Skip to main content

மனுஷ்யபுத்திரனின் கவிதை குறித்த உரையாடல்



இன்று மாலை சிங்கப்பூர் தங்க மீன்கள் பதிப்பகம் சார்பாக நடந்த வாசக சந்திப்பில் மனுஷ்யபுத்திரன் அருமையாகப் பேசினார் - கவிதையின் மொழி, வடிவம், கவிதையை எடிட் செய்வது, தேய்வழக்குகளை கவிதையில் புதுமையாக, படைப்பூக்கத்துடன் பயன்படுத்துவது என தீவிரமான ஒரு இலக்கிய கலந்துரையாடலாக அது அமைந்தது. முன்பு சென்னையில் இருக்கும் போது மாலைவேளைகளில் நான் அடிக்கடி மனுஷின் வீட்டுக்கு சென்று கவிதையின் வடிவம், அவர் அப்போது படித்துக்கொண்டிருக்கிற புத்தகங்கள் குறித்தெல்லாம் உக்கிரமாக விவாதிப்பேன். என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காகவும், பின்னர்இன்மைஇணைய இதழை நடத்திய போதும் அவரை பேட்டி எடுத்தேன். அதெல்லாம் நினைவுக்கு வந்தது இன்று. ஆச்சரியமாக, பெரும்பாலான கேள்விகள் முதிர்ச்சியாக, கூர்மையாக இருந்தது, மரபுக்கவிதைக்கு இன்றுள்ள இடமென்ன போன்றவற்றைத் தவிர

மனுஷ் இன்று பேசியதில் ஒரு வாக்கியம் என் நெஞ்சில் தங்கி விட்டது - ஏன் கவிதை தீவிரமான கருத்துநிலையுடன், தத்துவப் பார்வையுடன் இருக்கத் தான் வேண்டுமா எனும் கேள்விக்குகவித்துவமான நுண்ணுணர்வு கொண்ட ஒருவர் தத்துவத்துக்குள் நுழைய வேண்டும் ஆனால் மாறாக நடக்கக் கூடாதுஎன்றார். கவிதைக்கும் தத்துவத்துக்குமான இந்த நுட்பமான வேறுபாடு முக்கியம். இந்த ஆபத்தான விளையாட்டை தமிழில் சரியாக நிகழ்த்தியவர்கள் யுவனும் தேவதேவனுமே. அதற்கு முன்பாக என்றால் ஓரளவுக்கு நகுலன். அவருக்கும் முன்பான வள்ளுவரைப் போன்ற எத்தனையோ செவ்விலக்கியவாதிகள் கவிதையின் கொதிக்கும் கரண்டியைக் கொண்டு தத்துவ வாணலியில் வறுத்திருக்கிறார்கள். .தா., வள்ளுவர். மனுஷ் இதைப் பற்றி சொன்ன போது எனக்கு சட்டென இந்த குறள் நினைவுக்கு வந்தது:


 “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலைஎனும் போது மிக எளிதாகத் தெரிகிறது. ஆனால் பௌத்தத்துக்கும் அத்வைதத்துக்குமான மோதலின் பின்னணியில் பார்க்கும் போது இது மிக விரிவான ஒரு அர்த்தத் தளத்தைப் பெறுகிறது. செவிச்செல்வத்தை, கேட்டு யோசித்து அலசி உணரும் புரிதலுக்கு புத்தர் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தந்தார், அகச்செல்வம் (அது சிந்தனையை அறுத்து பிரம்மத்தை உணர்ந்து தோன்றுவது) என்பதன் இடத்தில் ஏன் வள்ளுவன் செவிச்செல்வத்தை வைத்தார் என யோசிக்கும் போது அவ்வளவு சுவாரஸ்யம் கிடைக்கிறது, மனம் விரிவடைகிறது. இதுதான் ஒரு கவிஞன் தத்துவத்துக்குள் வருவதன் பெருஞ்சிறப்பு. அப்போது நம் மொழி பொன்னை போல பொலிவடைகிறது.


கவிதை குறித்த டெக்னிக்கலான விவாதங்கள் எனக்குப் பிடித்தமானது, ஏனென்றால் சிறுகதை, நாவல் போன்ற வடிவங்களை இப்படி சுலபத்தில் அலச முடியும். மேலும் வேறெந்த வடிவையும் விட கவிதை ரொம்பவே நுட்பமானது - ஒரு சிறிய சொல், அதன் தொனி, அது அமர்ந்திருக்கும் இடம் ஒரு கவிதை வரியின் பொருளை மாற்றும், அதற்கு ஒரு தனி ஒளியைக் கொடுக்கும். கவிதை எழுதுபவனுக்கும் வாசிப்பவனுக்கும் மனத்திறப்பை தருவான் இவை. செவிச்செல்வம்!




Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...