Skip to main content

தெருச்சண்டை குறிப்புகள்


 

இன்று ஒரு தெருச்சண்டையை பார்த்தேன். ஒரு கடையின் அகன்ற வாசல், அதை ஒட்டிய அகலமான நடைபாதை. ஒரு  பக்கம் இருபது பசங்க. எதிரில் இன்னொரு கூட்டம் பசங்க. நடுவில் சண்டையிடும் ரெண்டு இளைஞர்கள். ஒரு பையன் புல் ஓவர் அணிந்திருக்கிறான். இன்னொருவன் பார்மலாக ஆடையணிந்திருக்கிறான். முதல் பையன் இவனை மூஞ்சியிலே நான்கைந்து குத்துகள் குத்துகிறான். இவனோ எகிறி எகிறி முன்னே போய் அடிவாங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய நண்பர்கள் அவனை இழுத்துக் கொண்டு போகிறார்கள். இங்கு ஒதுங்கி நிற்கும் போதும் அவனுடைய முகம் சிவந்திருக்க கையை முறுக்கிக் கொண்டு என்னை விடுறா என்று கூறுகிறான். "எதற்கு போய் திரும்பவும் முகத்தில் குத்து வாங்கவா?" என்று எனக்குள் சிரித்துக் கொண்டேன்.


நான் அந்த பையன் அடிவாங்காதிருக்க என்ன பண்ணியிருக்க வேண்டும் என யோசித்தேன்:

அவன் செய்த முதற் தவறு முன்னே முன்னே சென்று கொண்டிருந்தது. ஒருவர் நம்மை அடிக்க வரும் போது வலதுகாலை வலப்பக்கமாக நகர்ந்திட வேண்டும். இப்போது அடிக்கிறவரின் குத்துக்கள் மிஸ் ஆக அவர் தன் சமநிலையை இழப்பார். வேண்டுமென்றால் அவருக்கு ஒரு உதை கொடுத்து கீழே தள்ளலாம். அல்லது ஓடி வந்து விடலாம்.

அடுத்த தவறு முன்னே போகும் போது கைகளை தாழ்வாக வைத்திருந்தது. எப்போதுமே கைகள் தோள் அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அப்போதே - அவன் ஓரளவுக்கு பயிற்சி பெற்றவன் என்றால் - பிளாக் செய்தபடியே திரும்ப சில குத்துக்கள் கொடுத்திருக்க முடியும். கைகள் தாழ்வாக இருக்கும் போது அவனுடைய முகம் அடிக்க தோதாக தடுப்பின்றி இருப்பதுடன் திரும்ப அடிக்கணும் என இவன் நினைக்கும் போதே முகத்தில் குத்துக்கள் விழுந்து கொண்டே இருக்கும்.


மூன்றாவதாக அவன் வலப்பக்கமாக விலகி அந்த குத்துக்களை மிஸ் பண்ணி விட்டு ஒரு வலதுகை ஹூக்கை அடித்திருக்க வேண்டும். அப்போது எதிராளி சமநிலை இழந்து முன்னே தடுமாறிப் போயிருப்பான். அடி தலையின் வலப்பக்கமாக விழுவதால் லேசாக தலைசுற்றும். அந்த அவகாசத்தை பயன்படுத்தி அவனுக்கு முன்னே போய் - எதிராளியின் தலை அப்போது தாழ்வாக இருப்பதால் - ஒரு அப்பர் கட் அடித்து அவனுடைய தாவாக்கட்டையை தாக்கிட வேண்டும். அடுத்து உடனே மற்றொரு வலதுகை ஹூக். அவ்வளவு தான் அந்த பையன் அரைமயக்கத்துக்கு போய் விடுவான். 3-4 வினாடிகளுக்குள் நாக் அவுட் ஆகியிருக்கும். ஆனால் இந்த அடிவாங்கின பையன் அவமானத்தில் அடுத்த சில நாட்களுக்கு மறுகிக் கொண்டே இருப்பான். கோபத்தை தீர்க்கத் தெரியாமல் மனதுக்குள் பழிவாங்க கற்பனை பண்ணிக் கொண்டிருப்பான். சரக்கடிப்பான். ஆனால் இனி அதனால் என்ன பயன்?

சண்டை முடிந்த பிறகு அந்த முகத்தில் குத்தின பையன் எங்கே என்று பார்த்தேன். அவன் அடிகொடுத்த கிளர்ச்சியில், சிறிய பதற்றத்தில், சிரித்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தான்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...