Skip to main content

நம்பியார்



நம்பியாரின் உடல்மொழியும் குரலும் மிகிக்றி கலைஞர்களால் அவ்வப்போது பகடி செய்யப்படுவது. ஏனென்றால் அது தனித்துவமானதுதனது பாணியை திரும்பத் திரும்ப போலச்செய்து தேய்வழக்காக்கினார். அதே நேரம் அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை அவரது கறுப்பு காலத்துப் படங்களில் இருந்துஜெண்டில்மேன்வரை கவனிக்கையில் புரிகிறது. எம்.ஜி.ஆர் தனதுநான் ஏன் பிறந்தேன்?” நூலின் இரண்டாம் பாகத்தில் நம்பியார் பற்றி சில சுவாரஸ்யமான கதைகளை பகிர்ந்து கொள்கிறார். அவற்றில் இரண்டு அவதானிப்புகள் முக்கியமானவை.


  1. நம்பியார் நாடக மேடையிலோ, படக்காட்சியிலோ ஒரு பாத்திரத்தைத் திரும்பி நோக்கும் போது கழுத்தை மட்டும் திருப்புவதில்லை, மொத்த உடலையும் இடுப்பில் இருந்து திருப்பிப் பார்ப்பார். இது வேறு நடிகர்கள் செய்யாதது என்பதுடன் இது அவரது பாத்திரத்தின் தீமையான இயல்பை சித்தரிக்க உதவியது என்கிறார். இது ஏன் என்று யோசித்தேன். எவ்வளவு யோசித்தும் புரியவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் சொல்வதில் உண்மையும் உண்டு தான். இன்று காலையில் என்னுடைய நாய் சட்டென தலையை முழுமையாக என்னை நோக்கித் திருப்பி கொட்டாவி விட்டது போது புரிந்தது - அப்படி முழுமையாக 180 கோணத்தில் உடலைத் திருப்பிப் பார்ப்பது மிருகங்களின் குணம். ஒரு புலி நம்மை நேராகப் பார்ப்பதை விட சட்டெனத் திரும்பி அவ்வாறு நோக்கினால் அதிர்ந்து உறைந்து போவோம். நம்பியார் மெதுவாக இடுப்பில் இருந்து திரும்பி நோக்கும் போதெல்லாம் நம் உபமனத்துக்கு ஒரு இரைகொல்லியைப் போல தொனிக்கிறார். இதைத் தெரிந்தோ தெரியாமலோ அவர் பண்ணிப் பார்த்து தன் பாணியாக வளர்த்திருக்கலாம். இந்த பாணியை பின்னர் சிறப்பாக பயன்படுத்திய நவீன நடிகர் ரஜினிகாந்த். . ராமசாமி சொல்வதைப் போல ரஜினியும் விலங்குகளின் உடல்மொழியை தன் உடல்மொழியில் கொணர்ந்து நடிக்கிறவரே.
  2. நம்பியாரால் சட்டென தன் குரலை மென்மையில் இருந்து கடுமையான ஒன்றாக மாற்றி பார்வையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முடியும் என்கிறார் எம்.ஜி.ஆர். .தா., “ஜெண்டில்மேன்படத்தில் நம்பியார் ஒரு மென்மையான, கனிவாக நபராக தன் குரலைக் கொண்டே நடித்துதோற்றமளிப்பார்’. ஆனால்எங்க வீட்டுப் பிள்ளையில்அவரது குரலின் கடுமை வேறாக இருக்கும். இந்த பாணியை அந்த கால நாடக, சினிமா நடிகர்கள் பின்பற்ற முயன்றனர், ஆனால் யாராலும் நம்பியார் அளவுக்கு குரலின் கடுமையை, அளவை சரளமாக மாற்றி மனவியல்பை வெளிப்படுத்த முடியவில்லை என்கிறார் எம்.ஜி.ஆர்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...