Skip to main content

“புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனைக்கான மூன்று தீர்வுகள்” (1)


உயிர்மை இணையதளத்தில் பிரசுரமாக உள்ள “புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனைக்கான மூன்று தீர்வுகள்” கட்டுரையிலிருந்து:

“இந்த முறைசாரா புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு எனக்கு மூன்று தீர்வுகள் தோன்றுகின்றன. எந்த பாஜக தலைவரும் ஏற்க விரும்பாத தீர்வுகள்:

1) புலம்பெயர் தொழிலாளர்களுக்கு என ஒவ்வொரு மாநிலத்திலும் (எந்த கட்சியையும் சாராத) ஒரு தொழிற்சங்கம் தொழிலாளிகளைக் கொண்டு தேர்தல் நடத்தி அமைப்பது. தொழிற்சங்கத்தில் இங்கு வரும் ஒவ்வொரு தொழிலாளியும் பதிவு செய்ய வேண்டும் என சட்டமியற்றுவது.
தொழிற்சங்கம் மூலம் மாநில அரசிடம் ஆலோசித்து தொழிலாளிகளுக்கான அடிப்படை ஊதியம், வாழிட உரிமைகள், பாதுகாப்பு நெறிமுறைகள் ஆகியவற்றை தீர்மானிப்பது. அடுத்த விசயம் தான் முக்கியம்: எத்தனை தொழிலாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலான வாக்குகளை, அவர்கள் அதிகமாக உள்ள தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் அவர்கள் சார்பில் இடும் உரிமையை தொழிற்சங்கத்துக்கே அளித்தல்; இந்த வாக்குகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு எம்.எல்.ஏவை தேர்ந்தெடுத்தல் - வெளிமாநில தொழிலாளிகளுக்கு இங்கு வாக்களிக்க அனுமதிப்பது ஆபத்தானது என்பதால் இந்த தற்காலிக ஏற்பாடு உதவும். அவர்கள் விரும்பினால் சொந்த மாநிலத்துக்கும் சென்றும் கூட வாக்களிக்கலாம் என சட்டமியற்றுவது. இந்த இரட்டை வாக்களிப்பு முறை அவர்களுக்கு புலம்பெயர்ந்த மாநிலத்தில் ஒரு அதிகாரத்தை, நம்பிக்கையை அளிக்கும். அவர்களை யாரும் குப்பை போல நடத்த முடியாமல் ஆகும். அவர்களை முதலாளிகள் பன்றித்தொழுவத்தில் அடைத்து வைக்கிற நிலை ஏற்படாது.”

இதைப் பற்றி உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே! இதை ஏற்பீர்களா அல்லது மறுப்பீர்களா? இதனால் பலன்கள் ஏற்படுமா பிரச்சனை வருமா?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...