Skip to main content

திருமணம் எனும் அண்டர்வேர்ல்ட்

இது ஒட்டுமொத்தமாக ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது. என்னுடைய அனுமானம் இருவருக்கும் இடையே உறவு மோசமான பின்னர் வேறு நபர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள்.
தன்னுடனான திருமணத்துக்கு முன்பு மற்றொரு திருமணம் செய்திருந்ததை மறைத்து திவ்யா தன்னை ஏமாற்றியதாகவும், தன் விருப்பத்தை மீறி திவ்யா கர்ப்பத்தைக் கலைத்ததாக அரணவ்வும், அரணவ் தன்னைத் தாக்கி கர்ப்பத்தைக் கலைத்ததாகவும் அவருக்கு வேறு பெண்ணுடன் உறவிருப்பதாக திவ்யாவும் கூறுகிறார். இரண்டுமே பாதி உண்மைகளாக இருக்க வேண்டும். உறவு முறியும் போது ஏற்படும் பகையுணர்வை சில ஆண்கள் வன்முறையாக வெளிப்படுத்துவார்கள். ஆனால் பெண்கள் தமக்கு சாதகமாக உள்ள சட்டங்கள், மகளிர் காவல்நிலையம் போன்ற அமைப்புகளைக் கொண்டு ஆண்களை சிறையில் தள்ளுவார்கள். இரு தரப்பையும் செலுத்துவது ஒரே உணர்வு தான்.

திருமணம் செய்வதால் இவ்வளவு பிரச்சினைகள் வருமெனத் தெரிந்தும் ஏன் போய் சிக்கிக் கொள்கிறார்கள்? ஓரினச் சேர்க்கையாளர்களைப் பாருங்கள், சமூக சட்ட அங்கீகாரம் பரவலாக இல்லாததாலே அடிதடி, நீதிமன்றம், வீட்டுமுன் தர்ணா, வரதட்சணை, அதன் பெயரில் போலி வழக்குகள், விவாகரத்து, அதற்காக பல ஆண்டுகள் தெருத்தெருவாக அலைதல் எதுவும் இன்றி அமைதியாக நேசித்து சேர்ந்து வாழ்ந்து ஆரவாரமின்றி பிரிந்தும் போய் விடுகிறார்கள். ஆனால் இருவர் உறவுக்குள் சமூகம், சட்டம் வந்ததும் பிரச்சினை, தகராறு, வழக்கு, பஞ்சாயத்து என பல பிரச்சினைகளும் கூடவே வருகின்றன. ஒட்டகம் நுழைந்ததைப் போல் இவர்கள் நுழையாத வரை சுபம்.

ஒருவிதத்தில் இருபாலின உறவாளர்கள் துரதிஷ்டசாலிகள். ஆண்-பெண் உலகம் ஒரு அண்டர்வெல்டாக மாறி வருகிறது. அவர்கள் இடையே போலீஸ், வக்கீல், நீதிமன்றம் புழங்குவது அதிகரித்து வருகிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...