Skip to main content

ஜெயமோகனின் சிந்தனைப் பள்ளி



ஜெயமோகனுக்கு ஒரு தனித்த சிந்தனைப் பள்ளி உள்ளதாக சிலர் கருதுகிறார்கள். எனக்குத் தெரிந்து ஜெ.மோ உள்ளிட்ட எந்த படைப்பாளிகளுக்கும் அப்படி ஒரு சிந்தனைப் பள்ளி இல்லை. .தா., சு.ரா இலக்கியம் குறித்த நிறைய அபிப்ராயங்களைத் தெரிவித்தார். ஆனால் சு.ராவின் பள்ளியை சேர்ந்தவர்கள் என தமிழில் யாருமில்லை. அவருடைய ஸ்டைலை காப்பியடிக்க முயன்றவர்கள், சிலாகிக்க முயன்றவர்கள் மட்டுமே உண்டு


ஜெமோ பல விமர்சன மரபுகளை ஒட்டி எழுதுகிறார். லிபரல் ஹியூமனிசம் என்று கூட வகுக்க முடியாது. அவருக்கென்று ஒரு தனித்த இலக்கிய சிந்தனைப் பள்ளி இல்லை. அவருக்கே உரித்த உதிரிக் கருத்துக்கள், பிடிவாதங்கள் உண்டு.

ஜெயமோகனின் கருத்துக்கள் ஒரு பெரிய சந்தையில் உலவும் மனிதர்கள், அவர்களுக்கு என்று ஒற்றை முகமில்லை. அவர்கள் அந்த சந்தைக்கு சொந்தமும் இல்லை.

 போகிற போக்கில் அவற்றை school of thought என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவற்றை தத்துவ சரடில் சீராக கோர்க்க முடியாது


.தா., ஜெ.மோவின் இலக்கியப் பார்வையை நவீனத்துவம் என்றும் வகுக்க முடியாது, பின்நவீனம் என்றும் பாத்தி கட்ட முடியாது. அது சில நேரம் நியோ கிளாசிசிசம் அல்லது கற்பனாவாதம் போன்றும் இருக்கும். அவரை இந்து தேசியவாதி என நம்பி பாஜகவில் கூட சேர்க்க மாட்டார்கள். அவர்களிடத்தும் முரண்படுவார்

பெரியாரியத்தை, அயோத்திதாசர் சிந்தனைகளை, மேற்கில் தெரிதா, நீட்சே போன்றோர் உருவாக்கியதை ஒரு பள்ளி எனலாம்


ஜெ.மோவின் பள்ளியில் (அப்படி ஒன்று உள்ளதாய் கற்பனை பண்ணினாலும்) ஒரு ஆழமான தனித்துவமான சிந்தனைத் தரப்பை நூலாக எழுதியவர்கள் என யாரும் இல்லை. அவரிடம் உள்ளவர்கள் கருத்தளவில் அவருடன் முரண்படும் அதேவேளை பாணியிலும் ஸ்டைலிலும் அவரை போல செய்யும் ரசிகர்கள். Personality cult என வேண்டுமெனில் இதை சொல்லலாம்.


 ஜெயமோகனின் கருத்துக்களின் தாக்கம் என்னிடமும் உண்டு. ஆனால் அதை ஒரு போதும் ஒரு சிந்தனைப் பள்ளி எனச் சொல்ல மாட்டேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...