Skip to main content

“ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” - சில கேள்விகளும் பதில்களும்



என்னுடைய “ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” நாவல் குறித்து உங்களுக்கு எழக் கூடிய சில கேள்விகளுக்கு முன்கூட்டியே பதில்களை கீழே தருகிறேன்:


1) இது எம்மாதிரியான நாவல்?


இது ஒரு துப்பறியும் நாவல். பின்நவீன பாணியில் (வாசிப்புக்கு முடிந்தவரை இடைஞ்சல் இல்லாமல் சரளமாக) எழுத முயன்றிருக்கிறேன்.


2) இது துப்பறியும் நாவலா? இலக்கிய நாவலா?


 இந்நாவலின் உள்ளே நீங்கள் பயணிக்கும் போது அதற்கு வெளியே உள்ள கதைத்தளத்துக்கு அப்பால் இது மனிதனின் தன்னிலையானது எப்படியானது, நம்மை அறிவதில் நமக்குள்ள போராட்டம் என்ன என்பதைப் பற்றியும் பேசி இருக்கிறேன். ஆக இது வெறுமனே ஒரு மேலோட்டமான துப்பறியும் நாவல் அல்ல. என்னதான் ஒரு வெகுஜன வடிவத்தில் சங்கதிகளைக் கொண்டு சுவாரஸ்யமான கதையை இது சொன்னாலும், சற்று கவனித்து ஆழமாக படிக்க வேண்டிய இலக்கிய பிரதியாகவே இந்நாவல் இருக்கும்.


3) இது உண்மைச் சம்பவத்தின அடிப்படையில் எழுதப்படதா?


எல்லா துப்பறியும் நாவல்களிலும் பிரசித்தமான நிஜ வழக்குகளின் சாயல் இருக்கும். இந்நாவலிலும் அது உண்டு. ஆனால் இது ஒரு நிஜமாக நடந்த வழக்கை ஆவணப்படுத்தும் முயற்சி அல்ல. மாறாக, நிஜத்தில் வெளிவராத உண்மைகளை என் கற்பனையைக் கொண்டு இந்நாவலில் வெளிச்சம் போட்டுக் கோட்ட, ஊடுருவிப் பயணிக்க முயன்றிருக்கிறேன். அதனால், என்னதான் அண்மையில் நடந்த ஒரு குற்ற வழக்கை இது நினைவுபடுத்தினாலும், இதை ஒரு கற்பனையான படைப்பாக வாசிப்பதே ஒரு நாவலாக இதற்கு நியாயம் சேர்க்கும்.


மற்றபடி முடித்து வைக்கப்பட்டும் இன்னும் முடிவுறாமல் சர்ச்சைகளில் சிக்கி பல திசைகளிலாய் கொழுந்து விட்டெரியும் சில வழக்குகளை இந்நாவல் நினைவுபடுத்தக் கூடாது, இதன் மூலம் யாரையும் புண்படுத்தவும் கூடாது என முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் எழுத ஆரம்பித்தால் என் கை நான் சொல்வதையே கேட்காதே! என்ன செய்ய? 


4) இது துப்பறியும் நாவலா அல்லது பேய்க்கதையா?


இரண்டையும் கலந்த ஒரு வடிவத்தை பரிசோதனை செய்து பார்த்திருக்கிறேன். நாம் இத்தகைய கலவை வடிவத்தை வெகுஜன துப்பறியும் படங்களில் அதிகமாக பார்த்திருக்கிறோம். நான் அதை இலக்கிய வடிவில் முயன்றிருக்கிறேன். அதுவும் அச்சுறுத்தும் பேயாக இல்லாமல் அன்பான அழகான பேயாக காட்ட நினைத்தேன். பஷீரின் “நீல வெளிச்சத்தின்” பாணியில்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...