் ஏமாற்றத்துடன் வெளியே வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி என்ன வேண்டும் என்று கேட்டேன் பச்சை டி ஷர்ட் அணிந்த பையன் ' சார் திருக்குறள் குட்டி புக் இருக்கா ?" என்று கேட்டான். " இல்லையேப்பா..சுஜாதா திருக்குறள் விளக்கவுரைதான் இருக்கு" என்றேன். அப்போது மஞ்சள் சட்டை அணிந்த பையன் " சார் எனக்கு வேற ஒரு புக் வேணும்...ஆனா அது விலை ரொம்ப ஜாஸ்தி...370 ரூபாய் போட்டிருக்கு.."என்றான் ஏமாற்றத்துடன். "அந்த புக்கை எடுத்து வா" என்றேன். உள்ளே ஓடிபோய் எடுத்து வந்தான். அது ஆர். அபிலாஷ் எழுதிய " புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்" புத்தகம். "உங்கிட்ட எவ்வளவு காசு இருக்கு? " என்று கேட்டேன். " இருபது ரூபாய்தான் சார் இருக்கு "என்றான் கூச்சத்துடன். " பரவாயில்லை ..கொடு" என அதை வாங்கிக்கொண்டு அந்தப் புத்தகத்தை அவனிடம் கொடுத்தேன். அவனால் அதை நம்ப முடியவில்லை. அவன் கண்களிலில் புரூஸ் லீ என்ற கனவு வீரன் மின்னினான். நான் ஒரு எதிர்கால வாசகனை அடைந்தேன். " தாங்க்ஸ் அங்கிள்.." என்று உவகையுடன் கூறியபடி அந்தப் பையன்கள் உற்சாகத்துடன் சென்றனர். "சார்" என்ற சொல். "அங்கிள்" என்ற சொல்லாக மாறிய அபூர்வ கணம் இது.

இந்தக் கண்காட்சியில் உயிர்மையின் சிறந்த விற்பனை இதுதான்.

- மனுஷ்யபுத்திரன்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...