Skip to main content

வெட்கமாக இல்லையா?




இளையராஜாவுக்கு எதிராகப் பேசுவோரின் கோபத்தை நான் புரிந்து கொள்கிறேன். அதே நேரம் ரஜினியும் கமலும் ஓட்டுபிரிக்கும் அரசியலில் கடந்த ஆண்டு முழுக்க ஈடுபட்ட போது, பாஜகவின் நேரடி, மறைமுக பிரச்சார படைகளாக அவர்கள் செயல்பட்ட போது அவர்களும் விமர்சிக்கப்பட்டார்கள், ஆனால் எந்த பத்திரிகையாளரும் அரசியல்வாதியும்நீ”, “வா”, “போஎன ஒருமையில் அவர்களை அழைத்து சாடவில்லை. ஆனால் இளையராஜா என்றதும் சவுக்கு சங்கர், பத்திரிகையாளர் மணியில் இருந்து .வி.கி.எஸ் இளங்கோவன் வரை பொதுமேடை மாண்பின்றி அவரை ஒருமையில் அழைத்து ஏசுவதை எப்படி நாம் புரிந்து கொள்வது? கேட்டால்தார்மீகக் கோபம்”, “இது தான் தமிழக மேடைக் கலாச்சாரம்என சமாளிக்க வேண்டியது? நம்மிடையே எவ்வளவு சாக்கடைகள் ஓடுகின்றன என கண்டுகொண்ட தருணமாக இது அமைந்து விட்டது. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.


மணியின் பேட்டி சற்று வேடிக்கையாகவே இருந்தது - “மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவதற்கு இளையராஜாவுக்கு அத்தனை உரிமைகளும் உண்டு. ஆனால் அவரை கடுமையாக விமர்சிக்க இந்த மாநில மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டுஎன்று திரும்பத் திரும்ப கூறுகிறார். இதில் ஏதாவது தர்க்கம் இருக்கிறதா? “அவனைக் கத்தியால் குத்துவதற்கு உனக்கு அத்தனை உரிமைகளும் உண்டு, ஆனால் அவனது ஆதரவாளர்களுக்கு உன்னையும் கத்தியால் குத்தவும் அத்தனை உரிமைகளும் உண்டுஎனக் கூறுவதைப் போலிருக்கிறது


ராஜா-மோடி சர்ச்சை ஆரம்பித்ததில் இருந்து தமிழகம் ஒட்டுமொத்தமாக ஒரு பைத்தியக்கார விடுதியாகி விட்டது என நினைக்கிறேன். ராஜா அந்த நூலுக்கு முன்னுரை வழங்கி இருக்கக் கூடாது தான், ஆனால் நமக்கு உடன்பாடில்லாத காரியத்தை அவர் செய்தால் அதற்கு எதிர்வினையாற்ற ஒரு முறைமை, நாகரிகம், கண்ணியம் வேண்டும்


இப்போது நடப்பது ராஜாவை யார் சொந்தம் கொண்டாடுவது எனும் பிரச்சனையே. அவர் எந்த சொந்த கருத்தையும் நமக்கு எதிராக கொண்டிருக்கக் கூடாது, அவரது நடத்தை மீது நமக்கு முழு கட்டுப்பாடும் வேண்டும், இல்லையென்றால் கடுமையாக சாடி அவரை அவமதிப்போம், கடும் சமூக அழுத்தத்தை செலுத்துவோம் என மிரட்டுகிறோம். யோசித்துப் பாருங்கள் - நமக்கு இணையாக நாம் கருதுபவர்களை இப்படி செய்வோமா? இல்லை. இதுவரை குழந்தைகள், பெண்களையே இப்படி நடத்துவது நமதுமரபு’. நாம் ஒருவரை நேசிக்கையில் அவர் நமக்கு இணையான தனிமனிதர் எனும் கோணத்திலே நேசிக்க வேண்டும். ஆனால் ராஜாவை அப்படி இணைவைக்க நாம் விரும்புவதே இல்லை. ஒன்று அவரை நமக்கு கீழாக எண்ணி காறித் துப்புகிறோம் அல்லது தலைக்கு மேல் தூக்கி வைத்து தெய்வமென கொண்டாடுகிறோம். இதை இரண்டையும் நாம் ராஜாவுக்கு மாறி மாறி செய்திருக்கிறோம். இரண்டையும் செய்வதன் நோக்கமே சமத்துவம் தர மாட்டோம் என்பதால் தானே? ஒரு பெண்ணை வேசி என்றும், தெய்வம் என்றும் ஒரே சமயம் அழைப்பது போலல்லவா இது? அவர் மீது இத்தனை உரிமைகளை நமக்கு தந்தது யார்? அவர் தந்தாரா? இல்லையே.


ராஜாவின் சாதியை அவருக்கான கவசமாக நான் இங்கு கொண்டு வருகிறேன் என நீங்கள் கருத வேண்டாம். அது என் நோக்கமல்ல. நாம் தாழ்வாக நினைக்கும் பலருக்கும் இதே நடைமுறையைத் தான் வைத்திருக்கிறோம் என்கிறேன். நாம் ஏற்றுக் கொள்ளாத அரசியலைக் கொண்ட எழுத்தாளர்களையும் இவ்வாறே நடத்துகிறோம். ஆனால் ஜெயலலிதாவை ஒருவரும் பேஸ்புக்கிலோ பேச்சாளர்கள், பத்திரிகையாளர்கள் ஊடகங்களிலோ ஒருமையில் பேசி கடந்த இரு பத்தாண்டுகளில் நான் கண்டதில்லை. ஆனால் பிற நடிகைகள் அப்படி பேசப்பட்டு பார்த்திருக்கிறேன். இந்த வித்தியாசம் தான் நமது பிரச்சனை என்கிறேன். நமக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வை விரும்பும் ஒரு மனம் இந்த சந்தர்பங்களில் எல்லாம் விழித்துக் கொள்கிறது. சாதியம் இதில் ஒரு பகுதி. சும்மா சும்மா சமூகநீதியை விரும்பும் மாநிலம் என கதறிக் கொண்டிருந்தால் போதாது, அதை நடைமுறையிலும் காட்ட வேண்டும்


 இந்த சர்ச்சையின் முடிவில் நாம் இழிவானவர்களாக எஞ்சியிருக்கிறோம்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...