Skip to main content

நிலைகள் குறித்த விசாரணை - 4

 4. 

Power to act does not have conditions.

There is no power to act without conditions

There are no conditions without power to act.

Nor do any have the power to act.


ஒன்றை செயல்படுத்தும் ஆற்றலுக்கு நிலைகள் அவசியமில்லை [எனப்படுகிறது].

[ஆனால்] நிலைகள் இன்றி செயல்படுத்தும் ஆற்றலே இல்லை.

செயல்படுத்தும் ஆற்றல் இல்லாத நிலைகளே இல்லை.

அதேநேரம் செயல்படுத்தும் அதிகாரம் அவற்றுக்கு இல்லையும் தான்.”





கொஞ்சம் குழப்பமாகத் தெரியும், ஜாங்கிரி சுற்றுகிற ஸ்லோகம் இது என்றாலும் இதன் வாதம் எளிதானது, வலுவானது.

ஒரு விசயத்தை நிகழ்த்துவதற்கான ஆற்றல் அதிலேயே உள்ளது என பொதுவாக நம்பப்படுகிறது. ஒரு தேர்தலின் போது செலுத்தப்படும் வாக்கை எடுத்துக் கொள்வோம். மக்களின் வாக்குக்கு நாட்டின் அதிகாரத்தை மாற்றும் சக்தி உண்டு எனப்படுகிறது. ஆனால் அந்த ஆற்றல் வாக்குச்சீட்டின் ஆற்றல் அல்ல. வாக்கின் ஆற்றல் அதை பதிவு செய்வதில் மட்டுமே உள்ளது. அதைக் கடந்து நிகழ்கிற செயல்கள் தம்மளவில் அதிகாரம் பெற்றவை அல்ல. அவை பல உபநிலைகளை சார்ந்து ஆற்றல் பெறுபவை. ஒரு வாக்கு அதன் ஆற்றலைப் பெற அதை செலுத்துகிறவரின் அடையாளம், அவர் வசிக்கிற பகுதி, அவர் வாக்கை செலுத்துகிற காலம், அவர் வாக்கை சரியாக செலுத்துகிற பாங்கு, அவ்வாக்கு எந்திரத்தில் சரியாக பதிவாகி எந்த தில்லுமுல்லும் நடக்காதிருப்பது, மற்ற வாக்குகளின் ஆற்றல்கள், அதற்கும் பின்னால் மற்ற நேரங்களில் சாமான்ய அடையாளம் (வாக்களிக்காதவராக) பூணும் அவர் அப்போது தன்னை வாக்காளராக உணர்வது, வாக்கு செலுத்த வேண்டும் எனும் விருப்பத்தை அவர் கொள்வது பல நிலைகள் பின்னிருந்து இயக்கி அந்த அதிகாரத்தை தோன்ற செய்கின்றன. அதனாலே இரண்டாவது வரி ‘நிலைகளே நிகழ்த்தும் ஆற்றலின் காரணம் ஆகின்றன’ என்கிறது.


இந்த நிலைகளும் ஆற்றல் இன்றி வெற்றாய் இருப்பதில்லை. ஆனால் அதன் பொருள் இந்த நிலைகள் தம்மளவில் ஒன்றை இயக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன என்பதல்ல. அவை நிலைகளாக செயலைத் தூண்டுவதற்கு பல உபநிலைகள் பின்னிருந்து இயக்கியாகி வேண்டும். அதனாலே அவற்றுக்கு ஆற்றல் உண்டு, ஆனால ஆற்றல் இல்லை என முரணாகத் தோன்றுகிற இறுதி வரிகளை நாகார்ஜுனர் எழுதுகிறார் - அவரது அக்கறையெல்லாம் இந்த நிலைகளுக்கு தனிப்பெரும் முழுமுதல் ஆற்றல் உண்டு என எதிர்முகாமினர் புதிய கதையை கட்டக் கூடாது என அதற்கும் அவர் இங்கு ஒரு தடுப்பை வைக்கிறார்


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...