Skip to main content

வேலை நீக்கங்களின் பின்னுள்ள ஆபாசம்


நான் இதுபோன்ற வேலைநீக்க அநீதிகளை நேரில் சந்தித்திருக்கிறேன் என்பதாலே முதலாளி-தொழிலாளி என வரும் போது நான் தொழிலாளர்களின் பக்கமே நிற்பேன். .தா., பைலட் புரோஜெக்டுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு மேலாளரின் கீழ் ரெண்டு மூன்று புரோஜெக்டுகள் ஓடுகின்றன என்றால் அவர் தற்காலிகமாக மூன்று அணிகளை வேலைக்கு எடுப்பார். ஆனால் அவர்களிடம் வேலை தற்காலிகம் என சொல்ல மாட்டார். எதிர்பார்த்தது போல புரோஜெக்ட் அமைய வில்லை என்றால் வேலைக்கு எடுத்தவர்களை ஒருநாள் அழைத்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இப்படித்தான் நடக்கும் எனத் தெரிந்திருந்தால் அவர்கள் உருப்படியான ஏதாவது வேலைக்கு சென்றிருப்பார்கள் தானே? இதற்கும் ஜேப்படித் திருட்டுக்கும் என்ன வித்தியாசம்


என் நண்பர் ஒருவர் ஒரு வினோதமான நோக்கத்திற்காக ஒரு பத்திரிகையில் வேலைக்கு உதவி ஆசிரியராக எடுக்கப்பட்டார். அங்கு தலைமை ஆசிரியராக இருந்த பெண்மணிக்கும் பத்திரிகை நிறுவனருக்கும் பனிப்போர். இந்த பெண்மணி நிறுவனரின் மனைவியிடம் சென்று அவருக்கும் அங்கு வேலை செய்யும் சில இளம்பெண்களுக்கும் தவறான உறவு என கதையை புனைந்து விட்டார். நிறுவனருக்கு வீட்டில் செம அடி. அந்த இளம்பெண்களைகண்காணிப்பதற்காகஅந்த ஆசிரியர் வேலையில் நீடிக்க வேண்டும் என மனைவி விதித்த நிபந்தனையை நிறுவனர் ஏற்றுக்கொண்டார். ஆனால் முதலாளியோ இந்த பெண்மணிக்கு செக் வைப்பதற்காக புதிதாக ஒரு ஆளை - என் நண்பரை - உதவி ஆசிரியராக நியமித்தார். நியமிக்கும் போதே இன்னும் ஒரே மாதத்தில் நீங்களே ஆசிரியராகி விடுவீர்கள், அந்த பெண்மணியை பதவி நீக்கம் செய்துவிடுவேன் என உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். இந்த இழுபறி சில மாதங்களாக நடக்க, அவரது அகங்காரம் சீண்டப்பட, முதலாளி இந்த ஆசிரியரை வேலை நீக்கம் செய்யும் முடிவை எடுக்கிறார். இதை மோப்பம் பிடித்தறிந்த அந்த பெண்மணியோ இரவோடு இரவாக முதலாளியின் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம் சென்று பேசி கடுமையாக அழுத்தம் கொடுத்து தன் பதவியைக் காப்பாற்றி, தன்னிடத்தில் வர வேண்டியவரை வேலை நீக்கம் செய்ய வைத்து விட்டார். இப்படி குடும்ப சச்சரவின் பொருட்டு ஒருவருக்கு வேலை தரப்பட்டு அவ்வேலையும் அதே காரணத்துக்காக பிடுங்கவும் பட்டது

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...