Skip to main content

சாகித்ய அகாடெமி விருது - இரு வேண்டுகோள்கள்

இம்முறை யுவ புரஸ்கார் விருதைப் பெறும் ப காளிமுத்துவை வாழ்த்தி விட்டு இவ்விருது குறித்து இரு வேண்டுகோள்களையும் வைக்கிறேன்:
ஒன்று என் எழுத்துலக சகாக்களில் சிலருக்கு:

குறும்பட்டியலில் உள்ள சில நல்ல படைப்பாளிகளுக்கு விருது கிடைக்காதது காளிமுத்துவின் தவறல்லவே! நாம் அவரை புறவயமாக அவரது படைப்புகளை வைத்து தானே மதிப்பிட வேண்டும்? அதுதானே நியாயம்? நான் படித்த வரையில் விருதுபெறும் தகுதி அவருக்கு உண்டா எனில் உண்டு என்பேன். அதற்காக மற்றொருவருடன் ஒப்பிட்டு அவரளவுக்கு தகுதி உண்டா எனக் கேட்க அவசியம் இல்லை. குறும்பட்டியல் என்று ஒன்று உள்ளதாலே இது ஒரு போட்டி ஆகி விடாதே. மேலும் இலக்கியத்தில் என்ன மேல் கீழ் மதிப்பீடு?
ஆகையால் முன்பு மனுஷி பாரதிக்கு யுவ புரஸ்கார் கிடைத்த போது தம் நண்பர்களுக்கு கிடைக்கவில்லையே எனும் ஆற்றாமையில், எரிச்சலில் அவரை ஆளாளுக்கு கரித்துக் கொட்டி மறுத்ததைப் போல காளிமுத்துவுக்கும் செய்ய வேண்டாம். நாம் படைப்புகளை வைத்து பேசுவோம், படைப்பாளிகளை ஒப்பிட்டு வெறுப்பரசியல் பண்ண வேண்டாம். அதனால் நாம் மேலும் தனிமைப்படுவோம். ஒரு இளம்படைப்பாளியை சோர்வுறச் செய்வோம். அது தவறு!

இப்படி எதிர்மறையாக செயல்படாமல் ஜெயமோகன் செய்வதைப் போல நாம் முக்கியமெனக் கருதும் படைப்பாளிகளைப் பற்றி பல பக்கங்கள் எழுதிக் குவிப்போம். அவர்களுக்காக கருத்தரங்குகள், கூட்டங்கள், விவாதங்கள் நடத்தி ஒரு கலாச்சார அழுத்தத்தை ஏற்படுத்துவோம். அது அப்படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி மேலும் வெறித்தனமாக செயல்பட வைக்கும். மாறாக, எதிர்மறைக் கருத்துக்கள் நம்மை முடக்கிப் போடும்!

அடுத்து, சாகித்ய அகாடெமிக்கு:

 ஒவ்வொரு ஆண்டும் குறும்பட்டியலில் இடம்பெற்று மயிரிழையில் பரிசு வெல்லாதவர்கள் வயது வரம்பைக் கடந்த பின்னர் அவ்விருதைப் பெறும் வாய்ப்பை முழுமையாக இழக்கிறார்கள். அடுத்து பிரதான சாகித்ய அகாடெமி விருது தான் ஒரே வாய்ப்பு. ஆனால் அதற்காக அவர்கள் மேலும் 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே. இது கொடுமை இல்லையா?
இதை சரி செய்யும் பொருட்டு, இளம் படைப்பாளிகளில் ஒருவருக்கு மட்டும் கொடுக்காமல் புனைவு, கவிதை, அபுனைவு என வருடத்திற்கு மூன்று யுவ புரஸ்கார் விருதுகளை கொடுக்கலாமே? தேசிய திரைப்பட விருதுகள் இப்படி தனித்தனியாகத் தானே வழங்கப்படுகின்றன? இலக்கியத்தை ஒரு கூட்டு முயற்சியாகக் கொண்டால் அதில் கவிதை, கதை, நாவல், கட்டுரை என ஒவ்வொன்றும் நடிப்பு, பாடல், இயக்கம் போலத்தானே?
இவ்வாறு செய்தால் அடுத்த பத்தாண்டுகளில் 30 இளம் படைப்பாளிகள் யுவ புரஸ்கார் பெறுவார்கள். மேலும் பலர் ஊக்கம் பெற்று எழுத வருவார்கள். ஏற்கனவே எழுதுவொரும் நாம் வயது வரம்பு காரணமாக தவற விட்டோமே என ஆயுசுக்கும் வருந்தத் தேவையிருக்காதே. செலவென்று பார்த்தாலும் கூட ஒரு லட்ச. ஆகப் போகிறது. அது இன்றைய காலத்தில் ஒரு பெரிய செலவா? பின்னர் இந்நடைமுறையை பிரதான சாகித்ய அகாடெமி விருதுக்கும் பரிசீலித்துப் பார்க்கலாம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...