Skip to main content

“ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” - ஆர். அபிலாஷ்



சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு கொலைவழக்கின் சாயலில் எழுதப்பட்ட உளவியல் துப்பறியும் நாவல் இது. அந்த கொலைவழக்கு பல சதிக்கோட்பாடுகள் நிறைந்ததாக ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. இவை பொதுமக்களால் உருவாக்கப்பட்டவை அல்ல, மாறாக வெளியில் இருந்து இந்த வழக்குவிசாரணையை கண்காணித்து வந்த சக்திகளால் உற்பத்தி பண்ணப்பட்டவை அவை. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கோணம் இந்த வழக்குக்கு கிடைத்தது. சதிக்கோட்பாட்டுகளின் இடையே கொலைக்கான நடைமுறைக் காரணங்கள் எவை என அலசி கண்டெடுக்கிறது இந்நாவல்; நிரப்ப முடியாத இடைவெளிகளை தன் கற்பனையால் உணர்ச்சிகளால் நம்பிக்கைகளால் அது நிரப்புகிறது.

 குற்றவுணர்வு குற்றத்தில் இருந்து பிறக்காமல், மாறாக அதுவே ஒரு மனிதனை எப்படி குற்றத்தை நோக்கி செலுத்துகிறது? குற்றவுணர்வில் இருந்து விடுதலை என்பது சகமனிதனை அரவணைத்துக் கொள்ளும் போது கிடைக்குமா? இந்நாவலின் நாயகன் குற்றவாளியைத் தேடிச் செல்லும் போதும் இந்த கேள்விகளே அவனுக்கு இக்குற்றத்தின் தீர்வுக்கான சாவியாக கிடைக்கிறது. தன் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரு துருப்பாகவும் இந்த விசாரணை அமைகிறது. குற்றவாளி, பாதிக்கப்பட்டவள் இருவரையும் துப்பறிவாளன் தனக்குள் எப்படி ஆவாஹிக்கிறான் என்றும் இந்நாவல் பேசுகிறது.

இந்நாவல் கொலையான பெண்ணின் கொலைக்குப் பின்னான இருத்தலில் இருந்து தன் வாழ்வை மீளுருவாக்க, வடிவமைக்க, நிறமூட்ட அவள் கொள்ளும் தவிப்பில் இருந்தும் கதையை சொல்லுகிறது. கொலைக்காக தவறாக கைதாகி உயிரைக் கொடுத்தவனின் ஆன்மாவின் பாதங்களில் தன்னை இது சமர்ப்பிக்கிறது

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...