Skip to main content

ரஜினியின் தகிடுதித்தம்


ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டார், அரசியலில் இருந்து ஓய்வெடுப்பதாய் என முடிவெடுத்திருப்பதாக இப்போது செய்தி வந்திருக்கிறது. இது உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக (சிறுநீரக சிகிச்சை) என சொல்லப்பட்டாலும் அது முழுக்க உண்மையல்ல.

ரஜினி இனி அரசியலுக்கு வருவது அவருக்கு நடைமுறையில் நல்லதல்ல என நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் தன்னால் கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைக்க முடியாவிடினும் மூன்றாவது அணியாக ஒரு அதிகார மையமாகத் தோன்றலாம் என அவர் நம்பியிருக்கலாம். ஆனால் வரக் கூடிய தேர்தலில் அதிமுக மட்டுமல்ல பாஜகவும் இங்கு பெருத்த தோல்வியை சந்திக்கும் என தகவல் போனதும் அவர் சுதாரித்திருப்பார். ஆனாலும் பாஜக, குருமூர்த்தியின் அழுத்தம் அவரை உடனடியாய் முடியாது என சொல்ல முடியாத அளவுக்கு தத்தளிக்க வைத்திருக்கும்.
கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்தால் அரசியல்ரீதியாக அவர் பெறப்போகும் மக்கள் கோபமும், அடுத்த ஆளும் கட்சியினரின் வெறுப்பும் தன் மீது முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்களுக்கு பாதகமாகும் என அவர் அறிவார். உ.தா., கட்சி ஆரம்பித்துள்ள கமலை விட கட்சியே ஆரம்பிக்காத ரஜினியே கடுமையான விமர்சனங்களை, எதிர்ப்பை சந்தித்தார். ஏனென்றால் கமல் ஒரு பக்கம் வழவழகொழகொழ என பேசினாலும் அவர் ஆளும் தரப்புக்கு எதிராக தன்னை வைத்துக் கொள்கிறார். ஆனால் ரஜினியோ மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோபம் திரளும் போது அவர் மக்களின் மனநிலைக்கு எதிர்நிலையில் நின்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றி கொந்தளிப்பை ஏற்படுத்துவார். இதற்கே இவ்வளவு அடி விழுகிறது என்றால் தேர்தல் பிரச்சாரத்தின் போது தீரா பகையை, கோபத்தை அவர் மக்களிடம் ஏற்படுத்துவார் என அறிவார்.
தேர்தல் முடியும் போது,
 அதிகாரம், சினிமா வெற்றி, செல்வாக்கு = 0
 கூட்டிக் கழித்துப் பார்த்தால், கட்சி ஆரம்பிக்காமல் இருப்பதே லாபம் எனும் முடிவுக்கு ரஜினி வந்திருக்க வேண்டும். இதற்குப் பதிலாக, இனி ரஜினியால் மோடி, ஷா, ஸ்டாலின் என அனைத்து தரப்புக்கும் ஜால்ரா போட்டு இமயமலை உச்சியில் தவம் புரிய முடியும். கதம் கதம், சுபம் சுபம்.

ரஜினி காலங்காலமாக அவரது பணம், சினிமா வெற்றி ஆகியவற்றை காவு கொடுக்க தயங்கியே அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறவர். இன்னும் அவருக்கு மார்க்கெட் சில வருடங்களாவது உள்ளது. ஆகையால் தோற்கக் கூடிய குதிரையில் பந்தயம் வைத்து அவர் அரசியல் கட்சி தொடங்கி அடுத்தடுத்த படங்களை இழக்கத் துணிய மாட்டார். கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபடும் முன்பே ஓய்வெடுப்பதே ரஜினிக்கு நல்லது. அந்த தனிப்பெரும் சாதனை இறுதி வரை அவருக்குரியதாகவே இறுதிவரை இருக்கட்டும்.

கிட்னி பத்திரம்!


 

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டார், அரசியலில் இருந்து ஓய்வெடுப்பதாய் என முடிவெடுத்திருப்பதாக இப்போது செய்தி வந்திருக்கிறது. இது உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக (சிறுநீரக சிகிச்சை) என சொல்லப்பட்டாலும் அது முழுக்க உண்மையல்ல.


ரஜினி இனி அரசியலுக்கு வருவது அவருக்கு நடைமுறையில் நல்லதல்ல என நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் தன்னால் கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைக்க முடியாவிடினும் மூன்றாவது அணியாக ஒரு அதிகார மையமாகத் தோன்றலாம் என அவர் நம்பியிருக்கலாம். ஆனால் வரக் கூடிய தேர்தலில் அதிமுக மட்டுமல்ல பாஜகவும் இங்கு பெருத்த தோல்வியை சந்திக்கும் என தகவல் போனதும் அவர் சுதாரித்திருப்பார். ஆனாலும் பாஜக, குருமூர்த்தியின் அழுத்தம் அவரை உடனடியாய் முடியாது என சொல்ல முடியாத அளவுக்கு தத்தளிக்க வைத்திருக்கும்.

கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்தால் அரசியல்ரீதியாக அவர் பெறப்போகும் மக்கள் கோபமும், அடுத்த ஆளும் கட்சியினரின் வெறுப்பும் தன் மீது முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்களுக்கு பாதகமாகும் என அவர் அறிவார். உ.தா., கட்சி ஆரம்பித்துள்ள கமலை விட கட்சியே ஆரம்பிக்காத ரஜினியே கடுமையான விமர்சனங்களை, எதிர்ப்பை சந்தித்தார். ஏனென்றால் கமல் ஒரு பக்கம் வழவழகொழகொழ என பேசினாலும் அவர் ஆளும் தரப்புக்கு எதிராக தன்னை வைத்துக் கொள்கிறார். ஆனால் ரஜினியோ மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோபம் திரளும் போது அவர் மக்களின் மனநிலைக்கு எதிர்நிலையில் நின்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றி கொந்தளிப்பை ஏற்படுத்துவார். இதற்கே இவ்வளவு அடி விழுகிறது என்றால் தேர்தல் பிரச்சாரத்தின் போது தீரா பகையை, கோபத்தை அவர் மக்களிடம் ஏற்படுத்துவார் என அறிவார்.

தேர்தல் முடியும் போது,

 அதிகாரம், சினிமா வெற்றி, செல்வாக்கு = 0

 கூட்டிக் கழித்துப் பார்த்தால், கட்சி ஆரம்பிக்காமல் இருப்பதே லாபம் எனும் முடிவுக்கு ரஜினி வந்திருக்க வேண்டும். இதற்குப் பதிலாக, இனி ரஜினியால் மோடி, ஷா, ஸ்டாலின் என அனைத்து தரப்புக்கும் ஜால்ரா போட்டு இமயமலை உச்சியில் தவம் புரிய முடியும். கதம் கதம், சுபம் சுபம்.


ரஜினி காலங்காலமாக அவரது பணம், சினிமா வெற்றி ஆகியவற்றை காவு கொடுக்க தயங்கியே அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறவர். இன்னும் அவருக்கு மார்க்கெட் சில வருடங்களாவது உள்ளது. ஆகையால் தோற்கக் கூடிய குதிரையில் பந்தயம் வைத்து அவர் அரசியல் கட்சி தொடங்கி அடுத்தடுத்த படங்களை இழக்கத் துணிய மாட்டார். கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபடும் முன்பே ஓய்வெடுப்பதே ரஜினிக்கு நல்லது. அந்த தனிப்பெரும் சாதனை இறுதி வரை அவருக்குரியதாகவே இறுதிவரை இருக்கட்டும்.


கிட்னி பத்திரம்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...