Skip to main content

நிதியமைச்சரின் புதிய அறிவிப்பு - அரசு தன் நிலைப்பாட்டை மாற்றுகிறதா?


நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் இன்றைய அறிக்கை அரசு வரும் ஐந்தாண்டுகளில் 102 லட்சம் கோடி ரூபாயை உள்கட்டமைப்பு பணிகளுக்காக செலவழிக்கப் போவதாய் சொல்கிறது
நம்ப முடியவில்லையே! வழக்கமாக பெரும்பகுதி பணத்தை ராணுவம், தடுப்பு முகாம் எனத் தானே செலவழிப்பார்கள். இது ஒரு நல்ல திருப்பமே. இந்த முதலீடு எளிய மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை உண்டு பண்ணித் தர வேண்டும்.
 ஆனால் விபரமாய் பார்க்கும் போது சொற்பமான தொகை மட்டுமே விவசாயத்துக்குப் போவது இந்த அரசு இன்னமும் நமது பொருளாதார சீரழிவின் ஆதாரக் காரணத்தை புரிந்து கொள்ள வில்லை என்பதைக் காட்டுகிறது. விவசாயத்திற்கும் ஆரம்பநிலை தொழில்முனைவோருக்கும் இலவசமாய் மின்சாரமும் கட்டமைப்பு வசதிகளையும் பண்ணித் தர வேண்டும். கல்விக்கும் கூடுதலாய் பணம் செலவழிக்க வேண்டும்.


 ஜனங்கள் சந்தைக்குப் போய் தினமும் கார்களையும் பிரைவெட் ஜெட்களையும் வாங்கப் போவதில்லை. உற்பத்தியும் வணிகமும் மட்டுமே இந்த அரசின் அக்கறையாக இருக்கிறது; அதிலும் பெரிய தெளிவில்லை. விவசாயம் தெருவில் கிடந்து அழிவதால் தான் வெங்காய விலை வரலாறு காணாதபடி உயர்ந்திருக்கிறது. நகரங்களை மையமிட்ட திட்டங்களும் செலவுகளும் இந்திய பொருளாதாரத்துக்கு தெம்பு தராது
பரந்துபட்ட வளர்ச்சியே நமக்குத் தேவை. வெறும் மின் ஆற்றலை பெருக்கியும் சாலைகளை அமைத்தும் அது சாத்தியப்படாது (மறைமுகமாய் இவையும் விவசாயத்துக்கு உதவும் என்றாலும்). கார்ப்பரேட்டுகளின் வரியைக் குறைத்து மத்தியவர்க்கத்தின் வரியைக் கூட்டினால் அது நுகர்வை மேலும் பாதாளத்தில் தான் தள்ளும். பல பொருளாதார நிபுணர்கள் ஊடகங்களில் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் விசயஙக்ள் இவை. இப்போதைக்கு 102 லட்சம் கோடி முதலீடு பாராட்டத்தக்கது

இப்போதைக்கு மோடி-ஷா இரட்டையர்கள் போக வேண்டிய தொலைவு நெடியது (யு-டர்ன் எடுத்து மக்களை தடுப்புமுகாம்களில் தள்ளுவது, அண்டை நாடுகளில் குண்டுபொழிய்வது என மீண்டும் ஆரம்பித்தால் அத்தொலைவு கொடியது).

தற்போது நடந்து வரும் CAAக்கு எதிரான போராட்டங்களே இந்த நிலைப்பாட்டு மாற்றத்துக்கு வழிவகுத்ததா? காலம் தான் பதில் சொல்லும்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...