Skip to main content

ஓண சத்யா ஒரு நவீன தொன்மமா?



இந்த ஓண சத்யா எனப்படும் “சாப்பாட்டுக் களேபரம்” நான் ஊரில் இருந்த போது எளிமையாக வேறு விதமாக இருந்தது. அம்மா ஒரு பாயசம் வைப்பார். கூடவே பருப்பு, நெய், பப்படம், ஒரு அவியல். இப்படி எங்களுக்கு ஏற்றாற் போல அது இருக்கும். ஊரில் பெரும்பாலான வீடுகளில் அப்படித்தான் சாப்பிடுவார்கள். இந்த டிவியில் காட்டுகிறாரக்ளே அப்படி ஒரு பெரிய இலையில் இருபது, முப்பது பதார்த்தங்களை பரப்பி அதன் முன் ஒரு பெரிய அரவைக்கல்லைப் போல நாம் உட்கார்ந்து சாப்பிடுவது அதை ஓரளவு கல்யாண சாப்பாட்டின் போது மட்டுமே பார்க்கலாம். அதாவது பத்து பொரியல், கூட்டு, சாம்பார், புளிசேரி, இஞ்சிக்கறி, வாழைக்காயை பொடிசாய் நறுக்கி பொரித்து வெல்லப்பாகில் புரட்டி எடுத்து ரெண்டு துண்டுகள் வைப்பார்களே அந்த ஐட்டம், கடைசியாக போளி, பால் பாயசம். இது தான் எதார்த்தம். ஓணத்துக்கு புதிய துணி கூட நான் எடுத்ததாக நினைவில்லை. தீபாவளிக்கு எடுத்துக் கொள்வேன். நான் சென்னைக்கு வந்த பின் தான் ஓண சத்யாவை பெரிய அளவில் ஓட்டல்காரர்கள் புரொமோட் பண்ணுவதை கவனித்தேன். நானும் குமரொகோம் ஓட்டலுக்கு சென்று வருடத்திற்கு ஒருமுறை ஒரு கட்டு கட்டுவதை வழக்கமாக வைத்திருந்தேன். இப்போது பெங்களூரிலும் அதை புரொமோட் பண்ணுகிறார்கள். இன்று கூட ஸொமொட்டோவில் ஆர்டர் பண்ணி வாங்கி வைத்திருக்கிறேன். இனி மேல் தான் சாப்பிட்டுப் பார்க்கணும்.


 இதைப் பார்க்கும் போது எழும் சந்தேகம்: இந்த “ஓண சத்யா” என்பதை மக்கள் கேரளாவில் நிஜமாகவே வீட்டில் 20, 30 பதார்த்தங்களுடன் பண்ணி சாப்பிடுகிறார்களா அல்லது இதை ஓட்டல்காரர்களும் மீடியாவும் சேர்ந்து உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்களா? அனுபவமுள்ளவர்கள் சொல்லவும்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...