Skip to main content

இமையம் எனும் அசுரன்



குவெம்பு விருது பெறும் அண்ணன் இமையத்துக்கு வாழ்த்துக்களும் அன்பும்!
தனது எழுத்துக்கலை மீது இத்தனை நுட்பமான அறிவு கொண்ட மற்றொருவரை நான் கண்டதில்லை. அவருடைய எந்த நாவலை வேண்டுமெனிலும் எடுத்துக் கொள்ளுங்கள் அதன் துவக்கம் அவ்வளவு கச்சிதமாக இருக்கும். அதே போலத்தான் கதைக்களனை, அதில் வர வேண்டிய இரண்டாம் நிலை பாத்திரங்களை தேர்வு பண்ணுவது, இவர்களைத் தன் கதையின் அமைப்பின் இன்றியமையாத பகுதியாக்குவது, பிரதான பாத்திரங்களுக்கு நாவலுக்குள் சரியான இடமளிப்பது எனத் திட்டவட்டமாக வகுத்திருப்பார். ஒரு நாவலை நினைத்ததுமே அதன் பாத்திரங்கள் எழுந்து நம் கண்முன் நிற்பது இதனால் தான். இமையத்தின் புனைவுலகம் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்பட்டு பலமுறை எடிட்டிங் டேபிளில் முடுக்கி செறிவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தைப் போன்றது. இதற்கு மேல் ஓர் அங்குலம் கூட வெட்டியெடுக்க இடமில்லை எனும்படிக்கு சிக்ஸ்பேக் உடல் கொண்ட ஆணழகன் என அவரது நாவல்களின் வடிவத்தை சொல்வேன்.

இன்னொரு பக்கம் வசனங்களை ஒரு பாத்திரத்தின் பல்வேறு மனோலயங்களை, கதைசொல்லிக்கும் ஒரு பாத்திரத்துக்கும் பிற பாத்திரங்களுக்குமான எல்லைக்கோட்டை அழிக்கும்படியான அபாரமான பாய்ச்சல் கொண்டவையாக எழுதுவார். இந்த தஸ்தாவஸ்கிய எழுத்துப் பாய்ச்சல் வெகுவாக ஆராயத்தக்கது. இமையத்தின் நாவல்களின் உயிர், மானுட வாசம், ஈரம் இந்த வசனங்களில் இருந்தே எழுந்து வருகின்றன.

இறுதியாக அவர் தேர்வு செய்கிற வாழ்க்கை, அதன் அரசியல், அது தனித்துவமானது - இதுவே அதிகம் பேசப்படுவது. ஆனால் இமையம் இன்னும் அசுரத்தனமான ஆகிருதி கொண்ட படைப்பாளி. விரிவாக விவாதிக்கத்தக்கவர். தன்னை ஒரு சமூகத்தினுள் அடக்கிக் கொள்ள விரும்பாதவர். 

இதைப் போன்ற மேலும் பல போற்றத்தக்க விருதுகளை அவர் பெறட்டும்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...