Skip to main content

மூன்று வினாடி வைத்தியர்

முதுகுவலி ஒரு விசித்திரமான பிரச்சனை. கை, காலில் காயம் ஏற்பட்டால் ஓய்வு கொடுத்து சரி செய்வதைப் போல முதுகுக்குப் பண்ண முடியாது. மோசமான காயம் என்றால் மாதக்கணக்கில் படுத்துக் கொண்டிருக்கவும் இயலாது

கை, கால் வலியைப் போல் அல்லாது முதுகு வலி கால்களுக்கும் பரவும். உங்களுடைய எல்லா வேலைகளையும் பரணில் தூக்கிப் போட வைக்கும். அதனாலே நான் முதுகுவலியை கடுமையாக அஞ்சுகிறேன். எனக்கு எல்லா தசை, எலும்பு காயங்கள் குறித்தும் பயம் அதிகம் தான், என்றாலும் முதுகுவலி தான் பட்டியலில் முதலிடம் பிடிக்கும். முதுகுவலி மிக லேசாக தென்பட்டாலும் நான் விடுப்பெடுத்துக் கொண்டு படுத்து ஓய்வெடுப்பேன். மருத்துவரை உடனடியாகக் காண்பேன். ஏனென்றால் சனியன் வந்தால் போகாது என அறிவேன். அதனால் அதை வாசலோடே நிறுத்தி அனுப்பி விடுவது என் வழக்கம்.


ஒரு எழுத்தாளனாக நான் என் கை, கண்ணுக்கு அடுத்தபடியாக முதுகையே மிக முக்கியமாக நினைக்கிறேன்.


முதுகுவலியின் மற்றொரு மர்ம சுபாவம் நமக்கு வேறு பிரச்சனைகள் உடம்பில் ஏற்பட்டாலும் முதுகுவலி மாறுவேஷத்தில் எங்கேயோ பதுங்கிக் கொள்ளும் என்பது. எல்லா பிரச்சனைகளும் வலிகளும் மறைந்த பின்னர்ஹலோ சார்என முதுகுவலி புதரில் இருந்து கைதூக்கிக் கொண்டு எழுந்து வரும். வந்தால் உங்களை ஓட ஓட விரட்டும்.


 இந்த வலிகளில் மனவலியும் சேரும். நான் கடும் மனச்சோர்வில் இருக்கையில், தினமும் அழுது கொண்டிருக்கையில் முதுகுவலி மிகுந்த பரிவுடன் வெளியிலேயே பொறுமையாக நின்றிருக்கும். மனம் சாந்தி அடைந்ததும் அது என்னை ஆறுதல்படுத்தும் நோக்கில் ஒரு பூங்கொத்துடன் வீட்டுக்குள் வரும். இந்த நல்லியல்பை நீங்கள் வேறு வியாதிகளிடம் காண முடியாது.


முதுகுவலிக்கான மருந்து, சிகிச்சை செலவு பிடித்தவை. வலி நிவாரணிகள் என்பதால் சிறுநீரகத்தை பழிவாங்கக் கூடியவை. ஆனால் பிரச்சனை சரியாகும் எனும் உத்தரவாதம் இல்லாதவை. உங்களுடைய ஓய்வு, உடற்தகுதி, அதிர்ஷ்டம் ஆகியனவே காப்பாற்றும். எனக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு தோளில் காயம் ஏற்பட்ட போது மருத்துவர் பார்த்து விட்டுசின்ன காயம் தாங்க, மூன்று மாதங்களில் சரியாகி விடும். ரொம்ப மாத்திரை எடுத்துக்க வேண்டாம்என்றார். நானும் காத்திருந்தேன், காத்திருந்தேன், காலத்தின் எல்லை வரை காத்திருந்தேன். அண்மையில் தான் அந்த வலி சரியானது. எல்லா எலும்பு, தசை பிரச்சனைகளுக்கும் இந்த சிக்கல் உண்டு - உடம்பாகத் தான் அவற்றை சரியாக்க முடியும்.


 மணவாழ்க்கை ஓராண்டு என்றால் விவாகரத்து முடிய ஐந்தாறு ஆண்டுகள் என்பதைப் போல் என் நண்பர் ஒருவருக்கு முதுகுவலியென்பது தீராத தலைவலியைப் போல கூடவே தொத்திக் கொண்டது. அவர் பெங்களூர் புறநகரில் உள்ள ஒரு நரம்பு / வர்ம வைத்தியரிடம் சென்றார். போனதும் ஸ்கேன் எடுத்துப் பார்ப்பார்கள். அடுத்து அவரை ஒரு மேஜை மீது மல்லாக்க படுக்க வைத்து பெல்ட்டுகளைப் போட்டு மேஜையுடன் கட்டி விடுவார்கள். அடுத்து வைத்தியர் வருவார். சிஷ்யர்கள் என் நண்பரை இறுக்கப் பிடித்துக் கொள்ள வைத்தியர் தன் காலை மடித்து முதுகின் ஓரிடத்தில் வைத்து ஒரு அழுத்து. அவ்வளவு தான். மூன்றே நொடியில் சிகிச்சை முடிந்து விடும். எழுந்ததும் நண்பர் தன் உடல் ஒரு இறகைப் போல ஆகி விட்டதாக உணர்வார். வலியெங்கே என்றுஸ்காட்லாண்ட் யார்டானநமது தமிழக் போலிசாரே வந்து தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. சில நேரம் இப்படி ஊரைப் பார்க்க போன வலி திரும்பாது. சில நேரம் நண்பர் ஓவராக வேலை பார்த்து தொல்லை கொடுத்தால் அது ஏதாவது ஒரு லாரியில் ஏறி திரும்ப வந்து அவரது முதுகில் தொத்திக் கொள்ளும்


துரதிஷ்டவசமாக இந்த நரம்பு / வர்ம வைத்தியருக்கு பெங்களூருக்குள் சீடர்களோ மருத்துவமனைகளோ இல்லை. இருந்தால் அவர் இந்நேரம் கோடீஸ்வரராகி இருப்பார். எல்லா எலும்பு மருத்துவர்களும் ஊரை விட்டே ஓடியிருப்பார்கள். அல்லது இந்த நரம்பு / வர்ம வைத்தியர் நீண்ட தாடி வைத்து கார்ப்பரேட் சாமியாராகி இருந்திருந்தால் இந்நேரம் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆகியிருப்பார்

 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...