Skip to main content

கோலமாவு அரசியல்



CAA, NRCக்கு எதிராக கோலமிட்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்ட பெண்கள் ஒரு புது மாதிரியான போராளிகள் - ஹமீம் முஸ்தபா சொல்வதைப் போல அவர்கள் பண்பாட்டு மொழியை கையில் எடுத்திருக்கிறார்கள், தர்க்கரீதியான அரசியல் மொழியை அல்ல. அரசு பண்பாட்டு எதிர்ப்பரசியலையே அதிகம் கவனத்தில் கொள்ளும், அஞ்சும், அச்சுறுத்தும். ஜெயலலிதாவும் தன் ஆட்சியில் கலைஞர்கள் தன்னை எதிர்க்கும் போது கைது, தாக்குதல் என கடுமையாய் எதிர்வினையாற்றிருக்கிறார், ஆனால் அரசியல் எழுத்தாளர்களை அவர் பொருட்படுத்தியதில்லை.  

காவல்துறையினர் இக்கைதுக்கு தந்த காரணமும் சுவாரஸ்யம் - கோலமிட்டு பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவே வழக்கை புனைந்திருக்கிறார்கள். கோலம் என்பது உங்கள் வீட்டுக்கு முன்னால் சாலையில் போடப்பட்டாலும் அதற்காக அரசு இதுவரை யாரையும் கைது பண்ணியதில்லை. ஏனென்றால் கோலம் என்பது ஒரு பொருள் அல்ல, அது காயப்போட்ட வடாம் அல்ல. அதன் மீது நீங்கள் ஏறி நடக்கலாம். ஆனால் இதைப் பற்றி பேசும் போது காவல்துறை CAAக்கு எதிரான போராட்டத்துக்காக சிலர் அனுமதி கோரியதாகவும், அது மறுக்கப்பட்டதாகவும் சொல்லி உள்ளது. இந்த கோலத்தையும் போராட்டத்துக்கான விண்ணப்பத்தையும் இணைத்துப் பார்க்கையில் ஒரு பொதுவான அம்சம் நம் கண்ணில் படுகிறது - வெளி
போராட்டத்தின் போதும் கோலமிடும் போதும் நீங்கள் பொதுவெளியையே பயன்படுத்துகிறீர்கள். இந்த வெளி என்பது அரசுக்கு சொந்தமானது. கேட்க விநோதமாக இருக்கலாம், ஆனால் இது உண்மை - நகரத்தில் தனிவீடுகளில் கூட கோலமிடும் முற்றம் கதவுக்கு வெளியே தான் இருக்கிறது. அதாவது பொதுமக்கள் கால் படும் இடமே கோலமிடப்படும் இடம். ஆக அரசியல் கோலமிடுவது கிட்டத்தட்ட அரசியல் பதாகை ஒன்றை வெளியே வைப்பதற்கு இணையானது. நான் பேஸ்புக்கில் என் பக்கத்தில் எழுதும் போது பொறுத்துக் கொள்ளும் காவல்துறை காவல்துறையின் முகநூல் பக்கத்தில் அத்துறையை விமர்சித்து நான் எழுதினால் எனக்கு எதிராக கடுமையான வழக்குகளை இடும். முற்றத்தில், வாயிற்கதவுக்கு முன்னால், கோலமிடுவது, அந்த கோலத்தின் வழி, அரசுக்கு எதிராக கோஷமிடுவது நுட்பமாக பொதுவெளியில் முழங்குவதற்கு சமமானதும் தான். ஆனால் இதே கோலத்தை நீங்கள் வாயிற்கதவுக்கு உள்ளே, பொதுமக்கள் கண்ணில் படாத இடத்தில், உங்களுக்கு சொந்தமான இடத்தில், வரைந்தால் அரசால் உங்களை கைது பண்ண முடியாது. ஆனால் அது அரசியல் போராட்டமும் ஆகாது. பொதுவெளியை ஆக்கிரமிப்பதே அரசியல். உங்களை உதாசீனிப்போரின் தோளைத் தட்டி கவனத்தைக் கோருவதற்கு இணையானது அரசியல். இந்த கோல சர்ச்சை இதுவரையிலும் பொதுவெளி குறித்த நமக்கு இருந்த பிரக்ஞையை கூர்மைப்படுத்தி உள்ளது.

நாளை CAA ஒழிக என ஒரு கோஷத்தை டீஷர்ட்டில் பதித்து நீங்கள் அதை வெளியே அணிந்து சென்று அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டால் அரசு உங்களை கைது பண்ணுமா? நெற்றியில் இதே வாசகத்தை எழுதி சென்றால் உங்களை கைது பண்ணுமா? உங்கள் பைக்கில் எண் பலகைக்கு மேலே இவ்வாசகத்தை எழுதிச் சென்றால் அரசால், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறீர்கள் என, உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? நடைபாதையில் இருந்து ஒருவர் ஊதுபத்தி விற்கும் போதும் அவர் பொதுவெளியைத் தான் ஆக்கிரமிக்கிறார். அரசு கண்டுகொள்ளாது. அவர் அதே இடத்தில் இருந்து லாபம் தரும் ஒன்றை விற்றால் காவல்துறை லஞ்சம் கேட்டு உங்களை துரத்தி அடிக்கும். அதே இடத்தில் இருந்து அரசியல் செய்தால் காவல்துறை உங்களை கைது பண்ணி மிரட்டும். பொதுவெளி மக்களுக்கானதே, ஆனால் மக்களுக்கானதும் அல்ல. அரசியல்மயமாகும் போது மட்டுமே மக்கள் இந்த வித்தியாசத்தை உணர்கிறார்கள். அவ்வகையில் இந்த கோலப் போராட்டம் கவனிக்கத்தக்கது.


 எடப்பாடியின் அரசு பாஜகவை திருப்திப்படுத்த எதையும் செய்யும் என்றாலும், சமூகவலைதளஙக்ள் வழியாக மக்கள் அதிகமாய் அரசியல்படும் இந்த சூழலில் பொதுவெளியில் நடத்தப்படும் போராட்டங்கள் புதுப்புது வடிவங்களை எடுக்கின்றன. அப்போது காவல்துறையால் முடிவதெல்லாம் மக்களை கைதுபண்ணி மிரட்டுவது தான்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...