Skip to main content

தமிழரின் துக்கம் மீதான மனச்சாய்வு

தமிழர் வாழ்வில் ஏன் துக்கம் (கூடவே எளிமையும்) ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது எனக் கேட்டு கார்ல் மார்க்ஸ் ஒரு அழகிய பிராயிடிய அலசலை செய்திருக்கிறார். பொருளாதார உயர்வை, பாதுகாப்பை இழந்து விடுவோமோ எனும் அச்சமே இதன் ஆதாரப்புள்ளி என அவர் கருதுகிறார். ஆனால் இது முழுக்க உண்மையா என்றும் தெரியவில்லை.

 மகத்தான மனிதனின் வீழ்ச்சி மேற்கில் கிரேக்க நாடகங்களில் துன்பியலின் இலக்கணமாக இருந்தது, இதுவே பின்னர் மகத்தான ஒன்றின் வீழ்ச்சி (குடும்பம், அன்பு, கற்பு, நம்பிக்கை) என நவீன சனநாயக மத்திய வர்க்கத்திடம் வந்ததோ? 
இன்னொரு பக்கம் வீழ்ச்சியின், துக்கத்தின் அழகியல் அது இருமைகளை உடைக்க உதவுகிறது என்பதாகவும் இருக்கலாம் - உ.தா., கைவிட்ட காதலிக்காக கண்ணீர் வடிப்பது. இழந்த குடும்ப மேன்மை, ஆதரவு, அன்புக்காக ஏங்குவது, வெதும்புவது, அதைப் போற்றுவது. "தேவதாஸ்", " பராசக்தி", "மூன்றாம் பிறை" என ஏகப்பட்ட உதாரணங்கள் தமிழ் சினிமாவிலும் "விஷ்ணுபுரம்", " நெடுங்குருதி" போன்று நாவல்களிலும் இத்ற்கு பல உதாரணங்கள் தோன்றுகின்றன. ஆங்கில நாவல்களில் "அன்னா கரெனினா", "போரும் வாழ்வும்", Catcher in the Rye, Great Gatsby, Great Expectations, Oldman and the Sea, Farewell to Arms, Norwegian Wood, The Windup Bird Chronicle, Kafka on the Shore போன்றவை உடனடியாய் மனத்தில் எழுகின்றன. ஹெமிங்வேயின் Farewell to Arms நாவலின் முடிவில் ஹென்ரியின் கைகளில் கேதரினும் அவர்களது குழந்தையும் மடியும் காட்சி எப்போது படித்தாலும் கண்ணீரை வரவழைப்பது.
 இழப்புணர்வு, அதன் துக்கம் மகத்தான உணர்வுகள் என நினைக்கிறேன். நமது மகாபாரதம் முழுக்க இவ்வுணர்வுகளால் ஆனது தானே. துக்கத்தை எடுத்து விட்டால் மகாபாரதம் குடும்பங்கள் இடையிலான ஒரு சல்லித்தனமான தன்னலப் போட்டி மட்டுமே. துக்கம் ஏன் மகத்தானதாக இருக்கிறது என்தற்கு ஒரு நடைமுறை காரணத்தை நம்மால் சுலபத்தில் கண்டறிய முடியாது, அது இருமையைக் கடந்து சிந்திக்க நமக்கு உதவுகிறது என்பதைத் தவிர.

கார்ல் மார்க்ஸின் இந்த பார்வை மிகச்சிறப்பாகப் பொருந்துவது தமிழ் நவீன கவிதைகளுக்கு எனத் தோன்றுகிறது. இந்த கோணத்தில், தமிழ்ப் புனைவுகளில் உள்ள வெள்ளாள இலக்கிய அரசியலைப் பற்றி, அது பிராமண-வெள்ளாள மோதலாக, இழப்பின் கசப்புணர்வாக வெளிப்படுவதைப் பற்றி ராஜ் கௌதமன் எழுதிய "புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்‌ஷஸ்" எனும் ஒரு முக்கியமான படைப்பையும் குறிப்பிட வேண்டும்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...