Skip to main content

நிலைகள் குறித்த விசாரணை - 5

5.

“These give rise to those,

So these are called conditions.

As long as those do not come from these,

 why are these non-conditions?”


இவை அவற்றை தோற்றுவிக்கின்றன,

அதனால் இவை நிலைகளாய் அறியப்படுகின்றன [என்கிறார்கள்].

அவை இவற்றில் இருந்து அவை தோன்றாத வரையில்,

இவை ஏன் -நிலைகள் அல்ல?”





 இந்த ஸ்லோகம் நிச்சயம் குழப்பமானதாகத் தெரியும் படி எழுதப்பட்டிருக்கிறது. இருந்தாலும்

இது ஒரு சுவாரஸ்யமான வாதம், ஒருவித தலைகீழ் பின்னோக்கு வாதம். முதல் இரு வரிகள் நாகார்ஜுனரின் எதிரணியினர் எழுப்புவன - “ஒரு விசயத்தை அதன் நிலைகள் தோற்றுவிக்கின்றன, அதனாலே அவை நிலைகள்என அவர்கள் சொல்லுகிறார்கள். ஆமாம், அதுக்கென்ன என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உற்று நோக்கினாலே இதிலுள்ள விஷமத்தனம் புரியும் - ஒன்று மற்றொன்றின் நிலையாக இருப்பதானாலே அது தன்னளவில் சாராம்சமானநிலைஆவதில்லை. ஹைடெக்கர் இருத்தல் (being) பற்றி சொல்லும் போது சுத்தியலை உதாரணமாகக் காட்டுகிறார். சுத்தியலால் ஒருவன் ஆணியை சுவற்றில் அடிக்கிறான். அந்த தருணத்தில் சுத்தியல், அதைக் கைக்கொண்டிருக்கும் அவன், அவனது கரம், அடிக்கப்படும் ஆணி, அது இறங்கும் சுவர் எல்லாம் ஒரே புள்ளியில் இணைகின்றன. இவற்றில் ஏதோ ஒன்று தனித்து பார்க்கப்பட்டால் சுத்தியலால் அறைவதே சாத்தியமில்லை. சுத்தியல் அப்போது அவனது கரத்தின் நீட்சியாக, ஆணி அந்த சுத்தியலின் மற்றொரு பாகமாக, அது துளைக்கும் சுவரின் அதன் நீட்சியாக மாறுகிறது. இதனாலே ஒருவன் சுத்தியலால் ஒரு பெண்ணின் தலையில் அடித்துக் கொன்றால் செய்தியில் he hammered her to death என வருகிறது என ஹைடெக்கர் கூறுகிறார். இங்கு சுத்தியல் அறையப்படுவதற்கு அதை ஓங்கி செலுத்துகிற அசைவிலிருந்து, அசைய வேண்டும் என்கிற நோக்கத்திலிருந்து, தான் சுத்தியலால் அறைகிறோம் எனும் எண்ணம், அதனால் தான் சுத்தியலை அறைகிறவர் ஆகிறோம் எனும் பார்வை அவனுக்குள் தோன்றுகிறது, அவன் பார்க்கிறவனாகவும் பார்க்கப்படுகிறவனாகவும் ஆகிறான், இப்படி பல நிலைகள் அவனை சுத்தியலைக் கொண்டு அறையச் செய்கின்றன. ஆனால் அதனாலே சுத்தியலை எடுத்து அறைகிற அந்த (செயலூக்க நிலை) அசைவானது அந்த செயலை தானாக நிகழ்த்துவதில்லை. அவனுக்கு உடம்பில் அதற்கான வலு இருக்க வேண்டும், அது இருந்தாலும் அந்த சூழல் அதற்கு சாதகமாக இருக்க வேண்டும், அங்கு சுவர் இருக்க வேண்டும், சுவர் ஆணியால் அறையப்பட தோதாக இருக்க வேண்டும் ... இப்படி பல நிலைகள் இந்த நிலைகளுக்கு பின்னுன்று செலுத்துவதைப் பார்க்கிறோம்

அடுத்து இங்கு காலம் குறித்த ஒரு சிக்கல் வருவதையும் நாகார்ஜுனர் உணர்த்துகிறார். சுத்தியலால் அறைய வேண்டும் எனும் நோக்கம் அது ஏற்படும் முன்பு என்னவாக இருக்கிறது? சுத்தியலை வீசும் அசைவாகிய அந்த செயலூக்க நிலை அதற்கு முன்பு என்னவாக இருக்கிறது? இப்போது அது நிலை என்றால் அப்போது அது -நிலையா என நாகார்ஜுனர் கிண்டலாக வினவுகிறார். ஏனென்றால் ஒன்றைக்கொண்டு அதை சாராம்சமான நிலையாக நாம் கட்டமைக்கும் போது அது காலத்தில் முன்னோ பின்னோ மற்றொன்றாக இருக்கையில் அது -நிலையாகவே இருந்தாக வேண்டும். ஆனால் ஒன்று சாராம்சமற்று ஒன்றை தோற்றுவிக்கும் போது மட்டுமே நிலையாக இருக்கிறது என நாம் சொல்லும் போது இச்சிக்கலோ அபத்தமோ ஏற்படுவதில்லை

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...