Skip to main content

Posts

Showing posts from March, 2022

நம்பியார்

நம்பியாரின் உடல்மொழியும் குரலும் மிகிக்றி கலைஞர்களால் அவ்வப்போது பகடி செய்யப்படுவது . ஏனென்றால் அது தனித்துவமானது .  தனது பாணியை திரும்பத் திரும்ப போலச்செய்து தேய்வழக்காக்கினார் . அதே நேரம் அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை அவரது கறுப்பு காலத்துப் படங்களில் இருந்து “ ஜெண்டில்மேன் ” வரை கவனிக்கையில் புரிகிறது . எம் . ஜி . ஆர் தனது “ நான் ஏன் பிறந்தேன் ?” நூலின் இரண்டாம் பாகத்தில் நம்பியார் பற்றி சில சுவாரஸ்யமான கதைகளை பகிர்ந்து கொள்கிறார் . அவற்றில் இரண்டு அவதானிப்புகள் முக்கியமானவை . நம்பியார் நாடக மேடையிலோ , படக்காட்சியிலோ ஒரு பாத்திரத்தைத் திரும்பி நோக்கும் போது கழுத்தை மட்டும் திருப்புவதில்லை , மொத்த உடலையும் இடுப்பில் இருந்து திருப்பிப் பார்ப்பார் . இது வேறு நடிகர்கள் செய்யாதது என்பதுடன் இது அவரது பாத்திரத்தின் தீமையான இயல்பை சித்தரிக்க உதவியது என்கிறார் . இது ஏன் என்று யோசித்தேன் . எவ்வளவு யோசித்தும் புரியவில்லை . ஆனால் எம் . ஜி . ஆர் சொல்வதில் உண்மையும் உண்டு தான் . இன்று காலையில் என்னுடைய ...

சல்யூட்

  ரோஷன் ஆண்டிரூஸின் “ மும்பைப் போலீஸ் ” எனக்குப் பிடிக்கும் . குறிப்பாக அதன் கிளைமேக்ஸை அமைத்திருந்த விதம் . ரோஷன் ஆண்டிரூஸுக்கு ஒரு புலனாய்வாளனின் பிறழ்வு , அதனால் அவன் செய்யும் குற்றம் , அதனால் அவனுக்குள் நேரும் உள்போராட்டம் என்பதைப் பேச விருப்பம் அதிகம் என நினைக்கிறேன் . அண்மையில் வந்துள்ள “ சல்யூட்டும் ” அப்படியானதே . போலீஸார் தாம் சரி என நம்பும் ஒன்றுக்காகவும் , அரசியல் அழுத்தத்துக்காகவும் ஆதாரங்களை ‘ விதைத்து ’ ஒருவரைக் குற்றவாளி ஆக்குவதே கதைக்களம் . இந்த குழுவில் ஒரு இளம் அதிகாரி , நியாய தர்மத்தை நம்புகிறவர் இருக்கிறார் ( துல்கர் சல்மான் ), அவருக்கும் சக போலிஸ் அதிகாரிகளுக்கும் ஏற்படும் மோதலே படம் . கூடவே “ தங்கப் பதக்கம் ” பாணியில் குடும்பத்துக்கும் லட்சியத்துக்குமான உணர்ச்சி மோதலும் ( அப்பா vs மகனுக்குப் பதில் தம்பி vs அண்ணன் ) வருகிறது . இது கதையை சிக்கலாக்குகிறது ; நல்ல டிராமாவுக்கு வழிவகுக்கிறது . உண்மை நிலைநாட்டப்படுகிறதா இல்லையா என்பதை ஒரு திரில்லர் பாணியில் பரபரப்பாக இறுதிக் காட்சி வரை கொண்...

ஒருநாள் மாறும்

  நீங்கள் வேலையில்லாமல் இருக்கலாம் , தொடர் தோல்விகளால் துவண்டிருக்கலாம் , ஒரு மோசமான உறவில் மாட்டிக் கொண்டிருக்கலாம் , முதுமையின் கடலை எப்படி நீந்திக் கடப்பது என தெரியாமல் தவிக்கலாம் , அல்லது இப்போது நான் அனுபவிப்பதைப் போல நீதிமன்ற வழக்கொன்றில் சிக்கி வருடக்கணக்காக அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம் . எப்படியாயினும் நமக்கெல்லாம் ஒரே ஆறுதல் துன்பம் சூழ்நிலைகளிலிருந்தே வருகிறது , நம்மிலோ பிறரிலோ இருந்தல்ல என்பது . ஒரு ஸ்விட்சைப் போட்டது போல சூழல் ஒரு நாள் மாறும் , அன்று வெளிச்சம் எங்கும் நிறையும் , மகிழ்ச்சி எங்கிருந்தோ வந்து நம்மைத் தழுவிக் கொள்ளும் . அதுவரை அமைதியாக சகித்துக் கொள்வதே நம்மிடம் உள்ள சிறந்த தீர்வு . அதே நேரம் அநீதி நடந்தால் பொறுக்காமல் எதிர்த்துப் போராடுவதும் அவசியம் . ஆனால் ஒரு போது நம்மால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என பிடிவாதமாக நம்புதல் கூடாது . அது நம்மை கடுமையான அழுத்தத்துக்குள் தள்ளி விடும் . காலம் தானே கனியட்டும் என பொறுமை காத்திடல் வேண்டும் . புரூஸ் லீ மூங்கில் மரங்களைப் ...

ஒரு விருப்பம்

உலகில் நான் கடுமையாக வெறுக்கக் கூடியது மோசமான வேலையோ , காதல் முறிவோ , வியாதியோ , மரணமோ அல்ல . அது பயணம் .   ஏனென்றால் என்னிடம் கார் இல்லை . நான் சென்னைக்கோ அதைப் போன்ற பிற இடங்களுக்கோ பயணத்திற்கு பேருந்துகளையே நம்பி இருக்கிறேன் . ரயில் நிலையம் என் வீட்டில் இருந்து அதிக தொலைவில் இருக்கிறது . அதில் டிக்கெட் எடுப்பதற்கும் நீண்ட   நாட்களுக்கு முன்பே புக் செய்ய வேண்டும் . அப்படியே கிடைத்து விட்டாலும் ரயில் நிலையத்தில் நிறைய சிரமப்படே என் வண்டி நிற்கும் இடத்திற்கு நான் போக முடியும் . அந்த வழியில் படிக்கடுகள் உள்ளிட்ட பல தடைகள் இருக்கும் . விமானம் என்றால் அதன் கட்டணத்திலே என் பாதி சம்பளம் போய் விடும் என்பதால் சாத்தியமில்லை .   இந்த பேருந்துகள் விசித்திரமாக அமைக்கப்பட்டவை - பெரிய உயரமான படிக்கட்டுகளைக் கொண்டவை . என்னால் ஒரு எட்டில் ஒரு படிக்கட்டில் ஏற முடியாது . நான் பெரும்பாலும் உட்கார்ந்து உட்கார்ந்து ஊர்ந்து தான் ஏற வேண்டும் . அதுவும் படிக்கட்டு முடிந்து பேருந்தின் உள்வாயில் இருக்கிறதே...