Skip to main content

சச்சினின் சிட்னி உத்தி



2004இல் ஆஸ்திரேலியாவில் இந்தியா டெஸ்ட் தொடர் ஆட சென்ற போது சச்சின் மோசமான ஆட்டநிலையில் இருந்தார். ஐந்து இன்னிங்ஸ்களில் 82ஏ ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து ஸ்லிப்பில் அவுட் ஆகிக் கொண்டிருந்தார். ஆக சச்சின் சிட்னியில் டெஸ்ட் ஆட சென்ற போது ஒரு முடிவெடுத்தார். ஒரு பந்தைக் கூட கவர் திசையில், அடிக்க மாட்டேன். அநேகமாக எல்லா பந்துகளையும் ஒன்று விட்டார் அல்லது நேராக அடித்தார். மிட் விக்கெட், லாங் ஆனுக்கு மட்டும் பவுண்டரிகள் அடிக்க முயன்றார். முதலாவது நாள் காலையில் ஆட வந்தவர் மூன்றாவது நாள் வரை கிரீஸில் இருந்தார். கடைசியில் ஒருவழியாக இந்திய இன்னிங்ஸ் டிக்ளேர் ஆன போது சச்சின் 436 பந்துகளில் 241 ரன்களை அடித்திருந்தார். சச்சினின் இந்த அபாரமான சுயக்கட்டுப்பாடும் கவனமும் உலகம் முழுக்க பாராட்டப்பட்டது. நான் அப்போது சச்சின் தேவையில்லாத பிடிவாதம் பிடித்தார் என நினைத்தேன். முதல் 100 பந்துகளுக்கு ஓக்கே, அதன் பிறகு அவர் எல்லா ஷாட்டுகளையும் அடித்திருந்தால் அவருக்குள்ள திறமைக்கு 350 அடித்திருக்க முடியும் எனத் தோன்றியது. ஆனால் சச்சினின் சிறப்பு என்னவென்றால் அழகியலை பற்றி கவலைப்படாமல் ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப ஆடியது. ஒருவேளை சச்சின் இடத்தில் புஜாரா இருந்திருந்தால் 446 பந்துகளில் 105 அடித்திருப்பார், ஆனால் அதில் தப்பில்லை. சில நேரங்களில் அதிக பந்துகளை ஆடி ஆணியடித்தது போல ஒரே இடத்தில் ஒருநாள், இருநாட்கள் என இருப்பதில் நியாயமுண்டு. இப்போது நடந்து வரும் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் புஜாராவும், ரஹானேவும் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இருவருமே இப்போது முதல் 50-60 பந்துகளை தடுத்தாடி விட்டு 40, 50 ரன்களை அடுத்து ஆளுக்கு கிடைக்கும் 80 பந்துகளில் எடுத்தால் மொத்தமாக 160 + 120 = 280 பந்துகளை “வீணடிக்க” முடியும். அது ஓரளவுக்கு இன்றைக்கு இந்தியாவைக் காப்பாற்றும். ஆனால் நாளை காலை விடிந்ததும் இருவரும் முதல் 20 பந்துகளுக்குள் அவுட் ஆனால் மாலைக்குள் ஆட்டம் முடிந்து விடும். ஆகையால் ரன்களை மறந்து விட்டு பந்துகளை அதிகமாக ஆடுவதையே கணக்கில் கொள்ள வேண்டும். குறைந்தது 400 பந்துகள். அத்துடன் இங்கிலாந்தும் சோர்ந்து விடும். அதன் பிறகு இயல்பாக ஆடி என்ன இலக்கை கொடுத்தாலும் இங்கிலாந்து அதை விரட்டிட முடியலாது. டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்த தவறைத் தான் இந்தியா செய்தது - டிரா செய்ய வேண்டிய ஆட்டத்தை நியுசிலாந்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப பாஸிட்டிவ்வாக ஆடிய வெல்ல முயன்றால் அதனால் மொத்தமாக கோப்பையையும் இழந்தது. அத்தவறை திரும்ப செய்யக் கூடாது.


சுருக்கமாக சொல்வதானால் புஜாராவும் ரஹானேவும் வேகவீச்சாளர்களுக்கு எதிராக off, கவர் டிரைவுகள், பின்னங்கால் punch டிரைவுகளை மறந்து விட வேண்டும். ரன்கள் நேராகவோ கால்பக்கமாகவோ மட்டுமே அடிக்க முயல வேண்டும். ஒரு கட்டத்தில் இங்கிலாந்தே வெறுத்து பந்தை நேராக வீசும். அப்போது ரன்களை அள்ளிக்கொள்ளலாம். இனிமேல் வெற்றியே சாத்தியமில்லை, டிராவே இலக்கு எனும் நோக்குடன் ஆட வேண்டும். நல்லவேளை இந்தியா தடுத்தாட வேண்டியது 400-500 பந்துளே. ஆனால் மொயின் அலியை தடுத்தாடுவது ஆபத்தானது. அவரை அடித்தாடாவிட்டால் விக்கெட்டுகள் விழுவது உறுதி.


கண்ணை மூடி சச்சினை நினைத்துக் கொள்ளுங்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...