Skip to main content

சங்கிகளின் விஷமப் பிரச்சாரம்

சங்கிகளின் விஷமப் பிரச்சாரம்

அர்ஜுன் சம்பத்தைப் போன்ற இந்துத்துவ பாசிஸ்டுகளின் பிரச்சனை "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்" என நடைமுறைப்படுத்துவது திமுக, இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் கலாச்சார அதிகாரம் பெறுகிறார்களே எனும் பதற்றமே. பாஜக தொடர்ந்து பெயரளவுக்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தோருக்கு சில பதவிகளை அளித்து tokenism செய்து சோஷியல் எஞ்சனியரிங் மூலம் ஏமாற்றி சம்பாதித்த பெயரை திமுக வாங்கிக் கொண்டு போய் விடுமோ எனும் அச்சமே!

அதனாலே ஏற்கனவே பிராமணர் அல்லாதோர் தான் பெரும்பாலான கோயில்களில் பூசாரிகளாக உள்ளார்கள் என சங்கிகள் சப்பைக்கட்டு கட்டி கதறுகிறார்கள் - ஏற்கனவே உள்ள நடைமுறை தானே, அது சட்டமாகி நடைமுறைக்கு வந்தால் உமக்கு என்ன ஓய் கும்பி எரிச்சல்? அதிக பண வசூல் உள்ள கோயில்களில் இனி எந்த சாதியொனரும் பூசை செய்ய போட்டியிடுவார்கள், அது அந்தணர்களை பாதிக்கும் எனும் தவிப்பா? அல்லது சட்டம் தரும் ஆற்றலைக் கண்டு, சமத்துவமே இனி எதார்த்தம் என்பதைக் கண்டு அச்சமா? ஏன் சுற்றி சுற்றி வந்து ஒப்பாரி வைக்கிறீர்கள்? நேரடியா சொல்ல வேண்டியது தானே.

மசூதிகளிலும் தமிழில் தொழுகை எனும் கோரிக்கையை ஏற்கிறேன். இப்போதுள்ள நடைமறையைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் எப்படி இருந்தாலும் தமிழ்ப்படுத்தப்படுவதே இஸ்லாத்துக்கும் நல்லது - இஸ்லாத்தை நோக்கி கூடுதலான பொதுமக்களை அது ஈர்க்கும்.

அதே நேரம் இஸ்லாத்தைக் காட்டி சம்ஸ்கிருதமயமாக்கலை நியாயப்படுத்துவது, தமிழும் சமஸ்கிருதமும் இணையாகத் தோன்றி வளர்ந்த மொழிகள், ஒன்று தாய் மொழி, மற்றொன்று தந்தை மொழி எனும் வரலாற்றுத் திரிபை நிச்சயமாக ஏற்க முடியாது. சமஸ்கிருதம் பின்னாளில் தோன்றிய, மக்களால் பரவலாக பேசப்படாத பண்டித மொழி. ஆதியில் வழிபாடு நிக்ழ்ந்தது தமிழிலே. சமஸ்கிருதம் பின்னாளில் கொண்டு வரப்பட்டது என்பதே வரலாறு. அதென்ன தந்தை மொழி? தந்தை தேசம்? அதைக் கேட்டால் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் நாஜிக்கள், ஹிட்லர் மற்றும் ஹிந்து மகாசபையினரும் கோட்சேவும். அவர்களுடைய மறைமுக ஏஜெண்டாக இங்கு பேசி வந்த பாரதியாரும். கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய சொல்லாடல் இது. தாய்நாடு, தாய்மொழி என்பவை மட்டுமே அமைதிக்கும், அன்புக்கும் வழிவகுக்கும். மற்றவை பாசிசத்துக்கு பட்டுப்பாதையை விரிக்கும்!

இப்படியே திரித்துத் திரித்துப் பேசிக் கொண்டிருந்தால் ஒருநாள் மக்கள் கல்லை எடுத்து அடிக்கப் போகிறார்கள் மிஸ்டர் சம்பத்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...