Skip to main content

அன்னையின் அன்பு



“குயின்” வெப்ரீசிஸ் (MX player) பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா “என்னை ஏன் எந்த நிபந்தனையும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்?” என தவிப்புடன் கேட்கிறார். அதற்கு எம்.ஜி.ஆர் அமைதியாக “தாயால் மட்டுமே நிபந்தனையில்லாத அன்பைத் தர முடியும். வேறு எல்லாரிடமும் நமக்கு நிபந்தனைக்குட்பட்ட்டே அன்பு கிடைக்கும்.” என்கிறார். என்னவொரு பளிச்சென்ற, ஆழமான வசனம். இது ஜெயலலிதாவின் ஆங்கிலப் பேட்டியில் இருந்து எடுக்கப்பட்ட கருத்து தான் என்றாலும் வசனமாக வருகையில், அதுவும் எம்.ஜி.ஆரின் இடத்தில் இருந்து சொல்லப்படுகையில் பிரமாதமாக இருக்கிறது. இது மட்டுமல்ல வேறிடங்களிலும் பல அழகான வசனங்கள் உண்டு. பொதுவாக கௌதம் மேனனின் படங்களில் வசனம் மணிரத்னம்தனமாக இருக்கும், ஆனால் இப்படத்தில் இலக்கியத்தனமாக உள்ளது. ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு தனித்துவமான பேச்சு பாணி உள்ளது, அதற்கேற்ற வசனங்களும். கார் ஓட்டுநரால் இந்த மாதிரி தெளிவாக பேச முடியாது, ஆனால் அவர் மிகையாகவும் பட்டும்படாமலும் பேசுகிற பாணியில் சொல்லப்படாத சங்கதிகள் தொனிக்கின்றன. ஜெயலலிதாவின் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரான சிஸ்டர் ஒருவர் பேசுகிற வசனங்களும் அப்படியே தனித்துவமாக பொருத்தமாக உள்ளன. யாரோ திறமையான ஒரு வசனகர்த்தா விளையாடி இருக்கிறார்!


இதை ஒட்டிய பொதுவான ஒரு கேள்வி: அன்னையின் அன்பு பரிபூரணமானதா, நிபந்தனைக்கப்பாற்பட்டதா?


“குயினில்” கூட ஜெயலலிதாவின் அம்மா தனது மகன் மீது தான் கூடுதல் அன்பாக இருக்கிறார்; அதனாலே தொடர்ந்து அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே மோதல்கள் வெடிக்கின்றன. ஆனால் இந்தளவுக்கான அன்பு கூட எம்.ஜி.ஆரிடம் இல்லையே என்பதையே அவரை உடைய வைக்கிறது.


நடப்புலகில், காதலனுடன் ஓடிப் போகும் பொருட்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து, விஷம் ஊட்டி கொல்லும் அன்னையர் இல்லையா? பெற்ற பிள்ளைகளிடம் சின்ன விசயங்களுக்காக கோபம் கொண்டு துரத்தி விடும் பெற்றோர் இல்லையா? ஆணவக் கொலை செய்யும் பெற்றோர்? காதல் தெரிய வரும் முன் வரை தலையில் வைத்து தூக்கிக் கொண்டாடி விட்டு அடுத்த நொடி அதே மகளை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விடும் பெற்றோரை எப்படி புரிந்து கொள்வது? இதையெல்லாம் அரிதான நிகழ்வுகள் என்று கொண்டால் ஒன்றுக்கு மேலான குழந்தைகள் உள்ள வீடுகளில் ஒரு குழந்தை அதிக செல்லத்துடனும் மற்றொன்று குறைவான கவனிப்புடனும் ஏக்கத்துடனும் வளர்க்கப்படுதில்லையா? இந்த தலைப்பில் அண்மையில் ஒரு நீயா நானா நிகழ்ச்சியே நடத்தினார்கள். உணவில் கூட பாரபட்சம் காட்டுகிறார்கள் என தாய்மாரை நோக்கி குழந்தைகள் குற்றச்சாட்டு வைத்தார்கள். எத்தனையோ பெண் பிள்ளைகள் தமது அம்மா அண்ணனுக்கோ தம்பிக்கோ காட்டுகிற அன்பில் சிறுபகுதியை கூட தமக்குத் தருவதில்லை என மனம் கசிகிறார்கள். இது பொறாமையாகி வெறுப்பாக மாறி வெளியே ஆண்கள் சற்று கூடுதலாக மதிப்பு பெற்றால் அவர்களை கொலைவெறிக்கு ஆளாக்குகிறது. இந்த பாலின பாரபட்சத்தை எப்படி புரிந்து கொள்வது? அன்னையின் அன்பு கூட நிபந்தனைக்கு உட்பட்டதே என சொல்லத் தோன்றுகிறது.


கடைசியாக, அன்பு நிபந்தனையற்றதாக உள்ளது அத்தனை நல்லதல்ல என்றும் சொல்ல வேண்டும். அப்படியான அன்பு ஒரு சர்வாதிகாரமாக, துயரம் தரும் ஆட்கொள்ளலாக மாறி விடும். அன்பு பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு யாருக்கும் நிரூபிக்க தேவையில்லாமல், அவ்வப்போது தோன்றி மறைவதாக, தொடர்ச்சியை பற்றி கவலைப்படாததாக, இறுக்கமற்றதாக இருப்பதே சுதந்திரமானது. அன்னையரின் அன்பு ‘நிபந்தனைக்கு உட்பட்டதாக’ இருக்கையில் அவர்கள் அதை ரொம்ப சீரியஸாக எடுக்காமலும் இருக்க வேண்டும்.  “நீயா நானா” நிகழ்ச்சியில் இன்னின்ன காரணங்களுக்காக இந்த பிள்ளையிடம் கூடுதல் அன்பு காட்டுகிறேன் என தாய்மார் பாரபட்சத்தை நியாயப்படுத்துவதை கவனித்தேன். அந்த நியாயப்பாடே அவர்களுடைய பிரச்சனை, அது அவர்களை அநீதியாக அன்பு காட்டுபவர்களாக மாற்றுகிறது. போகிற போக்கில், முந்தின நொடியை மறந்து விட்டு அன்பு காட்டுகிற அன்னையரால் அனைவருக்கும் அன்னையாக இருக்க இயலும். நிபந்தனைக்கு அப்பாலான ஒரு பரிபூரண அன்பை கட்டமைக்க முயல்கையிலே நமது அன்னையர் பாரபட்சம் காட்டுகிறவர்களாகிறார்கள் என்பது ஒரு நகைமுரண்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...