Skip to main content

தூங்காதே தம்பி தூங்காதே


கொரோனா பரவலைத் தடுப்பதற்கான ஒரு வழிமுறை நோய்க்குறியைக் கண்டறிந்து, அடையாளங் கண்டவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சையளிப்பது (test, tract, isolate). ஆனால் இந்தியா போன்ற ஒரு பிரம்மாண்டமான மக்கள் தொகை கொண்ட தேசத்தில் இது சாத்தியமில்லை என்கிறார்கள். இது ஒரு பச்சைப் பொய். இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் வீடுவீடாகப் போய் வாக்காளர் அட்டைக்காக தகவல் சேகரிக்க நம்மால் முடியும்; அடுத்து தேசிய மக்கள் பதிவேட்டுக்காக அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் கொண்ட ஒரு பெரும் படையை மத்திய அரசு ஒவ்வொரு குடிமகனும் வீட்டுக்கும் அனுப்பப் போகிறது; அப்போதெல்லாம் சாத்தியமாகும் மனிதவளம் இப்போது மட்டும் இந்த அரசுக்கு இல்லை என்பது ஒப்பந்தத்தை மீறக்கூடாது எனும் அஹிம்சைக் கொள்கைக்காக சீனவீரர்களிடம் உருட்டுக்கட்டையால் அடிவாங்கி நம் ராணுவ வீரர்கள் செத்தார்கள் என்பதைப் போல இருக்கிறது.


135 கோடி பேர்களுக்கு ரத்த பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு மற்றும் பொருள் வசதி நமக்கு இல்லை என்பதை ஏற்கிறேன். ஆனால் குறைந்தபட்சம் ஜுரம் உள்ளோரை மட்டுமாவது கண்டடையலாமே. உடல் வெப்பத்தைக் கொண்டு சோதிக்கும் கருவிகளை காவலர்கள் பல இடங்களில் பயன்படுத்துவதைக் காண்கிறோம். இது ஒரு மலிவான முறை. இதைப் பயன்படுத்தி ஏன் அரசு தன் படையை வீடுவீடாக அனுப்பி கொரோனாத் தொற்று இருப்பதாய் தெரிகிறவர்களை மட்டும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கக் கூடாது?

நோய்த்தொற்று உள்ளோரில் ஒரு பாதி பேருக்கு நோய்க்குறி தெரிவதே இல்லை, தெரியாமல் நோய் வந்து மறைந்து விடும் என்கிறார்கள், சிலருக்கு நோய்க்குறி தெரிய நாளாகும். ஆனால் ஜுரம், சளி, இருமல் என முற்றிப் போன நிலையில் உள்ளோர் உடனே மருத்துவமனைக்கு செல்வதில்லை. என் ஊரில் (தக்கலையில்) ஒரு மருத்துவர் கொரோனாத் தொற்றால் கடுமையாக ஜுரம் கண்டு ஐந்து நாள் தாமதித்து பின்னர் காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லி இப்போது சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்; அவரால் ஆஸ்பத்திரி பணியாளர்கள், செவிலிகள் என பலருக்கு நோய்த்தொற்று வந்துள்ளது. வீடுவீடாக சென்று உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் ஒரு அடிப்படையான சோதனையை செய்தால் அரசு இப்போதுள்ள பயங்கர சூழலை ஓரளவு தவிர்க்கலாம். நோய்ப்பரவலின் கடுமையைக் குறைக்கலாம்

இந்த அரசுக்கு இது தெரியவில்லை என்பதை விட அக்கறையில்லை என்பதே உண்மை. இதுவே தேர்தல் சமயம் என்றால் எவ்வளவு மும்முரமாக எவ்வளவு ஆட்களை இறங்கி எவ்வளவு ஆயிரம் கோடிகளை செலவழித்து வேலை செய்வீர்கள். ஆனால் மக்கள் பேரழிவில் மாட்டிக் கொண்டு தவிக்கும் போது எல்லா அரசுகளும் திண்ணையில் படுத்து குறட்டை விடுகிறீர்கள். சென்னை வெள்ளத்தின் போது பார்த்தோம், ஒக்கிப் புயலின் போது பார்த்தோம், இப்போது இதோ ஒரு பெருந்தொற்று காலத்திலும் பார்க்கிறோம். உங்களையெல்லாம் திருத்தவே முடியாது


பெருந்தொற்றுச் சூழலுக்கு அரசு தயாராக இல்லை, அதற்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை, வலுவில்லை, தடுமாறுகிறது போன்ற வாதங்களை நம்பாதீர்கள். தூங்குவதைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ஊழல்-தேர்தல்-அதிகாரம் போன்றத் தேவைகள் மட்டுமே கும்பர்கர்ணனை எழுப்புகிறது. மற்ற சமயங்களில் குறட்டை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...