Skip to main content

குஷ்பு கைது எனும் கிரிகாலன் மேஜிக்




பாஜக மகளிரணியின் போராட்டத்துக்கு எடப்பாடி அரசு தடை விதித்தது, அடுத்து குஷ்புவை கைது செய்தது. இவையிரணையும் அதிமுக அதே பாஜகவின் அறிவுறுத்தலின், தூண்டுதலின் பெயரிலே செய்கிற என்பது தான் ஒரு கிரிகாலன் மேஜிக். ஏன்?


பீகாரின் நிதீஷ்குமாரை வைத்து ஆடும் அதே அரசியல் சதிராட்டத்தைத் தான் பாஜக இங்கும் எடப்பாடியை வைத்து ஆடுகிறது:


பீகாரில் நிதீஷ்குமாருடன் கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு எதிரானவர் தாம் எனும் பிம்பத்தையும் பாஜக தக்க வைக்கிறது. நிதீஷின் பிரதான எதிரிகளில் ஒருவரான சிராக் பாஸ்வானுடன் இத்தேர்தலில் தாம் ஒரு மறைமுகக் கூட்டணியில் உள்ளதாய் நுட்பமாய் உணர்த்துகிறது. இதன் மூலம் நிதீஷ்குமார் ஆட்சி மீது மக்களுக்கு உள்ள கோபம், அதிருதியின் பலன்கள் தேஜஸ்வி யாதவுக்கு வாக்குகளாக மாறி விடக் கூடாது என திட்டமிடுகிறது. அதாவது ஆளும் கூட்டணியில் இருந்தாலும் அது தம் கூட்டணி அல்ல என உணர்த்துகிற பார்ப்பனிய தந்திரம் ஒரு பக்கம், ஆளுங்கட்சி கூட்டணி மீதான அந்த அதிருப்தி வாக்குகளை மடைமாற்றி தம்முடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைக்கப் போகிற மூன்றாவது (பாஸ்வான்) அணிக்கு செல்ல வழிவகுக்கிற சூழ்ச்சி இன்னொரு பக்கம்


தமிழகத்திலும் அதே தோளில் இருந்தபடியே நண்பனைத் தின்னுகிற பார்ப்பனிய வியூகம் தான் பாஜகவுக்கு - வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி அரசு மீதான மக்களின் கோபம் மோசமாக பிரதிபலிக்கும் என பாஜகவினர் அறிவார்கள். ஆகையால் அக்கோபம் தம் மீது திரும்பக் கூடாது என ஒரு திட்டம் வகுக்கிறது. இதன்படி தாம் கூட்டணியில் இருந்தாலும் ஒரு அதிருப்தி தம் கட்சிக்கும் அதிமுகவுக்கும் இடையில் உள்ளதாக கடந்த சில மாதங்களில் தொடர்ந்து ஊடகங்களில் செய்திகளை வரவழைத்தார்கள். அற்பமான இந்த கிசுகிசுக்களை விவாதிப்பதற்காக நமது டிவி சேனல்கள் பிரைம் டைம் விவாத மேடைகளை ஒதுக்கினார்கள். அநேகமாய் தினமும் இந்த கற்பனையான முரணைப் பற்றி பேசிப் பேசி (இந்த வாதங்களின் போது அதிமுகவினர் பாஜவைனரை தழுவி முத்தமிட்டு கன்னத்தை எச்சிலாக்கும் ஆபாசங்களும் நடக்கும்) ஒருவழியாய் இரு கட்சிகளும் ஒரே மேடையில் தோள் மேல் தோள் சாய்ந்து நின்றாலும்இதயத்தில்தாம் வேறு வேறு எனும் சித்திரத்தை ஏற்படுத்தி விட்டார்கள். இந்த நாடகத்தின் ஒரு காட்சி மட்டுமே குஷ்புவின் கைது.


திருமா மீது பாஜவினரின் சார்பாக அதிமுக அரசு அவசரப்பட்டு ஏன் வழக்குகளை பதிவு செய்தது என கேள்வி எழுந்ததும், அதிகம் பதறியது பாஜகவாகத் தான் இருக்கும். அதிமுகவுக்கு (எப்படியும் இழக்கப் போகிற) இத்தேர்தலில் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பாஜகவுக்கு அப்படியல்ல. எப்படியாவது சற்று மேம்பட்ட தேர்தல் பலன்களை இம்முறை அடைய வேண்டும் என அக்கட்சி தவிக்கிறது. ஆகையால் பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடத்துவதாக, அதை குஷ்பு தலைமை தாங்கும் போது கைது செய்யப்பட்டு ஒரு ஓட்டலில் சிறைவைக்கப்படுவதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. குஷ்பு ஏறிப் போன வாகனமே போலீஸ் வேன் என்பதைத் தவிர வேறெந்த பிரச்சனையும் அவருக்கு இல்லை. போராட்டத்தில் தலைமை தாங்கி தாங்கி விட்டு அப்படியே ஓட்டலுக்கு சென்று ஏஸி அறையில் உணவருந்தி ஓய்வெடுக்கப் போகிறார். ஆனால் அதிமுக அரசு திராவிட கட்சிகளின் சார்பில் இந்துக்களை ஒடுக்குகிறது என ஒரு பொய்ப்பிரச்சாரத்தை சங்கிகள் முன்னெடுக்க இது உதவும்.


இதற்குப் பதிலாக தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை கைது செய்திருக்கலாமே? அப்படி செய்தால், பாஜகவும் அதிமுகவும் நேரடியாய் மோதுவதாய் ஒரு சித்திரம் மக்களிடத்து ஏற்பட்டு விடும். அதையும் பாஜக விரும்பவில்லை. அது இரண்டு முகாம்களிலும் நண்பனாகவும் எதிரியாகவும் இருந்து சாதிக்க விரும்புகிறது. அதுதான் பார்ப்பனிய சாணக்கியம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...