Skip to main content

ரஜினி எனும் டுரோஜன் குதிரை




ரஜினியின் அறிக்கையை ஊன்றிப் படித்தால் ஒரு விசயம் தெளிவாகிறது - அவர் அரசியலில் இருந்து விலகுவதாக சொல்லவில்லை, கட்சியை நிச்சயம் துவங்குவேன், ஆனால் இந்த தேர்தலுக்குள் அது நடக்காது என்கிறார். தேர்தலுக்குப் பின் துவங்குவேன் என்றும் சொல்லவில்லை. தன்னை ஒரு நிரந்தரஎதிர்கால முதல்வர்வேட்பாளராக களத்தில் வைத்திருக்க அவர் விரும்புகிறார் அல்லது பாஜக விரும்புகிறது. அதற்கான ஒரு முன்னோட்டம் தான் இந்த மாய மான் அறிக்கை - அதிலுள்ள கருத்துக்கள் எனது, ஆனால் அது எனதல்ல என ஒரு விளக்கத்தை வேறு அண்மையில் கொடுத்திருக்கிறார்.


அடுத்தடுத்த ஆண்டுகளில் தமது கூட்டணியில் அரசை அமைக்க முடியாவிடில் பாஜக அரசு ரஜினியை வைத்து ஒரு எதிர்காலக் கனவை தொடர்ந்து தக்க வைக்க விரும்பும். இந்த தேர்தலுக்கு அடுத்த தேர்தலுக்கு ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பு மீண்டும் இப்போது ரஜினியை வைத்தாடும் சதிராட்டத்தை மீண்டும் பாஜக ஆடும். அல்லது ஒருவேளை அதிமுக, மூன்றாவது அணிகள் ஓரளவுக்கு இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாகத் தோன்றினால், அவ்வப்போது ஆட்சியைக் கலைத்து ரஜினியை முதல்வராக்குவோம் என மிரட்டல் விடுப்பதற்கும் பாஜகவுக்கு ரஜினி பயன்படுவார்


அதென்ன டுரோஜன் குதிரை?


டுரோஜன் குதிரை கிரேக்க தொன்மத்தில் வருகிறது - கிரேக்கத்துக்கும் டுரோய் நகரத்துக்கும் பெரும் போர் நடக்கிறது. டுரோய் நகரக் கோட்டையை உடைக்காமல் கிரேக்கர்களால் போரில் வெல்ல முடியாது. ஆனால் மிக வலிமையான கோடைக்காவலை உடைப்பது அத்தனை சுபலமல்ல. பத்து வருடங்கள் தொடர்ந்து முற்றுகையிட்டுப் பார்த்து களைத்துப் போகிற கிரேக்கர்கள் இறுதிக்கட்ட முயற்சியாக ஒரு சூழ்ச்சியை செய்கிறார்கள் - ஒரு பிரம்மாண்டமான குதிரை சிற்பத்தை செய்து அதனுள் தம் படை வீரரக்ள் சிலரை பதுக்குகிறார்கள். அந்த குதிரை சிற்பத்தை விட்டுவிட்டு கப்பலேறி தம் ஊருக்கு திரும்புகிறார்கள். கிரேக்கர்கள் தம்மிடம் தோற்று ஓடுகிறார்கள் என இதைப் பார்த்த டுரோய் வீரர்கள் குதூகலிக்கிறார்கள். தோல்வியை ஒப்புக்கொண்டு தமக்கு பரிசாக ஒரு பிரம்மாண்டமான குதிரையை விட்டுச்சென்றிருக்கிறார்கள் என நினைத்து அதை இழுத்து கோட்டைக்குள் போகிறார்கள். இரவு முழுக்க குடி கொண்டாட்டம் விழாக்கோலம். மக்கள் போதையில் களைப்பில் உறங்கிக் கொண்டிருக்க குதிரையில் இருந்து வெளியேறும் கிரேக்க வீரர்கள் கோட்டை வாயிலை திறந்து விடுகிறார்கள். அதற்காக காத்திருக்கும் கிரேக்கப் படை உள்ளே நுழைந்து டுரோய் வீரர்களை படுகொலை செய்து டுரோய் நகரை கைப்பற்றுகிறது.


அதில் இருந்து எதிரியின் வலுவான கோட்டைக்குள் புகுவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமான சூழ்ச்சி எனும் பொருளில் இந்த டுரோஜன் குதிரை அறியப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ரஜினி தான் அந்த டுரோஜன் குதிரை. பார்க்க அழகாக, வேடிக்கையாக கூட இருக்கும். ஆளாளுக்கு இழுத்து தெருவில் விட்டு விளையாடுவார்கள். ஆனால் ஒரு நள்ளிரவில் அதனூடாக எதிரிகள் நுழைந்து தமிழக ஆட்சியை பறித்துக் கொள்வாரக்ள்.


ரஜினி இங்கு வெறும் நடிகராக இருக்கும் வரையில் பிரச்சனை இல்லை. ஆனால் எல்லாரிடமும் கைக்குலுக்கி நல்லுறவை பேணி விட்டு நள்ளிரவில் கோட்டைக்கதவை திறந்து விடுகிற துரோகியாக அவர் இருக்க வாய்ப்புள்ளவரை அவரை தொடர்ந்து எதிர்ப்பது அவசியம். நேரடியாக நடப்பு அரசியலில் ஈடுபடும் எதிர்த்தரப்பினரை நம்பலாம், நாளை அவர்கள் நம் தரப்பிலும் சேரலாம். ஆனால் ரஜினியைப் போன்றவர்கள் ஒரு கணினி வைரஸைப் போன்று பொய்வேடம் பூண்டு உள்ளிருந்து நம்மை அழிக்க வந்தவர்கள். எப்படி ஆளுநர் என்பவர் மத்திய அரசின் சார்பில் மாநில சுயாட்சிக்கு, அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஒரு சட்டபூர்வமான அச்சுறுத்தலோ, ரஜினியைப் போன்றவர்கள் பாஜக சார்பில் அதே பணியை நம் தோளில் கையிட்டு புன்னகைத்தபடி செய்கிற எட்டப்பர்கள். ரஜினிக்குத் தேவை ஒரு anti-malware program.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...