Skip to main content

Posts

Showing posts from June, 2020

தூங்காதே தம்பி தூங்காதே

கொரோனா பரவலைத் தடுப்பதற்கான ஒரு வழிமுறை நோய்க்குறியைக் கண்டறிந்து , அடையாளங் கண்டவர்களை தனிமைப்படுத்தி , சிகிச்சையளிப்பது (test, tract, isolate). ஆனால் இந்தியா போன்ற ஒரு பிரம்மாண்டமான மக்கள் தொகை கொண்ட தேசத்தில் இது சாத்தியமில்லை என்கிறார்கள் . இது ஒரு பச்சைப் பொய் . இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் வீடுவீடாகப் போய் வாக்காளர் அட்டைக்காக தகவல் சேகரிக்க நம்மால் முடியும் ; அடுத்து தேசிய மக்கள் பதிவேட்டுக்காக அரசு ஊழியர்கள் , தன்னார்வலர்கள் , மாணவர்கள் கொண்ட ஒரு பெரும் படையை மத்திய அரசு ஒவ்வொரு குடிமகனும் வீட்டுக்கும் அனுப்பப் போகிறது ; அப்போதெல்லாம் சாத்தியமாகும் மனிதவளம் இப்போது மட்டும் இந்த அரசுக்கு இல்லை என்பது ஒப்பந்தத்தை மீறக்கூடாது எனும் அஹிம்சைக் கொள்கைக்காக சீனவீரர்களிடம் உருட்டுக்கட்டையால் அடிவாங்கி நம் ராணுவ வீரர்கள் செத்தார்கள் என்பதைப் போல இருக்கிறது .

ஊழல் குற்றச்சாட்டுகள் ஏன் மோடி மீது ஒட்டுவதில்லை? (2)

ஓஷோ , சத்யசாய் பாபா , அமிர்தானந்த மயி துவங்கி நித்தியானதா , ஜக்கி வாசுதேவ் , ஶ்ரீஶ்ரீ வரை இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர்களாக மாறிய சாமியார்கள் , ஆனால் எந்த பக்தனும் இந்த பணம் எப்படி உங்களிடம் வந்தது , ஒரு துறவிக்கு எதற்கு இவ்வளவு சொத்து என வினவவில்லை . இவர்களுக்கு குடும்பமில்லை , இந்த சொத்து முழுக்க ஒரு ஆன்மீக அமைப்புக்கு சொந்தமானது , இந்த அமைப்பு இந்துமதத்தின் பொது சொத்து , இந்துக்களாக தாம் அனைவருக்கும் பொதுவானது , சாமியார் காலமானதும் அது இந்து மதத்துக்குத் திரும்பி விடும் என பக்தர்கள் கற்பனை பண்ணுகிறார்கள் . ஜக்கி வாசுதேவ் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து ஜெயமோகன் எழுதியிருந்த கட்டுரையிலும் இதே மனநிலையைத் தான் வெளிப்படுத்தியிருந்தார் ; பெரும்படிப்பாளரான , அறிவாளியான ஜெயமோகனாலே கார்ப்பரேட் மதத்தலைவர்களின் பெருஞ்செல்வம் தனிச்சொத்தே அன்றி சமூகத்துக்குப் பொதுவானதல்ல எனும் இந்த எளிய உண்மையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் எளிய பாமர மக்களின் கதியை கற்பனை செய்து பாருங்கள் . இந்த மேம்போக்கான மரபான பொது ...

ஊழல் குற்றச்சாட்டுகள் ஏன் மோடி மீது ஒட்டுவதில்லை? (1)

இந்தியாவின் மாபெரும் ஊழல்களைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன் . அப்போது ஒரு கேள்வி எழுந்தது - ஏன் மக்கள் எல்லா ஊழல்வாதிகளையும் ஒரே போல மதிப்பிடுவதில்லை ? 55 அங்குல விரிமார்பு கொண்ட நமது ஜியின் ஆடம்பர மோகத்தை நாம் அறிவோம் . தில்லியில் அவரது பங்களா பன்னிரெண்டு ஏக்கரில் ஐந்து பெரும் வீடுகளுடன் அமைந்துள்ளது ; ஐம்பதுக்கு மேலான தோட்டக்காரர்கள் , காரோட்டிகள் , சமையற்காரர்கள் மற்றும் எலக்டிரீஷியன்கள் அங்கு வேலை செய்கிறார்கள் ; வீட்டு செலவு மட்டுமே கோடிக்கணக்கில் ஆகிறது என சொல்கிறார்கள் . ஜி வெளிநாட்டுக்கு பறந்ததற்கு ஏர் இந்தியா நிறுவனம் போட்ட பில் மட்டுமே 443.4 கோடிகள் வருகிறது . கடந்த ஐந்து வருடங்களில் அவரது பயண செலவோ ரெண்டாயிரம் கோடிகளுக்கு மேலே வருகிறது . தன்னுடைய ( மற்றும் தன் அரசின் திட்டங்கள் குறித்த ) விளம்பரத்துக்கு 2018 வரை அவர் 4,400 கோடிகள் செலவழித்தார் .  அவர் எங்கு போக வேண்டுமென்றால் தனியார் ஜெட்டில்தான் பறக்கிறார் . அவர் அணியும் தன் பெயரை வரிவரியாய் நுணுக்கமாய் பொறித்த மோனோகிராம் ...

