Skip to main content

அண்ணாமலையும் ரஜினியும்: தலைவிரித்தாடும் விஷப்பாம்புகள்

ரஜினிக்கும் அண்ணாமலை ஐ.பி.எஸ்ஸுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அதில் ஒன்று இப்படி நாவில் நஞ்சைத் தடவிக் கொண்டு சாந்த சொரூபமாக முகத்தை வைத்தபடி பேசுவது. இவரைப் போன்றவர்களின் உடம்பில் இருந்து ஒரு லிட்டர் ரத்தம் எடுத்தால் அதைக் கொண்டு பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கான பூச்சி மருந்தைத் தயாரிக்கலாம்.
அவர் பேசுவதை கவனியுங்கள்:
 1) இட ஒதுக்கீட்டை நான் ஆதரிக்கிறேன். ஆனால் பாஜக இட ஒதுக்கீட்டை மறுப்பதை கண்டிக்க மாட்டேன்.
2) பாஜகவின் அடிமட்டத் தலைவர்கள் சரியில்லை. அவர்கள் சரியான கருத்தை தலைமைக்கு கொண்டு செல்லாததாலே பாஜக இப்படி தவறாக முடிவெடுக்கிறது.
3) நான் அரசியல்வாதி அல்ல, சாமான்யன். ஆகையால் அரசியல் பேச மாட்டேன்.

இப்போது என் எதிர்வினைக்கு வருகிறேன்:
1) பாஜகவின் இந்துத்துவ கொள்கை என்பதே வர்ணாசிரமம் சார்ந்தது, இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது. இதை 'சிங்கம்' அண்ணாமலை அறிய மாட்டாரா? அறிவார். ஆனால் இப்போதைக்கு அவரது ஆசான்கள் குருமூர்த்தியும் ரஜினியும் என்பதால் பாஜகவை விமர்சிக்கக் கூடாது என கவனமாக இருக்கிறார். முடிவெடுப்பது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் கும்பல், நிறைவேற்றுவது பிரதமர் ஜி. ஆனால் அண்ணாமலை மொத்த பழியையும் உள்ளூர் அடிமட்ட பாஜக தலைவர்கள் மீது போடுகிறார். இந்த மிகப்பெரிய பித்தலாட்டம் தான் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.

2) அதென்ன எதற்கெடுத்தாலும் 'நான் சாமான்யன், அரசியல் கட்சிகளை விமர்சிப்பதற்கு நான் முதலில் ஏதாவது ஒரு கட்சியில் சேர வேண்டும் அல்லது கட்சி ஆரம்பிக்க வேண்டும்' என இவர் சொல்கிறாரே என நீங்கள் யோசிக்கலாம். நாமெல்லாம் என்ன கட்சி உறுப்பினர்களா? அரசியலை விமர்சிக்கவில்லை? தமிழகமெங்கும் மூலைக்கு மூலை அரசியல் பேசுகிறார்களே மக்கள், அவர்கள் என்ன கட்சி உறுப்பினர்களா? இங்குதான் நீங்கள் ஒரு சூட்சுமத்தை கவனிக்க வேண்டும்:
நம்மைப் போல அரசியல் விமர்சனம் செய்யும் சமூகவலைதள போராளிகளை, மற்றொரு (news18) பேட்டியில், இதே அண்ணாமலை 'தலையில்லாத மக்கள் திரள்' என்கிறார். இவர்கள் எல்லாம் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள், இவர்களை காவல்துறை கட்டுப்படுத்தாதனாலே பல புரட்சிகள் வெடிக்கின்றன, கடந்த சில ஆண்டுகளில் இப்படி மக்கள் அரசுக்கு எதிராக திரண்டு போராடுவது உலகம் முழுக்க ஒரு பெரும்போக்காக மாறி உள்ளது, இது ஆபத்தானது என்கிறார். அதாவது என்னையும் உங்களையும் போன்றவர்களைப் பிடித்து ஜெயிலில் போட வேண்டும் என்கிறார். ஏனென்றால் நாமெல்லாம் 'சாமான்யர்கள்', அரசியல் விமர்சமனம் செய்யக் கூடாது, அப்படி செய்தாலும் ஆளுங்கட்சியை விமர்சிக்கக் கூடாது, அது கட்சிக்காரர்களின் வேலை மட்டுமே என்கிறார். இந்த கருத்துநிலையின் சாராம்சமே 'நான் சாமான்யன், அதனால் அரசியல் பற்றி கருத்து சொல்ல மாட்டேன்' என்பது. 
இது "பேசுவதற்கு நாங்க இருக்கோம், சூத்திரர்கள் வாயை மூடி இருங்கடா" எனும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களின் திமிர்த்தனம். அண்ணாமலையும் ரஜினியும் இந்த பார்ப்பனத் தலைமையின் ஊதுகுழல்கள்.
 தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடந்த போது, எளிய மக்கள் கொத்துக்கொத்தாய் படுகொலை செய்யப்பட்ட போது ரஜினி ஆற்றிய எதிர்வினையும் மக்கள் தெருவுக்கு வந்து போராடி சட்டம் ஒழுங்கை கெடுக்கக் கூடாது, போலிசார் சுட்டதில் தப்பில்லை என்பதாகவே இருந்தது என்பதையும் நீங்கள் கவனிக்கலாம்.
அடிப்படையில், இவர், ரஜினி, ஹெச்.ராஜா போன்றோர் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள். சிஸ்டம் சரியில்லை, அதை சரி செய்தால் பிரச்சனையே இராது, நாடு வளரும் என்று இவர்கள் சொல்வதன் பொருள் நாட்டை ஒரு போலீஸ் ஸ்டேட்டாக மாற்ற வேண்டும், பாசிஸ்டுகள் ஆண்டாலே நாம் வளர்வோம் என்பதே.
மிக மிக ஆபத்தானவர்கள் இந்த அண்ணாமலைகள்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...