Skip to main content

என்ன செய்ய வேண்டும்?



இந்த இரண்டாம் அலையில் நாடே போதுமான மருத்துவ வசதிகள், ஆக்ஸிஜன் இல்லாமல் மக்கள் சாகும் போது பிறர் கேளிக்கையில் ஈடுபட்டு, இயல்பு வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா இல்லை துக்கத்தில் மூழ்க வேண்டுமா எனக் கேட்கிறார்கள். அடுத்தவர் துயரப்படும் போது நாமும் கண்ணீர் சிந்த வேண்டுமா இல்லையா எந்த அடிப்படைக் கேள்வி. 

பிறருடைய துன்பம், இழப்பு ஒரு தவிர்க்க முடியாத விபத்தென்றால் கண்ணீர் விடலாம். ஆனால் இப்போது நிகழ்பவை நிர்வாகப் போதாமையால், தொலைநோக்குத் திட்டம் இல்லாமையால் நிகழ்த்தப்படும் மறைமுகமான படுகொலைகள், மக்களுக்கு அவர்களுடைய பிரதிநிதிகள் செய்யும் அளப்பரிய துரோகம். இப்போது கேட்கிறேன்: ஒருவருடைய திட்டமிட்ட அக்கறையின்மையால், தடித்தனத்தால், திமிரால் மக்கள் செத்தால் நியாயமாக என்ன உணர்ச்சி வர வேண்டும்? 

என் பதில்: மக்கள் கோபப்பட்டு அரசியல்பட வேண்டும்! ஒன்று திரள வேண்டும். அடித்துப் பிடித்து போராட வேண்டும் என சொல்லவில்லை. கோபத்தை மொழியில் மாற்றி உருவேற்றி வைத்திருக்கலாம், கைமாறப் படும் நெருப்பைப் போல அதை உயிருடன் பாதுகாக்கலாம்.

கோபம் ஒரு மோசமான உணர்ச்சி அல்லவா? அதைத் தவிர்த்து நாம் நிதானமாக அமைதியாக வாழ வேண்டும் என்றல்லவா மேலோர் சொல்லியிருக்கிறார்கள்? ஒரு தனிமனிதன், மற்றமை சமூகம் மீதெழும் கோபம் தன்னையே சுடும் நெருப்பு. அது மோசமானது. ஆனால் அடுத்தவர்களுக்காக அரசின் மீது எழும் கோபம் ஒரு நல்ல உணர்ச்சி. இந்த சமூகத்தில் துன்புறுவோர் நம் உற்றோர், அந்த துன்பத்தை ஏற்படுத்தும் மற்றமை மீது கோபம் கொள்வது தன்னுணர்வை கடந்து செல்லும் ஒரு உயர்வான மனநிலை. அது நம்மை ஒன்று திரள, செயல்பட, போராட வைக்கும். 
அழுவதோ தன்னிரக்கத்தில், குற்றவுணர்வில் செயலின்மையில் தள்ளி விடும்; கேளிக்கை இன்பத் தேடலின் போதாமையை நினைவுபடுத்தி மேலும் மேலும் கேளிக்கைகளை நாடச் செய்து களைப்பாக்குமே அன்றி துன்பத்தை கடக்க உதவாது.

அத்துடன், கண்ணீர் சிந்துவதோ கேளிக்கையில் ஈடுபட்டு அதை மறப்பதோ இந்த துன்பங்களை ஒரு அந்தரங்க நிகழ்வாக்கி விடும். இதை அந்தரங்க நிகழ்வாக்கினால் நோய்த்தொற்று தான் மக்களின் சாவுக்கு காரணம், அரசுக்கும் அரசதிகாரிகளுக்கும், தேர்தல் பிரச்சாரங்களை எட்டு கட்டமாக நடத்த அனுமதித்த தேர்தல் ஆணையத்துக்கும் இதில் எந்த சம்மந்தமில்லை என்றாகி விடும். 

உங்கள் பதில் என்ன?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...