நாவல் எழுதும் கலை - ஒரு எளிய சுருக்கமான அறிமுகம்

நேற்றைய வெபினாரில் நான் பயன்படுத்திய குறிப்புகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். நான் பட்டியல்களில் நம்பிக்கையற்றவன், ஆனால் இந்த உரையாடலுக்கு சில எழுத்தாளர்களை பட்டியலிட அவசியமானது, மற்றபடி இதை ஒரு மதிப்பீடாக யாரும் பார்க்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்: நாவல் என்னும் எழுத்து வடிவம் ஐரோப்பாவில் அநேகமாய் பதினேழாம் நூற்றாண்டில் தோன்றுகிறது -  அச்சு ஊடகத்தின் அறிமுகம் மற்றும் வளர்ச்சியால் நாளிதழ்களின் பெருக்கத்தால் தோன்றின சிறுகதைகள் நாவலில் அபுனைவுக்கான இடம்   தனிமனித வரலாறுகள் , டைரிக்குறிப்புகள் நாவலானது தனிமனிதனின் பயணங்கள் நாவலாவது , அதன் வழி ஒரு மொழியின் இலக்கியம் , நம்பிக்கைகள் பகடி செய்யப்படுவது - 1605, 1615 இல் பிரசுரிக்கப்பட்ட டான் குவிக்ஸாட் ஒரு நல்ல உதாரணம் செர்வாண்டஸின் டான் குவிக்ஸாட் - முதல் நவீன நாவல்

ஜெயமோகனின் சிந்தனைப் பள்ளி

ஜெயமோகனுக்கு ஒரு தனித்த சிந்தனைப் பள்ளி உள்ளதாக சிலர் கருதுகிறார்கள் . எனக்குத் தெரிந்து ஜெ . மோ உள்ளிட்ட எந்த படைப்பாளிகளுக்கும் அப்படி ஒரு சிந்தனைப் பள்ளி இல்லை . உ . தா ., சு . ரா இலக்கியம் குறித்த நிறைய அபிப்ராயங்களைத் தெரிவித்தார் . ஆனால் சு . ராவின் பள்ளியை சேர்ந்தவர்கள் என தமிழில் யாருமில்லை . அவருடைய ஸ்டைலை காப்பியடிக்க முயன்றவர்கள் , சிலாகிக்க முயன்றவர்கள் மட்டுமே உண்டு . 

இரும்புத் தடிகளால் கொல்லப்படும் இந்திய ராணுவத்தினர்

கல்வான் பள்ளத்தாக்கில் சீன எல்லைப்படை வீரர்களால் தாக்கப்பட்டு இந்திய ராணுவத்தினர் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர் . இதில் வினோதம் இவர்களை துப்பாக்கிச் சூட்டில் சாகவில்லை , முட்கம்பி சுற்றப்பட்ட இரும்புத் தடிகளால் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர் என்பது . மேலும் பலர் இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க வெளியே ஓடியதில் கடும் உறைகுளிர் சீதோஷ்ணத்தால் பாதிக்கப்பட்டும் , கல்வான் நதியில் குதித்து தப்பிக்க முயல்கையில் சீன ராணுவத்தால் தாக்கப்பட்டு ( மீண்டும் இதே தடியால் தான் ) கொல்லப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன .  பாபு எனும் ஒரு கர்னலும் பலியாகியிருக்கிறார் . நூற்றுக்கு மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் இந்த தாக்குதலில் காயம்பட்டுள்ளனர் . சிலர் உயிருக்குப் போராடி வருகிறார்கள் . சீன ராணுவம் சிலரைக் கைப்பற்றிக் கொண்டு போய் கொன்றிருக்கிறார்கள் ; பேச்சுவார்த்தைப் பிற்கு சிலரை திரும்ப ஒப்படைத்திருக்கிறார்கள் .   நான் இப்போதுதான் முதன்முதலாய் ராணுவத்தினர் ஏதோ கல்லூரி மாணவர்களைப் போல கைத்தடிகளால் பரஸ்பரம் தாக்கிக் கொள்வார்கள் எ...