Skip to main content

Posts

Showing posts from August, 2022

தெருச்சண்டை குறிப்புகள்

  இன்று ஒரு தெருச்சண்டையை பார்த்தேன் . ஒரு கடையின் அகன்ற வாசல் , அதை ஒட்டிய அகலமான நடைபாதை . ஒரு   பக்கம் இருபது பசங்க . எதிரில் இன்னொரு கூட்டம் பசங்க . நடுவில் சண்டையிடும் ரெண்டு இளைஞர்கள் . ஒரு பையன் புல் ஓவர் அணிந்திருக்கிறான் . இன்னொருவன் பார்மலாக ஆடையணிந்திருக்கிறான் . முதல் பையன் இவனை மூஞ்சியிலே நான்கைந்து குத்துகள் குத்துகிறான் . இவனோ எகிறி எகிறி முன்னே போய் அடிவாங்கிக் கொண்டிருக்கிறான் . அவனுடைய நண்பர்கள் அவனை இழுத்துக் கொண்டு போகிறார்கள் . இங்கு ஒதுங்கி நிற்கும் போதும் அவனுடைய முகம் சிவந்திருக்க கையை முறுக்கிக் கொண்டு என்னை விடுறா என்று கூறுகிறான் . " எதற்கு போய் திரும்பவும் முகத்தில் குத்து வாங்கவா ?" என்று எனக்குள் சிரித்துக் கொண்டேன் . நான் அந்த பையன் அடிவாங்காதிருக்க என்ன பண்ணியிருக்க வேண்டும் என யோசித்தேன் : அவன் செய்த முதற் தவறு முன்னே முன்னே சென்று கொண்டிருந்தது . ஒருவர் நம்மை அடிக்க வரும் போது வலதுகாலை வலப்பக்கமாக நகர்ந்திட வேண்டும் . இப்போது அடிக்கிறவரின் குத்துக்கள் மி...

சாகித்ய அகாடெமி விருது - இரு வேண்டுகோள்கள்

இம்முறை யுவ புரஸ்கார் விருதைப் பெறும் ப காளிமுத்துவை வாழ்த்தி விட்டு இவ்விருது குறித்து இரு வேண்டுகோள்களையும் வைக்கிறேன்: ஒன்று என் எழுத்துலக சகாக்களில் சிலருக்கு: குறும்பட்டியலில் உள்ள சில நல்ல படைப்பாளிகளுக்கு விருது கிடைக்காதது காளிமுத்துவின் தவறல்லவே! நாம் அவரை புறவயமாக அவரது படைப்புகளை வைத்து தானே மதிப்பிட வேண்டும்? அதுதானே நியாயம்? நான் படித்த வரையில் விருதுபெறும் தகுதி அவருக்கு உண்டா எனில் உண்டு என்பேன். அதற்காக மற்றொருவருடன் ஒப்பிட்டு அவரளவுக்கு தகுதி உண்டா எனக் கேட்க அவசியம் இல்லை. குறும்பட்டியல் என்று ஒன்று உள்ளதாலே இது ஒரு போட்டி ஆகி விடாதே. மேலும் இலக்கியத்தில் என்ன மேல் கீழ் மதிப்பீடு? ஆகையால் முன்பு மனுஷி பாரதிக்கு யுவ புரஸ்கார் கிடைத்த போது தம் நண்பர்களுக்கு கிடைக்கவில்லையே எனும் ஆற்றாமையில், எரிச்சலில் அவரை ஆளாளுக்கு கரித்துக் கொட்டி மறுத்ததைப் போல காளிமுத்துவுக்கும் செய்ய வேண்டாம். நாம் படைப்புகளை வைத்து பேசுவோம், படைப்பாளிகளை ஒப்பிட்டு வெறுப்பரசியல் பண்ண வேண்டாம். அதனால் நாம் மேலும் தனிமைப்படுவோம். ஒரு இளம்படைப்பாளியை சோர்வுறச் செய்வோம். அது தவறு! இப்படி எதிர்மறையாக ச...

