Skip to main content

தாலிபான்களும் நானும்



 எனக்கு இந்த டீலிங் பிடிச்சிருக்கு. UPSC எல்லாம் தேர்வாகி நம் ஆட்சியர்கள் என்ன கிழிக்கிறார்கள் எனத் தெரியாதா? பொதுப்பிரச்சனைகளின் போது கார்ப்பரேட்டுகள் பக்கமாக நின்று பொதுமக்களை சுடுவதற்கு ஆர்டர் போடுவது, அமைச்சர்களும் பிற அதிகார வர்க்கத்தினரும் திருட வழிவகை பண்ணிக்கொடுத்து தமக்கு வரும் கட்டிங்கைக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் பல நூறு கோடிகளுக்கு பங்களாக்களாக கட்டுவது … இதைச் செய்ய எதற்கு ஒரு படிப்பு, தேர்வு மண்ணாங்கட்டி எல்லாம்? மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஒரு சிறுசொல்லாவது உதிர்ப்பார்களா? ம்ஹும். அதுக்கு தாலிபானின் படிக்காத தற்குறிகளே மேல். ஜாலியாக பொழுதுபோக்கு அரங்குகளில் சின்னக்குழந்தைகளின் விளையாட்டுக்கார்களை ஓட்டிப் பார்த்து விட்டு ஏக்கத்துடன் அதை இரவோடு இரவாக எரித்து விடுகிறார்கள். நம்முடைய ஆட்சியர்கள் என்றால் அந்த அரங்குகளைச் சுற்றி பெரிய மதில்கள் எழுப்பி சில பல பங்களாக்கள் கட்டி நாம் சொந்தமாக்கி விடலாம் ஐயா என அமைச்சரக்ளுக்கு ஐடியா கொடுத்திருப்பார்கள். 


எனக்கு தாலிபான்களின் பல செயல்பாடுகள் மீது விமர்சனம் உண்டு. ஆனால் இந்த பப்புகள், வெகுஜன சினிமா, சீரியல்கள் போன்றவற்றை ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். அந்த இடத்தில் பொதுவிவாத அரங்குகள், தரமான படங்களை மட்டும் திரையிடும் தியேட்டர்கள், பாரம்பரிய இசைவடிவங்கள், நடனங்களைக் கொண்டு வரலாம். மால்கள், பிரம்மாண்ட கேட்டட் கம்யூனிட்டி அபார்ட்மெண்டுகளின் இடத்தில் மக்கள் விளையாடுவதற்கான இடங்களை அமைக்கலாம். குடி, சிகரெட், போதை மருந்துகளை முழுக்க ஒழிக்கலாம்.


நவீன உலகில் நாம் உள்ளீடற்றவர்களாக, சந்தையால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாக மாற்றப்பட்டு விட்டோம். ரொம்பவே நவீனப்படுவது ஆண்-பெண் உறவை அவநம்பிக்கையும் ஸ்திரமின்மையும் மிக்கதாக மாற்றுகிறது. அடுத்த முப்பதாண்டுகளுக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் அம்மா மட்டுமே இருப்பாள். எங்கு பார்த்தாலும் உடைந்த குடும்பங்களே தெரியும். குற்றங்கள் மலியும். இதற்கு முக்கியமான காரணம் இன்றுள்ள நுகர்வுக்கலாச்சாரம், அதற்காக நாம் சதா நேரமும் வேலை பார்ப்பது, அதில் சம்பாதிக்கும் பணத்தை செலவழிக்க ஏதாவது ஒரு இன்பத்தைத் தேடி அலைவது, எதிலும் திருப்தியுறாமல் தீராப்பசியுடன் இரவெல்லாம் விழித்திருப்பது, எப்போதும் உடல் குறித்த அச்சம், பதற்றம், இதை ஈடுகட்ட ஊடகங்களின் நமக்கு ஊட்டும் போதை மருந்துகள், மிகை உணர்ச்சிகள்… போதும் போதும்.


நான் தாலிபான்களை, அவர்களுடைய ஒழுக்கவாதத்தை, பெண் எதிர்ப்பை ஆதரிக்கவில்லை, ஆனால் அவர்களிடம் இருந்து சில விசயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் - பொழுதுபோக்கு, நுகர்வுப் பண்பாட்டு விசயத்தில் மட்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...