ப. காளிமுத்துவிற்கு வாழ்த்துகள்

ப. காளிமுத்துவின் இக்கவிதையை பாருங்கள், எவ்வளவு அழகாக இருக்கிறது: "மழைத் துளிகள் கூட்டாகி  திரண்டு கீழிறங்குகிறது  அவைகள் துளித்த போதிருந்த தெருக்குழாய் வசைக்கதைகள் கோணல்மானலாக மாறிக் கூட்டாகத் துவங்கியது  அதன் துளிகள் முன்னுக்குப் பின் மாறி இத்தெருக்காரியின் பெயர்  அடுத்த தெருக்காரனின் பெயரென திரட்சியில் மாட்டிக் கொண்டது  அதனடி ஓயாது ஒலியெழுப்பிக் கொண்டிருந்த வெள்ளைக்கோழி அங்கு ஒதுங்கியிருந்த கிழவனாகியிருந்தது அம்மழைத் திரட்டு தரையில் விழுந்து சிதறிய சமயம் சிறு விசும்பல்கள் மேலெழ அதை மறுப்பதாய் சில தென்னம்பூக்கள் பரவிக் கிடந்தன." காளிமுத்துவிடம் ஒரு அபாரமான கவி ஒழுக்கு (poetic flow), சரளத்தன்மை, காட்சிபூர்வமான மொழிநடை இருக்கிறது. வண்ணதாசனின் மென்னுணர்வு, கற்பனாவாதம், முகுந்த நாகராஜனின் வளர்ந்தவர்களின் அன்றாட உலகில் உள்ள குழந்தைமை, அது சார்ந்த ஒரு விளையாட்டு உள்ளது. இந்த இரண்டு கவிகளின் தாக்கத்தை அதிகமாக நான் காளிமுத்துவிடம் காண்கிறேன். அடுத்து, காளிமுத்துவின் படைப்புலகின் ஒரு பிரதான வசீகரமாக அதன் துல்லியமான காட்சி ஒழுங்கு - கிட்டத்தட்ட சினிமா மொழியை நினைவுபடுத்...

ஒரு கலைஞன் / எழுத்தாளன் / மனிதன் பற்றற்று இருக்க வேண்டுமா?

“ இளையராஜாவின் பொன்விதிகள் ” என்றொரு கட்டுரையில் ஜெயமோகன் இளையராஜா எந்தளவுக்கு உலக வாழ்வில் பற்றற்றவர் , புற உலகின் அரசியல் பற்றின அக்கறையற்றவர் , மிச்சம் வைக்காமல் தன்னை கலைக்கு ஒப்புக் கொடுத்தவர் , அதற்கான ஒழுங்கைப் பேணுகிறவர் என்று சிலாகிக்கிறார் . இதில் என்னைத் தூண்டிய விசயம் பற்று என்பதே . ஒரு கலைஞன் லௌகீகத்தில் பற்றற்றவன் எனும் தொன்மமானது இங்கு கா . ந . சு காலத்தில் இருந்தே இருக்கிறது . ( அதற்கு முன் சங்க கால கவிஞர்கள் பரிசிலுக்கு பாட்டெழுதினார்கள் என்னும் நம்பிக்கை இதன் எதிரிடையோ ?) இன்று அரசவைப் புலவர்களின் இடத்தில் சினிமா கலைஞர்கள் வந்து விட்டமையால் ஜெயமோகன் ராஜாவை மட்டும் கா . ந . சுவாக புனைகிறார் என நினைக்கிறேன் . அல்லது அது அவர் கண்ட இளையராஜாவாக நிஜமாகக் கூட இருக்கலாம் . என் ஆர்வம் கலைஞனின் பொன்விதிகளில் ஒன்றாக பற்றற்று இருத்தலைக் கூறலாமா என்பதே . நான் என்னையே எடுத்துக் கொள்கிறேன் . எழுத ஆரம்பித்தால் எனக்கு சாப்பிடுவது , உடற்பயிற்சி செய்வது ஏன் வேலைக்குப் போவது கூட மறந்து போகும் . ஒரு...